WORD OF GOD

WORD OF GOD

Thursday, November 6, 2014

கட்டுரை போட்டி



அன்பான உடன் விசுவாசிகளே, நமது இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் அங்கமாக உள்ள ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தவும், திருச்சபையின்  எதிர்காலத்தை குறித்து சிந்திக்க வைக்கவும் ஓர் எளிய
முயற்சியாக ஒரு கட்டுரை போட்டியை நடத்துகிறோம்.

தலைப்பு : நான் விரும்பும் இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.

இந்த தலைப்பில் 2 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பவும்.

முதல் பரிசு :               500 ரூபாய்
இரண்டாம் பரிசு:       250 ரூபாய்
மூன்றாம் பரிசு:         வேதாகமம்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் www.jesusblessings.blogspot.com என்ற இணைய தளத்திலும் எனது முகனூல் (facebook) பக்கத்திலும் பதிவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.11.2014

வேத வினா போட்டி





அன்பான சகோதர சகோதரிகளே, நமது ஊழியத்தின் சார்பாகவும் மீட்பின் பேழை பத்திரிக்கையின் சார்பாகவும் ஒரு மாபெரும் வேத வினா விடை போட்டி நடக்கவுள்ளது. முதல் பரிசு - 3000 ருபாய் , இரண்டாம் பரிசு - 2000, மூன்றாம் பரிசு - 1000, நுழைவு கட்டணம் ருபாய் 75/-

படிக்க வேண்டியது : மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்.

இடம் : மேல்பட்டி (மீட்பின் பேழை வளாகம்)
                ஆம்பூர் அருகில் வேலூர் மாவட்டம்.

நாள் : 15.11.2014

நேரம் : காலை 10 மணி.

அனைவரும் திரண்டு வந்து பங்கெடுக்கும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன்.

Thursday, October 9, 2014

உண்மை உபவாச கூடுகை - September-13

    




கிறிஸ்துவுக்குள் அன்புடையீர், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, கடந்த மாத உபவாச கூடுகையானது செப்டம்பர்.13ம் தேதி 2வது சனிக்கிழமை, உங்களது ஜெபத்தாலும், தேவ கிருபையாலும் நிறைவாக நடை பெற்றது. சிறு கூட்டமாய் கூடி வந்தாலும் வந்தவர்கள் யாவரும் கர்த்தரின் பெரிதான கட்டளையை நிறைவேற்றும் மகத்தான கூட்டமாய் உற்சாகமாய் கூடிவந்தனர்.

இந்த சிறியரில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்  என்றும் வாருங்கள் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று அவர் அழைப்பதும்  இத்திருப்பணி செய்வோரைதானே.. 

சகோதரி ஜமீலா அவர்கள் நமது காணிக்கையின் பலனை பெற்றுக் கொண்டார்கள். ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அவர் தன கணவனை இழந்து மூன்று படிக்கும் பிள்ளைகளோடு தன்  வாழ்வில் போராடி வருகிறார்கள். நமது உதவியை  பெற்றுக்கொண்டு கண்ணீரோடு கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். அருக்திரு.ஜான் பெர்னாட்ஷா அவர்களும் ஊழியரும் மீட்பின் பேழை புத்தகத்தின் ஆசிரியருமான உதயகுமார்  அவர்களும் பங்கெடுத்து சிறப்பித்தனர்.




Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews