Nambikkai
WORD OF GOD
Friday, September 19, 2014
Wednesday, September 17, 2014
ஆந்திராவில் நமது கலை வழி இறைப்பணி
நமது ஊழியம் மூலமாக கடந்த 6ம் தேதி ஆந்திராவில் உள்ள ஜங்கல் அக்ரகாரம் என்ற பகுதியில் சிறுவர் ஊழியத்திற்காக கடந்து சென்றோம். கர்த்தர் நம்மை அங்கே அற்புதமாய் வழி நடத்தினார். நம்மோடு போக்கஸ் கல்வி நிறுவனர் திரு.பாபு பிரபுதாஸ் அவர்களும் சகோதரர் .பாரத் அவர்களும் கடந்து வந்தனர். ஆந்திராவில் கர்த்தர் நம்மை வல்லமையாய் பயன்படுத்தினார். நமது இறைப்பணி குழுவின் ஊழியர்களான தம்பிகள் மூலம் கர்த்தரின் மகிமை வெளிப்பட்டதை உணர்ந்தோம். பக்கத்தில் இருந்த மலை வாழ் மக்களை சந்தித்து கல்வியில் ஊக்கப்படுத்தும் வண்ணம் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம்.
Friday, September 12, 2014
கலை வழி ஊழியம்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, கடந்த மாதத்தில் அனேக திருப்பணிகளில் இடைவிடாமல் நமது கிறிஸ்தவ கலை குழு திருப்பணியாற்றினோம், குடியாத்தம் அடுத்த அன்பு உலகம் என்ற இடத்தில் நடந்த வாலிபர் முகாமில் வாலிபர்களுக்கான கலை நிகழ்ச்சிகளை நடத்த நமது குழுவை, ஊழியரும் மீட்பின் பேழை புத்தகத்தின் ஆசிரியருமான திரு.உதயகுமார் அவர்கள் நம்மை அழைத்திருந்தார். அவருடன் அங்கே சென்று மிக சிறப்பான நிகழ்ச்சியை நடத்தினோம். வந்திருந்த வாலிபர்கள் புது ஒளி பெற்றதை உணர்ந்தோம். கர்த்தர் நம்மை அங்கே வல்லமையாய் பயன்படுத்தினார்.
அதை தொடர்ந்து ஆஸ்னாம்பட்டு என்ற கிராமத்தில் கிராம நற்செய்தியை கலை குழு மூலமாக பகிர்ந்துக் கொள்ள அழைத்தார். அங்கும் சென்று கர்த்தருடைய வார்த்தையோடு நமது வரங்களினாலே திரு வசனத்தை கூறி அறிவித்தோம். கிராம மக்கள் கலை வழி ஊழியத்தின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பை உணர்ந்துக் கொள்ள கடவுள் கிருபை செய்தார். கர்த்தர் நம்மை வல்லமையாய் பயன்படுத்தியதற்காக கர்த்தருக்கு கோடி நன்றிகள்.
அதை தொடர்ந்து ஆஸ்னாம்பட்டு என்ற கிராமத்தில் கிராம நற்செய்தியை கலை குழு மூலமாக பகிர்ந்துக் கொள்ள அழைத்தார். அங்கும் சென்று கர்த்தருடைய வார்த்தையோடு நமது வரங்களினாலே திரு வசனத்தை கூறி அறிவித்தோம். கிராம மக்கள் கலை வழி ஊழியத்தின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பை உணர்ந்துக் கொள்ள கடவுள் கிருபை செய்தார். கர்த்தர் நம்மை வல்லமையாய் பயன்படுத்தியதற்காக கர்த்தருக்கு கோடி நன்றிகள்.
உண்மை உபவாச கூடுகை
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும்.... அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். ஏசாயா.58:7
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே .....
திருவசனத்தின் அடிப்படையில் உண்மையான உபவாசத்தை கடைப்பிடிக்க நாங்கள் இணைகிறோம். இணைந்துக் கொள்ள உங்களை அழைக்கிறோம். வருகிறவர்கள் ஒருவேளை உணவுக்கான பணத்தை காணிக்கையாக கொண்டு வரவும். முடிந்தவுடன் காணிக்கை பணத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு அப்போதே உதவிகள் செய்யப்படும்.
நாள்: சனிக்கிழமை (13.09.2014 )
இடம்: போக்கஸ் கல்வி நிறுவனம் மகளிர் காவல் நிலையம் எதிரில் , ஆம்பூர்.
நேரம்: மாலை 6:30 மணி முதல் 8 மணி வரை
ஜெபம் மற்றும் துதி ஆராதனை : அருள்திரு.ஜான் பெர்னார்ட்ஷா & பாஸ்டர்.உதயகுமார்
தேவ செய்தி: அருள்திரு.Y .கில்பர்ட் ஆசீர்வாதம் .
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
ஏசாயா.25 :6 -9 உயிர்த்த கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். அன்பானவர்களே, அழாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. மனிதன் பிறக்கும்போதும...
உங்கள் இதயம் தொட்டவை
-
Dear children here after every tuesday your's day. Every Tuesday we will learn each stories in Bible. It is not only for children, but f...
-
அன்பான உடன் விசுவாசிகளே, ஒரு முன்மாதிரியான போதகர் எப்படி இருக்க வேண்டும் என வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது திருச...
-
அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்று நம் ஆசீர்வாதத்திற்கென எடுத்துக் கொண்ட தியான வசனம், யாத்திராகமம்.33 :14 . அதற்கு ...










