WORD OF GOD
Wednesday, February 24, 2021
Tuesday, September 15, 2020
Saturday, May 23, 2020
Thursday, April 30, 2020
Monday, April 20, 2020
உலகை இயக்குவது யார்
அன்பானவர்களே உலகை இயக்குவது யார் என்ற தலைப்பில் சுருக்க தியானம் கேட்டு கர்த்தரை மகிமைப்படுத்துவோம்..
Thursday, September 26, 2019
Saturday, June 15, 2019
துனபத்தின் நடுவே வெற்றி
அன்பான உடன் விசுவாசிகளுக்கு நீ...........................ண்ட நாளுக்கு பின் என் அன்பான ஸ்தோத்திரங்கள், மீண்டும் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,
தற்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் மிக கடுமையான பாதிப்புகளை உண்டாக்கி வருவதை அனைவரும் அறிவோம், உணவகங்கள் போதுமான தண்ணீர் இன்றி மூடப்பட்டுள்ளன, பல தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, வீட்டு வாடகை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது, பலர் வீடுகளை காலி செய்ய துவங்கியுள்ளனர், அனைத்து ஏரிகளும் வற்றிவிட்டது,
இப்படியொரு பஞ்ச காலத்தை இத்தலைமுறை இப்போதுதான் காணும், இதற்கு முந்தய தலைமுறைகளில் பஞ்சம் ஏற்பட்டதை வரலாறுகளில் அறிந்திருந்தாலும், இவ்வளவு வளர்ந்த நவீன காலத்தில் ஓர் பஞ்சம் என்பது இத்தலைமுறைக்கு நிச்சயம் புதிது.
ஆதியாகமம், 26 ம் அதிகாரம் 1ம் வசனத்தில், ஈசாக்கின் காலத்தில் ஒரு பஞ்சம் ஏற்படுகிறது, ஆபிரகாமின் காலத்தில் பல முறை பஞ்சம் ஏற்பட்டதுண்டு, ஆனால் ஆபிராகாம் என்ற சீமானின் மகன் ஈசாக்கின் காலத்தில் இது முதல் முறை, அதுவும் தன் தந்தையை இழந்த பின் இப்படியொரு சவாலை ஈசாக்கு சந்திக்கிறார், என்ன செய்வது? அடுத்து என்ன திட்டம் வகுப்பது என்றெல்லாம் சிந்திப்பதற்கு முன் அடுத்த வசனத்தில் கர்த்தர் வந்து நிற்கிறார்,
ஆம் கர்த்தர் நமக்கு மட்டுமல்ல நமக்கு அவர் வாக்களித்த சந்ததிக்கும் கர்த்தர். நாம் இல்லாத காலத்திலும், நம் சந்ததிகளை நமக்கு கொடுத்த வாக்கின்படியே காப்பவர், தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று வாக்களித்தவர் அல்லவா??
அந்த வாக்குதத்தங்களின்படி ஈசாக்கை சந்தித்தவர் ஈசாக்குக்கு ஒரு அதிர்ச்சியான கட்டளையை கொடுக்கிறார், அது யாதெனில், நீ எகிப்திற்கு போக கூடாது!!!! ஏன்?? எப்போது பஞ்சம் வந்தாலும் இஸ்ரவேலர் எகிப்திற்கு போவது வழக்கம், ஏனெனில், அங்கே வற்றாத ஜீவ நதியான நைல் நதி உள்ளது. ஏனவே பஞ்சம் பிழைக்க எகிப்து ஒரு சரியான இடம், ஆனால் கர்த்தர் ஈசாக்கை எகிப்துக்கு போகவிடாமல் தடுத்து, அங்கேயே இருக்க கூறுகிறார்.
கடவுள் சில நேரம் நம் துன்பத்திற்கு தீர்வை தராமல், துன்பத்தின் நடுவே வாழ சொல்லுகிறார். ஆபிரகாமின் மறு மனையாட்டியான ஆகார் கருவுற்ற போது அவளை துன்புறுத்தி சாராள் விரட்டியடித்தாள், எங்கே போவது என்று திக்கு தெரியாமல் தவித்த ஆகாரை மீண்டும் சாராளிடத்தில் போ என்று அனுப்பி வைத்தவர் கர்த்தர். ஏன் அப்படி செய்கிறார்???
துன்பத்தை கண்டு பயந்து ஓடுவதற்கு நாம் இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் அல்ல, கர்த்தருடைய பிள்ளைகள். ஆம் அதே பஞ்சம் நிறைந்த தேசத்தில் ஈசாக்கு விதை விதைத்தான் அது நூறு மடங்கு பலன் தந்தது என்று 12ம் வசனம் கூறுகிறது. துனபத்தின் நடுவே நம்மை வெற்றி பெற செய்வதே நம் சர்வ வல்லவரின் மகத்துவம்.
இந்த வெற்றியை நாம் ருசிக்க வேம்ண்டுமானால் நாம் இரண்டு ஆவிக்குரிய யுக்திகளை அரிந்துக் கொள்ள வேண்டும் என்று எபிரேயர்.6:11 கூறுகிறது அது என்னவெனில்
1. விசுவாசம்
2. நீடிய பொறுமை.
கர்த்தர் சொன்ன தேசத்தில் ஈசாக்கு விசுவாசத்தோடு விதை விதைத்தான் பொறுமையோடு விளைச்சலுக்காக காத்திருந்தான். 100 மடங்கு பலன் பெற்றான்.
கர்த்தர் சொன்னபடியே சாராளின் வீட்டில் விசுவாசத்தோடும் நீடிய பொறுமையோடும் வாழ்ந்து ஈசாக்கின் ஆசீர்வாதத்தை இஸ்மவேலுக்கும் பெற்றுக் கொண்டாள் ஆகார்.
நாம் எப்படி??? துனபம் வந்ததும் பதட்டப்பட்டு அவசரப்பட்டு கர்த்தரை மறுதலிக்கிறோமா? அல்லது விசுவாசத்தில் நிலைத்திருந்து பொறுமையோடு கர்த்தரின் நாளுக்காக காத்திருக்கிறோமா???
அனபானவர்களே, இந்த காலை எத்தனை துனபங்கள் உங்களை சூழ்ந்திருந்தாலும் அந்த துனபத்தின் நடுவேதான் கர்த்தர் உங்களை ஜெயமாக நடத்த போகிறார். ஆம் சங்கீதம் 31: 19 கூறுகிறது, அவர்கள் ஆபத்து காலத்தில் வெட்கப்பட்டு போகாதிருந்து, பஞ்ச காலத்தில் திருப்தியடைவார்கள் என்று. இந்த விசுவாசத்தோடு இந்நாளை துவங்குங்கள் இந்த நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
இப்படியொரு பஞ்ச காலத்தை இத்தலைமுறை இப்போதுதான் காணும், இதற்கு முந்தய தலைமுறைகளில் பஞ்சம் ஏற்பட்டதை வரலாறுகளில் அறிந்திருந்தாலும், இவ்வளவு வளர்ந்த நவீன காலத்தில் ஓர் பஞ்சம் என்பது இத்தலைமுறைக்கு நிச்சயம் புதிது.
ஆதியாகமம், 26 ம் அதிகாரம் 1ம் வசனத்தில், ஈசாக்கின் காலத்தில் ஒரு பஞ்சம் ஏற்படுகிறது, ஆபிரகாமின் காலத்தில் பல முறை பஞ்சம் ஏற்பட்டதுண்டு, ஆனால் ஆபிராகாம் என்ற சீமானின் மகன் ஈசாக்கின் காலத்தில் இது முதல் முறை, அதுவும் தன் தந்தையை இழந்த பின் இப்படியொரு சவாலை ஈசாக்கு சந்திக்கிறார், என்ன செய்வது? அடுத்து என்ன திட்டம் வகுப்பது என்றெல்லாம் சிந்திப்பதற்கு முன் அடுத்த வசனத்தில் கர்த்தர் வந்து நிற்கிறார்,
ஆம் கர்த்தர் நமக்கு மட்டுமல்ல நமக்கு அவர் வாக்களித்த சந்ததிக்கும் கர்த்தர். நாம் இல்லாத காலத்திலும், நம் சந்ததிகளை நமக்கு கொடுத்த வாக்கின்படியே காப்பவர், தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று வாக்களித்தவர் அல்லவா??
அந்த வாக்குதத்தங்களின்படி ஈசாக்கை சந்தித்தவர் ஈசாக்குக்கு ஒரு அதிர்ச்சியான கட்டளையை கொடுக்கிறார், அது யாதெனில், நீ எகிப்திற்கு போக கூடாது!!!! ஏன்?? எப்போது பஞ்சம் வந்தாலும் இஸ்ரவேலர் எகிப்திற்கு போவது வழக்கம், ஏனெனில், அங்கே வற்றாத ஜீவ நதியான நைல் நதி உள்ளது. ஏனவே பஞ்சம் பிழைக்க எகிப்து ஒரு சரியான இடம், ஆனால் கர்த்தர் ஈசாக்கை எகிப்துக்கு போகவிடாமல் தடுத்து, அங்கேயே இருக்க கூறுகிறார்.
கடவுள் சில நேரம் நம் துன்பத்திற்கு தீர்வை தராமல், துன்பத்தின் நடுவே வாழ சொல்லுகிறார். ஆபிரகாமின் மறு மனையாட்டியான ஆகார் கருவுற்ற போது அவளை துன்புறுத்தி சாராள் விரட்டியடித்தாள், எங்கே போவது என்று திக்கு தெரியாமல் தவித்த ஆகாரை மீண்டும் சாராளிடத்தில் போ என்று அனுப்பி வைத்தவர் கர்த்தர். ஏன் அப்படி செய்கிறார்???
துன்பத்தை கண்டு பயந்து ஓடுவதற்கு நாம் இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் அல்ல, கர்த்தருடைய பிள்ளைகள். ஆம் அதே பஞ்சம் நிறைந்த தேசத்தில் ஈசாக்கு விதை விதைத்தான் அது நூறு மடங்கு பலன் தந்தது என்று 12ம் வசனம் கூறுகிறது. துனபத்தின் நடுவே நம்மை வெற்றி பெற செய்வதே நம் சர்வ வல்லவரின் மகத்துவம்.
இந்த வெற்றியை நாம் ருசிக்க வேம்ண்டுமானால் நாம் இரண்டு ஆவிக்குரிய யுக்திகளை அரிந்துக் கொள்ள வேண்டும் என்று எபிரேயர்.6:11 கூறுகிறது அது என்னவெனில்
1. விசுவாசம்
2. நீடிய பொறுமை.
கர்த்தர் சொன்ன தேசத்தில் ஈசாக்கு விசுவாசத்தோடு விதை விதைத்தான் பொறுமையோடு விளைச்சலுக்காக காத்திருந்தான். 100 மடங்கு பலன் பெற்றான்.
கர்த்தர் சொன்னபடியே சாராளின் வீட்டில் விசுவாசத்தோடும் நீடிய பொறுமையோடும் வாழ்ந்து ஈசாக்கின் ஆசீர்வாதத்தை இஸ்மவேலுக்கும் பெற்றுக் கொண்டாள் ஆகார்.
நாம் எப்படி??? துனபம் வந்ததும் பதட்டப்பட்டு அவசரப்பட்டு கர்த்தரை மறுதலிக்கிறோமா? அல்லது விசுவாசத்தில் நிலைத்திருந்து பொறுமையோடு கர்த்தரின் நாளுக்காக காத்திருக்கிறோமா???
அனபானவர்களே, இந்த காலை எத்தனை துனபங்கள் உங்களை சூழ்ந்திருந்தாலும் அந்த துனபத்தின் நடுவேதான் கர்த்தர் உங்களை ஜெயமாக நடத்த போகிறார். ஆம் சங்கீதம் 31: 19 கூறுகிறது, அவர்கள் ஆபத்து காலத்தில் வெட்கப்பட்டு போகாதிருந்து, பஞ்ச காலத்தில் திருப்தியடைவார்கள் என்று. இந்த விசுவாசத்தோடு இந்நாளை துவங்குங்கள் இந்த நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Thursday, November 22, 2018
வாங்க வேதம் படிக்கலாம் - இளைஞர்களுக்காக
ஜாய்லின் தொலைக்காட்சியில் பகிர்ந்துக்க கொண்ட தேவ வார்த்தை , நீங்களும் கேட்டு கர்த்தரை மகிமைப்படுத்தலாமே.
உங்கள் மேலான கருத்துக்களையும், திருமறை சந்தேகங்களையும் கமெண்ட்டில் தெரிவிக்கலாமே .. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
உங்கள் மேலான கருத்துக்களையும், திருமறை சந்தேகங்களையும் கமெண்ட்டில் தெரிவிக்கலாமே .. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Thursday, September 6, 2018
அன்பான எனதருமை இணைய வழி விசுவாசிகளே உங்கள் யாவரையும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவில்லா மகிழ்ச்சி கொள்ளுகிறேன். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட தேவ வார்த்தை சகரியா.9:12
நம்பிக்கைகள் பலவகைப்படுகின்றன
அதில் முக்கியமானவை மூன்று
1. மூட நம்பிக்கை
2. தன்னம்பிக்கை
3. இறை நம்பிக்கை (விசுவாசம்)
மூட நம்பிக்கைகள் நம் நாட்டில் நிரம்பி வழிகிறது.
நம்பிக்கைகள் பலவகைப்படுகின்றன
அதில் முக்கியமானவை மூன்று
1. மூட நம்பிக்கை
2. தன்னம்பிக்கை
3. இறை நம்பிக்கை (விசுவாசம்)
மூட நம்பிக்கைகள் நம் நாட்டில் நிரம்பி வழிகிறது.
Wednesday, July 18, 2018
ஆசீர்வாத கீதங்கள்
Wednesday, January 10, 2018
கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
ஓரு வயதான போர் வீரர்… பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.
வயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது.
ஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். அவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது. தன் பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காக காத்திருப்பான். அதில் எதிராளியின் பலவீனம் அறிந்து, பலமாகத் தாக்கி எடுத்த எடுப்பில் வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி.
இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் பலர்.
இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான்.
கிராமத்தில், வயதான வீரரின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த வீரன், தன் திட்டத்தைச் சொன்னான். இதைக் கேட்ட முதிய வீரரின் மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இவனுடன் போட்டியிடுவதை வயதான வீரரும் விரும்பவில்லை. ஆனால் வருபவனுக்கும், தன் மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினார்.
இளம் வீரனின் சவாலை ஏற்பதாக அறிவித்தார்.
நகரின் நாற்சந்தியில் மோதல் களம். களத்துக்கு வந்ததும் இளம் வீரன் முதியவரின் கோபத்தைத் தூண்டிவிட மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். சிறு கற்களை வீசினான். மண்ணை வாரி இறைத்தான்.
அவரை அவமானப்படுத்தி, கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் களைத்துப் போய், தோற்றுவிட்ட மனதுடன் அந்த இளைஞன் களத்திலிருந்து வெளியேறினான்.
இளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து கொண்டனர். “என்ன இது… எப்படி இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டீர்கள்? நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே.. இப்படி அமைதியாக இருந்து எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே?,” என்றனர்.
குரு அதே அமைதியுடன் அவர்களை ஏற இறங்கப் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார்… “யாராவது உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அவர்களில் உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?”
எவ்வளவு அருமையான அணுகுமுறை.
இதே போல் தாவீது ராஜா தன் வாழ்வில் சந்தித்த அவமானங்களை சங்கீதம் 55 ல் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த அவமானங்களை ஏற்படுத்தியவர்கள் எதிரிகள் அல்ல அவருடைய நெருங்கின நண்பர்கள், ஆம் தாவீதோடே இருந்து, அவரிடத்தில் சகல நன்மைகளையும் பெற்று அவரால் வாழ்ந்து, அவரால் இந்த உலகத்தில் அடையாளப்படுத்தப்பட்ட, அவர் மிகவும் நம்பியவர்களே .
"12. என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
13. எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்."
எவ்வளவு மோசமான சூழ்நிலை!!!. நம் வாழ்விலும் சில நேரங்களில் இவை நிகழ்கிறது. நம்மால் வாழ்ந்துவிட்டு நம்மையே பழிக்கிற கூட்டம், ஆனால் நாம் பதட்டப்படுகிறோம், பயப்படுகிறோம், அல்லது கவலையில் உறைந்து போகிறோம். ஆனால் தாவீதின் அணுகுமுறை என்ன தெரியுமா? 16 ம் வசனத்தில் காணலாம்.
16. நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
காணலாம் ஆடு மேய்த்த தன்னை தெரிந்தெடுத்து அரசனாகிய அன்பு நிறைந்த அற்புதம் நிறைந்த, வல்லமை நிறைந்த, கர்த்தர் என்னை இரட்சிப்பார் தைரியமாக கூறுகிறார்.
எனவே இந்த காலை தைரியமாய் துவங்குவோம், நம்மை நிந்திப்போரை விட்டுத்தள்ளுங்கள் அவர்கள் தகுதி அவ்வளவுதான். அவர்களுக்காகவும் கர்த்தரிடம் வேண்டிக் கொண்டு நம் பணிகளை நாம் தொடருவோம் கர்த்தர் நம்மை காத்தருள்வார்.
16. நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
காணலாம் ஆடு மேய்த்த தன்னை தெரிந்தெடுத்து அரசனாகிய அன்பு நிறைந்த அற்புதம் நிறைந்த, வல்லமை நிறைந்த, கர்த்தர் என்னை இரட்சிப்பார் தைரியமாக கூறுகிறார்.
எனவே இந்த காலை தைரியமாய் துவங்குவோம், நம்மை நிந்திப்போரை விட்டுத்தள்ளுங்கள் அவர்கள் தகுதி அவ்வளவுதான். அவர்களுக்காகவும் கர்த்தரிடம் வேண்டிக் கொண்டு நம் பணிகளை நாம் தொடருவோம் கர்த்தர் நம்மை காத்தருள்வார்.
Sunday, January 7, 2018
கிறிஸ்துவின் அன்பின் பணி
அன்பான உடன் விசுவாச உறவுகளே, உங்கள் யாவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் கடந்த 6 ஆண்டுகளாக, கிறிஸ்துவின் வழி நின்று அன்பின் பணி செய்வதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர் செய்த அன்பின் பணியை நாம் நிறைவேற்றுவது மிகவும் கடினமாக இருந்தாலும், நம்மால் இயன்ற வரை செய்வது என தீர்மானித்து சில சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அவைகளை பற்றிய ஒரு தொகுப்பு.
கடந்த 2013 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி அன்று மாபெரும் இரத்ததான முகாம்களை நடத்தி வருகிறோம். அதற்கான தகவல்களை நமது இணைய தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறோம்.
அதே போல எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆல் பாதிக்க பட்டவர்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.
உண்மை உபவாச கூடுகை என்ற தலைப்பில் உபவாச கூடுகைகளை நடத்தி அதில் பெறப்படும் காணிக்கைகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை கொடுத்து வந்தோம்.
அதே போல் தொழு நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கான உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
இத்தகு கிறிஸ்துவின் அன்பின் பணிகளுக்காக புதிய தலைமுறை மற்றும் காந்தி உலக மையம் என்ற சமூக அமைப்பும் இணைந்து சமூக மாற்றத்திற்கான 100 இளைஞர்களை பல்வேறு சோதனைகளை செய்து தெரிந்தெடுத்தார்கள். அதில் என்னையும் ஒருவனாக தெரிந்தெடுத்து விருது கொடுத்தனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். இதற்காக என்னோடு ஒத்துழைப்பு நல்கிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பான நன்றிகளை ஏறெடுக்கிறேன்.
இதை பெற்ற பொது என் உள்ளத்தில் தோன்றியதெல்லாம் ஒரே ஒரு வசனம் தான்
கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் மத்தேயு. 25:21.
எனவே சமூக மாற்ற பணிகள் தொடர்ந்து நடக்க எனக்காக ஜெபியுங்கள். ஞானஸ் நானம் பெற்றவர்களெல்லாம் கிறிஸ்தவர்களல்ல கிறிஸ்துவை பின்பற்றி நடப்பவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள்.
இயேசுவே என் தலைவர். நான் அவர் தொண்டன்
Sunday, September 3, 2017
சோறு இல்லாம கூட இருந்துடுவான் ஆனா செல்போன் இல்லாம இருக்க மாட்டான் என்ற நிலை இன்று உண்டாகிவிட்டது,
செல்போன் என்பது இன்று மனிதனின் இன்னொரு விரல் என்று கூறுகிறார்கள, செல்போன் இல்லாமல் வாழவே முடியாத நிலைக்கு நாம் வந்திருக்கிறோம், இந்த செல்போன் கொடுக்கும் ஆபத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல,
இன்று நடைபெறும் பல சாலை விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது,
மேலும் இது பயன்படுத்துவோரை அதற்கு அடிமையாக்கிவிடுகிறது.
மொபைல் போன் பயன்படுத்தினால் சரியாக தூக்கம் வராதாம் ஏனென்றால், அதில் உள்ள நிறம், தூக்கத்தை கட்டுபடுத்திவிடும் எனவேதான் இரவில் நீண்ட நேரம் செல்போன் உபயோகிப்பவரை நாம் பார்க்க முடியும்.
புளூ வேல் என்ற விளையாட்டு சிறுவர்களை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி இறுதியில் தற்கொலை செய்ய தூண்டுகிறது.
ஜூலை மாதம் 17ம் தேதி, நாயக் கதிரேசன் என்ற இராணுவ வீரர், பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தி கொண்டிருப்பதை, அவருடைய உயரதிகாரியான ஷிகார் தாபா என்பவர் பார்த்து பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தவறு என்று கண்டிக்கிறார், அவ்வளவுதான், நாயக் கதிரேசன் இதனால் கடும் ஆத்திரம் உண்டாகி தன் கையில் இருந்த ஏகே-47 துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்.
செய்த குற்றத்தை கண்டிப்பது உயரதிகாரியின் பணி, அதற்கு கீழ்படிய வேண்டியது ஒரு பணியாளரின் கடமை, ஆனால் இன்று யாரும் குற்றத்தை எடுத்து சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக குற்றம் சொன்னவன எப்படி ஒழிக்கலாம்னு திட்டமிடராங்க.
