WORD OF GOD

WORD OF GOD

Wednesday, April 4, 2012

அன்பான 10 ம் வகுப்பு மாணவர்களே..

அன்பான 10 ம் வகுப்பு மாணவர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் இன்று நீங்கள் முதல் முறையாக அரசு பொது தேர்வை சந்திக்க போகிறீர்கள். ஒருவித பதட்டம், ஒருவித பயம், ஒருவித சந்தோஷம் என‌ உங்கள் மனம் இப்போது புதுவிதமாய் இருக்கும். எதிர்பார்ப்புகள் உங்கள் கண்கள் நிறைந்திருக்கும். நான் இப்போது உங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல போவதில்லை. உங்களுக்காக ஒரு சிறிய ஜெபத்தை மட்டும் ஏறெடுக்க விரும்புகிறேன். நீங்களும் என்னோடு ஜெபியுங்களேன்...

அன்பு நிறைந்த எங்கள் நல்ல பிதாவே, அறிவின் ஊற்றாய் இருப்பவரே, பத்தாம் வகுப்பு தேர்வை சந்திக்கபோகிற என்னை (அருமையான சகோதர சகோதரிகளை) உமது கரத்தில் சமர்ப்பிக்கிறேன். என்னை (ஒவ்வொருவரையும்) உமது ஞானத்தால் நிரப்பும், நல்ல நியாபக சக்தியை தாரும், நல்ல ஆரோக்யத்தை தாரும், படிப்பதற்கு எந்தவித தடையும் ஏற்படாமல் காத்துக்கொள்ளும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிப் பெற்று, பெற்றோருக்கு பெருமை சேர்த்து நல்ல எதிர்காலத்தை உறுதி செய்துக்கொள்ள கிருபை தாரும் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமேன்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews