இம்மாதத்தின் உண்மை உபவாச கூடுகை பிப்ரவரி 14 அன்று வெகு சிறப்பாக நடை பெற்றது, நமது காணிக்கையின் பலனை சகோதரி பாரதி அவர்கள் வந்து பெற்று சென்றார்கள், சகோதரி பாரதி கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளோடு போராடி வருகிறார்கள். அதே நேரத்தில் நமது உண்மை உபவாச கூடுகை பெரிய ஆசீர்வாத கூடுகையாக அமைந்தது. காரணம் கடந்த ஜனவரி மாதம் சகோதரி உஷா ராணி என்பவர் தனது கணவரோடு வந்து பங்கெடுத்து நமது உதவியை பெற்று சென்றார்கள். ஆனால் அப்போது அவர் மிகுந்த கண்ணீரோடு நின்றார்கள் காரணம், அவர்களுக்கு கேன்சருக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைக்கு தன்னை வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ மனைக்கு செல்லும்படி தங்கள் ஊர் மருத்துவர் பரிந்துரை செய்திருப்பதையும் நம்மிடம் கூறினார்கள். அதற்கான மருத்துவ சான்றிதழை கையோடு கொண்டு வந்திருந்தார்கள், நாம் அனைவரும் ஒன்றாக அவர்களுக்காக ஜெபித்தோம், பிறகு அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு கடந்து சென்றார்கள், இம்மாத கூடுகைக்கும் வந்திருந்தார்கள், ஜெபத்திற்காக அல்ல சாட்சி சொல்லுவதற்காக. ஆம் கர்த்தர் நம் விண்ணப்பத்தை கேட்டு சகோதரியை கேன்சர் அச்சத்திலிருந்து முற்றிலும் விடுவித்தார். அவர்கள் கூறிய சாட்சியை அப்படியே உங்கள் பார்வைக்கு பதிவேற்றுகிறேன். கர்த்தர் நல்லவர். அவர் நம் மத்தியில் செயலாற்றுகிறவர்.
WORD OF GOD
Saturday, February 21, 2015
Wednesday, February 11, 2015
திரு வசன பரிசு
அன்புக்குரிய உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், நமது ஊழியத்தின் பல் வேறு வடிவங்களை நீங்கள் கண்டு வருவதற்காக, அதற்காக நீங்கள் ஜெபித்து வருவதற்காக உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நமது ஊழியத்தில் தற்போது வேதாகமங்களை பரிசாக கொடுத்து வருகிறோம். நமது ஜெபத்திற்கு உற்சாகமாக வரும் 20 இளைஞர்களுக்கு வேதாகமம் பரிசாக வழங்கினோம்,,. அதேபோல் நமது ஜெபத்தில் வந்து உதவி பெறும் எஸ்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கும் வேதாகமத்தை பரிசளித்து வருகிறோம்.
இதற்காக நமக்கு உதவி செய்து வருபவர். திரு. டேவிட் திலீப் குமார் அவர்கள் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.












இதற்காக நமக்கு உதவி செய்து வருபவர். திரு. டேவிட் திலீப் குமார் அவர்கள் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.












Thursday, January 15, 2015
உண்மை உபவாச கூடுகை - January 2015
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் யாவரையும் மீண்டும்
சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது உண்மை உபவாச கூடுகை இம்மாதமும் சிறப்பாக நடை பெற்றது.
இரண்டு குடும்பங்கள் வந்து நம்மிடம் உதவி பெற்று சென்றார்கள். சகோதரி ….ராணி அவர்கள் தனது கணவருடன்
வந்து பங்கெடுத்தார்கள் இருவரும் எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு
ஒரு குழந்தை இருக்கிறது தற்போது சகோதரி .........ராணி கேன்சர் நோய்க்கான
அறிகுறிகளும் அவர்களுக்கு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருப்பதை சொல்லி
நம்மிடம் அழுதார்கள். அவர்களுக்காக ஊக்கமாக நாம் ஜெபித்தோம், அதேபோல
சகோதரி........... கவி அவர்களும் பங்கெடுத்தார்கள் அவர்களும் எச்.ஐ.வியினால்
பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் இருவருக்கும் நமது காணிக்கையின் வழியாக உதவிகள் செய்யப்பட்டன. இதற்கு நம்மோடு இனைந்து வெளி நாட்டிலிருந்து உதவி செய்த சகோதரி டயானா டெய்சி ராணி - வசந்த் - பிரணவ் அவர்கள்
குடும்பத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெபத்தில் அனேக வாலிபர் சகோதரர்கள் பங்கெடுப்பது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது.
கர்த்தருக்கு நன்றி .
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
ஏசாயா.25 :6 -9 உயிர்த்த கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். அன்பானவர்களே, அழாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. மனிதன் பிறக்கும்போதும...
உங்கள் இதயம் தொட்டவை
-
அன்பான உடன் விசுவாசிகளே, நமது இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் அங்கமாக உள்ள ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தவும், திருச்சபையின் எதிர்க...
-
அன்பிற்கினிய உடன் விசுவாசிகளுக்கு என் இனிய, அன்பான, காலை வணக்கங்கள்.. நமதாண்டவரும், நம் ரட்சகருமான இயேசுகிறிஸ்து, தன் சீடர்களுக்கு எப்படி...
-
ஏசாயா.25 :6 -9 உயிர்த்த கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். அன்பானவர்களே, அழாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. மனிதன் பிறக்கும்போதும...