எரேமியா தீர்க்கதரிசி இதை தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அனுபவித்தவர். எரேமியா தீர்க்கதரிசிக்கு கடவுள் கொடுத்த பொறுப்பு இஸ்ரவேல் மக்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்கள் மனந்திரும்ப வழி நடத்த வேண்டும். ஆனால் யாரும் மனந்திரும்பவில்லை, மாறாக, குற்றத்தை சுட்டிக்காட்டிய எரேமியாவுக்கு அடி 20:2 , உதை, அவமானம், இவைகள்தான் பரிசாக கிடைத்தது. இதை அவர் யாரிடம் சொல்ல முடியும், அவரை அழைத்து கட்டாய படுத்தி கொடுத்த கர்த்தரிடத்தில்தானே சொல்ல முடியும்,
இவ்வாறு, தான் அனுபவிக்கும் வேதனையை கர்த்தருக்கு தெரிவிக்கிற ஜெபம்தான் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதி.
எப்படி தன் ஜெபத்தை துவங்குகிறார், கர்த்தாவே நீர் இதை அறிவீர் என்று துவங்குகிறார், நாம் ஜெபம் செய்யும்போது ஆண்டவருக்கு தெரியாதுனு நினெச்சி நீண்ட நேரம் விளக்கமா சொல்லிட்டிருப்போம், இல்ல ஆண்டவருக்கு நாம் என்ன கேட்க போகிறோம் என்பது தெளிவாக தெரியும். என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னை துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீதியை சரி கட்டும் என்று துவங்குகிறார், இதற்கு அர்த்தம் என்ன, என்னை துன்பப்படுத்துகிறவர்களை தண்டியும் என்பதே. அடுத்த வசனத்தில்,
அவர் எப்படிப்பட்டவர் என்று கூறுகிறார்..
உம்முடைய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி. என்று கூறுகிறார், அதாவது, அவருடைய வார்த்தைகளை அவர் வேண்டாம் என்று சொல்லவில்லை, மாறாக இந்த வார்த்தைகளை, சொல்லும்போது துன்பப்படுத்துகிறவர்களை தண்டியும் என்பதே அவரது விண்ணப்பம்.
மேலும் அடுத்த வசனத்தில், நான் பரிகாசக்காரர் கூட்டத்தில் களித்ததில்லை, உமது கரத்தினால் தனித்து உட்கார்ந்தேன். அதாவது இவர் மிக இளம் வயதில் திருப்பணிக்கு வந்ததால், அவர் அவர் வயதுக்கு ஒத்த நண்பர்களோடு, இயல்பாக கூடி பேசி மகிழ்ந்ததில்லை என்பதை கூறுகிறார்.
கடவுளின் மீது சில குறைகள்.
1. சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
2. நித்திய ஆறாத காயம்
3. கானல் நீர் - கடவுள்
4. வற்றிப்போகிற தண்ணீர் - கடவுள்
19-21 கடவுளுன் பதில்,
நீ திரும்பினால், சீர்படுத்துவேன்.
அப்படியானால், எரேமியா கடவுளிடம் திரும்பவில்லையா? சீர் கெட்டு போயிருக்கிறாரா?? ஆம் இதை புரிந்துக் கொள்ள, இன்றைய சுவிசேஷ பகுதியை விளங்க வேண்டும்.
மத்தேயு. 16:21-28
தன் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவிக்கிறார். - பேதுரு அவரை தனியே அழைத்து அவனை கண்டிக்கிறார், உடனே இயேசு பேதுருவை, எனக்கு பின்னாக போ சாத்தானே, என்று பேதுருவை சாத்தான் என்று கடிந்துக் கொண்டார்.. ஏன்???
கடவுளுக்கு ஏற்றவைகளை அவன் சிந்திக்கவில்லை. அதாவது இயேசு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறானே, ஆனால் அவர் நன்றாக இருந்தால், நாம் மீட்படைய முடியாதே, அவர் கொடுத்த பொறுப்பை எத்தனை சவால் இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது அவரது கடமை.
அதேதான் எரேமியாவுக்கும், கடவுள் கொடுத்த பணியை
Monday, July 31, 2017
நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்?????
யோவான் 5ம் அதிகாரம் 1 முதல் 9 வரையுள்ள வசனங்களில், இயேசு
கிறிஸ்து எருசலேமுக்கு சென்றார். அங்கே ஒரு குளம் இருந்தது, அந்த குளத்திற்கு பெதஸ்தா
குளம் என்று பெயர். இந்த குளத்திற்கென்று ஒரு சிறப்பு இருந்தது. அந்த சிறப்பு யாதெனில்,
திடீரென்று ஒரு தேவதூதன் தோன்றி அந்த குளத்தை கலக்குவார். அப்போது உடல் சுகவீனம் உள்ளவர்கள்
அந்த குளத்தில் இறங்கினால் அவர்கள் முற்றிலும் குணமாவார்கள். எனவே அந்த குளத்தை சுற்றி
ஆயிரக்கணக்கான நோயாளிகள் கூடியமர்ந்து தேவதூதன் குளத்தை கலக்கும் வேளைக்காக காத்திருப்பார்கள்.
அந்த குளத்தின் அருகில் ஒருவர் 38 வருடமாய் படுத்த படுக்கையாய் கிடக்கிறார், அந்த குளத்தணடைக்கு
இயேசு வருகிறார். இயேசு நேராக அந்த 38 வருட படுத்த படுக்கையாய் இருப்பவரை தேடி போகிறார்.
குளத்தின் கரையில் இருக்கிற அனைவருமே நோயாளிகள் அப்படியிருக்க இயேசு ஏன் இவரை மட்டும்
தேடி வருகிறார்??? இதற்கான விடை இயேசு துவங்கும் உரையாடலில் உள்ளது..
இயேசு அவரிடம் நீ குணமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று
கேட்டார்.. அதற்கு அவர் கூறிய மறுமொழி, ஆண்டவரே தண்ணீர் கலக்கப்படும்போது என்னை குளத்தில்
கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை.. நான் போகிறதற்கு முன்னமே வேறொருவன் எனக்கு
முந்தி இறங்கி விடுகிறான் என்றான்.. இங்கே நாம் கவனிக்க வேண்டியது இயேசு கேட்ட கேள்வி
என்ன???? உனக்கு குணாமாக விருப்பம் இருக்கிறதா என்பதே.. இதற்கு ஆம் இல்லை என்று பதிலளித்தால்
போதுமானது ஆனால் அவன் கூறிய பதில் எனக்கு யாரும் உதவவில்லை என்பதே… அப்படியானால் ஒரு
மனிதனுக்கு தான் குணமாகவில்லை என்கிற வலியைவிட தன்னை யாரும் கண்டுக் கொள்ளவில்லை என்ற
வலியே அதிகமாக இருக்கிறது..
உண்மை தானே, 38 வருடத்தில் ஏதாவது ஒரு நாள், அங்கே நாள்தோறும்
வந்து போகிற ஆயிரக் கணக்கான மக்களில் யாராவது ஒருவர் அவரிடம் போய் அவருக்கு என்ன வேண்டும்
என்று கேட்டிருந்தால் அவர் எப்போதோ குணமாகியிருப்பாரே. எனக்காக யாருமே இல்லை என்ற வலி,
வேதனையின் உச்சம்.
நாமும் கூட பல நேரங்களில் கலங்கி நிற்பது நம்மை உண்மையாய்
நேசிக்கிற ஒருவர் இல்லையே என்றுதானே. ஆனால் நாம் கவலைப்பட தேவையில்லை. யாரெல்லாம் இவ்வாறு
சமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறார்களோ அவர்களையெல்லாம் அரவனைத்து வாழ்விப்பதற்காகவே
இந்த உலகத்திற்கு வந்தவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.. வருத்தப்பட்டு பாரம்
சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று
சொன்னவர். நம்மோடு இருக்கிறார். யுக முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடு இருக்கிறார்.
உலகை நம்பியா? சுற்றத்தை நம்பியா? உறவுகளை நம்பியா? சக மனிதர்களை
நம்பியா? நம்மை ஆள்பவர்களை நம்பியா? இல்லை, இந்த அண்ட சராசரத்தை படைத்து பாதுகாத்து
பராமரித்து வருகிற சர்வவல்லவரை நம்பி வாழ்கிறோம்.. கர்த்தர் நம் பட்சத்தில் இருந்தால் நமக்கு இரோதமாய் இருப்பவன் யார்?????
துணிவுடன் துவங்குவோம் இந்த காலை பொழுதை, 38 வருடம் படுத்த
படுக்கையாய் இருந்தவனை துள்ளி குதித்து ஓட செய்தவர் நம்மை விட்டுவிடுவாரா என்ன????
Sunday, July 30, 2017
Friday, July 28, 2017
மனம் அமைதி பெற - 6
அன்பான உடன் விசுவாசிகளே 2011 ம் ஆண்டு துவங்கிய நமது ஆவிக்குரிய இணைய பக்கம் தொடர்ச்சியாக பயணிக்கவில்லை காரணம் எனது அதிகமான பணிகளுக்கு நடுவே தொடர்ந்து பதிவிடுவது பெரிய சவாலாக இருந்தது. மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு மனம் அமைதி பெற என்ற நமது ஆவிக்குரிய வழியில் மனோ தத்துவ யுக்திகளை ஆராயும் பகுதியை மீண்டும் பதிவிட விழைகிறேன். இதை குறித்து அறிந்துக் கொள்ள கடந்த 5 பகுதிகளை நம் பக்கத்தில் கண்டு, படித்துவிட்டு தொடரலாம்.
இப்பகுதியை நான் துவங்கியதின் நோக்கம் நம்மை சுற்றியிருக்கும் நெருக்கமான சூழ் நிலைக்கு நடுவே நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காகவே. கடந்த 5 பகுதிகளில் நாம் கண்டவைகளின் ஒரு சுருக்கம்.
இப்பகுதியை நான் துவங்கியதின் நோக்கம் நம்மை சுற்றியிருக்கும் நெருக்கமான சூழ் நிலைக்கு நடுவே நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காகவே. கடந்த 5 பகுதிகளில் நாம் கண்டவைகளின் ஒரு சுருக்கம்.
முதலாவது நாம் கண்டது நம் பலமென்ன ?? பலவீனமென்ன என்று அறிந்து ஒப்புக் கொள்ள வேண்டும்
இரண்டாவது அடுத்தவர்களுக்கு பலமும் பலவீனமும் உண்டு. என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது அடுத்தவரது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துக் கொள்ள அவரை கவனிக்க வேண்டும், அதாவது நாம் பேசுவதை குறைத்து அடுத்தவர் பேச இடமளித்து அவரது வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நான்காவது கவனிப்பது எவ்வளவு சிரமமானது என்பதை அறிந்தோம்.
இப்போது கவனிப்பதில் இருக்கிற வகைகளை அறிந்துக் கொள்வோம்.
ஒருவர் பேசும்போது நாம் கவனிப்பதை பல வகைகளாக பிரிக்கலாம், அவைகளில் முக்கியமான மூன்று வகைகளை நாம் அறிந்துக் கொள்வது போதுமானது.
1. PASSIVE LISTENING - மேலோட்டமாக கவனித்தல்
2.SELECTIVE LISTENING - தேர்ந்தெடுத்து கவனித்தல்
3.ATTENTIVE LISTENING - கூர்ந்து கவனித்தல்.
மேலோட்டமாக கவனித்தல் என்பது ..
இந்த மேலோட்டமாக கவனிப்பவர்களை தான் நம் வாழ்வில் நாம் அதிகமாக பார்க்கிறோம், தான் பேச வேண்டிய கருத்தை பேசுவதில் அதிக கவனம் செலுத்துவார்களே தவிர அடுத்தவர் பேசுவதை துளியும் கவனிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களோடு நாம் தொடர்ந்து பேசுவதை விரும்ப மாட்டோம், அங்கே உறவே முறியும். இப்படி அடுத்தவர்கள் பேசுவதை துளியும் கவனிக்காமல் தான் மட்டுமே பேசுகிறவர்களை தான் நாம் பிளேடு அல்லது அறுவை என்று கூறுகிறோம்,
ஆனால் கடவுள் நம் விண்ணப்பங்களை எப்படி கேட்கிறார் என்று பாருங்கள்.
சங்கீதம்.116: 1. கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.2. அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
நம்முடைய கடவுள் நாம் கூப்பிட்டால் செவியை சாய்த்து கேட்கிறவர். நாம் எப்படி கேட்கிறோம்??
தொடரும்....
Saturday, December 3, 2016
ஆரவாரமாய் கொண்டாடுவோம்
டிசமபர் 1ல் பாபனபல்லி போதகவட்டத்தில் பகிர்ந்துக் கொண்ட
கடவுளுடைய வார்த்தை:
திருவசனம் ; 2 கொரிந்தியர்.4:9
பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதிப்பதில்லை, ஆனால்
இந்த ஆண்டு நடைப்பெற்ற, மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், மாரியப்பன் என்ற
தமிழர் தங்கம் வென்று இந்தியாவையே பெருமையடைய வைத்தார். உடனே நமது முதல்வர் அவருக்கு
இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார். ஒட்டு மொத்த ஊடகத்துறையும் அவர் வீட்டு வாசலில்
நின்றது. மாரியப்பனின் தாயார் ஆனந்த கண்ணீரோடு கூறியது, “என் மகனுக்கு 5 வயதாய் இருக்கும்போது
ஒரு விபத்தில் அவன் கால் பாதிக்கப்பட்டது, அவனுடைய அப்பாவும் ஒரு சில ஆண்டுகளில் எங்களை
விட்டு போய்விட்டார், என்னால் குடும்பத்தை நடத்த முடியாமல் பெரிதும் கஷ்டப்பட்டேன்,
எனவே மகனை அழைத்து இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றேன், அப்போது அவன் வேண்டாம்மா,
சனி ஞாயிறுகளில் நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன், என்று கூறி என்னை தேற்றினான்,
இன்று சாதித்து விட்டான்” என்றார்கள்.
எந்த ஒரு சாதனையாளரும், சங்கடங்களையும், துன்பங்களையும்,
பெரிய சோதனைகளையும் சந்திக்காமல் சாதனையாளர்களாய் உருவானதில்லை. வேதத்தில் இதற்கு சிறந்த
எடுத்துக்காட்டுகளில் ஒருவர் எலியா தீர்க்கதரிசி,
மரணத்தை காணாமல் நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள்
இரண்டு பேர் ஒருவர் ஏனோக்கு, இன்னொருவர் எலியா தீர்க்கன், அக்கினி இரதம் வந்து அவரை
அழைத்துக் கொண்டு போனது. அது மட்டுமா சிலுவை பாடுகளை அடையும் முன் இயேசு கிறிஸ்து மறுரூப
மலையில் தன் தற்சொரூபத்தை வெளிப்படுத்தியபோது அவருக்கு அருகில் நின்ற இருவரில் ஒருவர்
எலியா. எவ்வளவு சிறப்பான தீர்க்கன், புகழின்
உச்சத்தில் நிற்கும் தீர்க்கன்,
1ராஜாக்கள்.19:4ல் “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்
கொள்ளும், தான் சாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்”
வாழ்வை வெறுத்து, தன் போராட்டங்களால் நலிவடைந்து, யாரும்
தன்னோடு இணைந்து போராடாததையும், யாரும் தன்னை ஆதரிக்காததையும் எண்ணி, மன உளைச்சாலாலும்,
மன அழுத்தத்தாலும் இந்த வேண்டுதலை முன் வைக்கிறார். இதை 19ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.
ஆனால் கடவுளோ, ஒரு தேவ தூதனை அனுப்பி, அவரை எழுப்பி, அவனுக்கு
உணவை கொடுத்து, மீண்டும் அவன் பயணத்தை துவக்கி வைத்தார், ஆம் நாம் எப்போதெல்லாம் வஞ்சிக்கப்பட்டு,
துன்பப்பட்டு தனிமையில் நிற்கிறோமோ, அப்போதெல்லாம், சர்வ வல்லவர் நம் பக்கத்தில் நிற்கிறார்,
அதைதான் பவுல், 2கொரிந்தியர். 4ம் அதிகாரம் 9 ம் வசனத்தில் நாங்கள் துன்பப்படுத்தப்பட்டும்,
கை விடப்படுகிறதில்லை என்று கூறுகிறார், ஆம் யார் நம்மை கை விட்டாலும் நம்மை சேர்த்துக்
கொள்ளும் சர்வவல்லவர் நம்மோடு இருக்கிறார். பவுல் இதை அறிவுரையாக கூறவில்லை, அது அவருடைய
வாழ்வின் அனுபவம், பசியில், குளிரில், வெயிலில், நிர்வாணத்தில் பல முறை தாம் இருந்ததை
வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் கை விடாத அன்பு நேசரின் பரம அன்பை ருசித்து
அறிந்தவர் எனவேதான் உணர்ந்து கூறுகிறார் நாங்கள் துன்பப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை.
அதுமட்டுமா? நாங்கள் கீழே தள்ளப்பட்டும் மடிந்துப்
போகிறதில்லை என்கிறார்,
நாமாக விழுவதும் உண்டு சில நேரம் நம்மை சில துரோகிகள் தள்ளிவிடுவதும்
உண்டு, ஆனால் அவர்கள் நினப்பது மட்டும் நடக்காது, நாம் முடிந்துவிட மாட்டோம், முடங்கிவிட
மாட்டோம், வீறு கொண்டு எழுந்து நிற்போம், அதைதான் சங்கீதம் 20 கூறுகிறது அவர்கள் முறிந்து
விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம் என்று. அற்ப பணத்தையும், அழிந்து
போகிற இந்த உலகத்தின் வசதி வாய்ப்புகளையும், ஒன்றுக்கும் உதவாத இந்த உலகத்தின் அதிகாரங்களையும்
நம்புகிறவர்களே தைரியமாய் நிற்கும்போது, நாமோ, நமக்காக உயிரை கொடுத்து மீட்டெடுத்த
நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள் நமக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்???
எனவே கலங்க வேண்டாம், கடந்த 11 மாதங்கள் நாம் சந்தித்த பெலவீனங்கள்,
தடைகள், துன்பங்கள் அனைத்தையும் உடைத்து, 12ம் மாதத்தில் நம்மை கம்பீரமாய் ஆலயத்தில்
வந்து அமர்ந்து நன்றி சொல்ல வைத்தவர் 12ம் மாதத்திலும் நம்மோடே இருக்கிறார். இம்மாதம்
கொஞ்சம் சிரமம்தான், புத்தாடை, அலங்காரம், தினந்தோறும் வரும் பஜனைக்கு காணிக்கை, பிரியானி
எல்லாம் தேவை, அதுமட்டுமா பணம் இருந்தும் எடுக்க முடியாத பணத்தட்டுப்பாடு, என துன்பங்கள்
வரிசை கட்டினாலும், நம்மை கைவிடாதாவர் நம்மோடு மட்டுமல்ல, திரு விருந்தின் வழியாக நமக்குள்ளேயே
இருக்கிறார். தைரியமாய் கிறிஸ்துமஸ் மாதத்திற்குள் அடியெடுத்து வைப்போம், ஆரவாரமாய்
கொண்டாடுவோம், அனைத்தையும் நம் சர்வ வல்லவர் பார்த்துக்கொள்வார். ஆமேன்.
Monday, October 31, 2016
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
1500 ஆண்டுகளுக்கு
முன்பு, போப்பும் அவர்தம் அதிகார வர்க்கமும், செல்வத்திலும், அதிகாரத்திலும்
நீடித்து தழைக்க, பெரும் பொருள் ஈட்ட மக்களை சுரண்டினர்.
ரோமை புனித நகரமாக்கியதே
வியாபார தந்திரம் தான், அங்கிருக்கும் புனித பொருட்களை கண்டால் இரட்சிப்பு வரும் என
புது கதை கட்டினர், மரியாளின் முடி, சிலுவையில் பயன்படுத்தப்பட்ட ஆணி, புனிதர்களின்
உடைகள் போன்றவற்றை கண்டால் இரட்சிப்பு என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். அதுவும்,
அந்த பொருட்களெல்லாம் உண்மையானவை என்பதற்கு ஆதாரம் இல்லை,
பிலாத்துவின் படிக்கட்டுகள்
என சொல்லப்பட்ட 18 படிகளில் ஏறினால் ஒரு படிக்கு 9 ஆண்டு பாவங்கள் மன்னிக்கப்படும்
என்று அடுத்த கதை கட்டினர், இதையெல்லாம் நிறைவேற்ற மக்கள் புனித நகருக்கு படையெடுத்தார்கள்
அவர்கள் பணத்தை புனித நகரம் பதம் பார்க்கும். ஆம் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கடவுள் பெயரில்
அடுத்தவன் பணத்தை பறித்து சுக போக வாழ்வு வாழ்பவர்களின் சாபம் என்னவென்றால் அந்த பணம்
அவர்களுக்கு நிறைவை தருவதில்லை, மேலும் மேலும் பறிக்க வேண்டும் என்கிற மோசமான பைத்தியங்களாக
மாறிவிடுவர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன, அப்படித்தான் சுகபோக போப்புவும், அவரது
வழி வந்த ஆன்மீக திருடர்களும் மேலும் மக்கள் பணத்தை சுரண்ட ஒரு அருமையான திட்டத்தை
தீட்டினர். அதுதான் ஒருவனை குற்ற உணர்வுக்கு தள்ளி அவன் பணத்தை பறிக்கும் பாவ மண்ணிப்பு
சீட்டு வியாபாரம்.
சாமி வரம் தந்தாலும்
பூசாரி கொடுப்பதில்லை என்ற தமிழ் பழ மொழியின் நிகரற்ற உதாரணம். அவர் தன் திரு இரத்தம்
சிந்தி தன் உயிரை விலையாக கொடுத்து சம்பாதித்த மீட்பை விசுவாசிப்போருக்கு இலவசமாக கொடுக்க,
இந்த பண பேய்கள் அதற்கு விலை நிர்ணயித்தார்கள். பாடுப்பட்டு உழைப்பவனின் பணத்தை பிடுங்கி
பகட்டு வாழ்க்கை வாழ்ந்தனர். மனசாட்சியும் இல்லை, கடவுள் பயமும் இல்லை பிசாசு என்பதன்
மொத்த வடிவமே இப்படிப்பட்டவர்கள்தான்.
மக்கள் முட்டாள்களல்ல,
தன்னிகரற்ற ஆன்மீக தலைவர் போப்பையும், தாங்கள் பெரிதாய் மதிக்கும் தங்கள் ஆன்மீக வழி
காட்டிகளான தங்கள் போதகர்கள் சொல்வதையும் அப்படியே திரு வசனமாக ஏற்றுக் கொண்டனர். காரணம்
அவர்களிடம் திருமறை இல்லை, அக்காலத்தில் தான் ஒரு சாதாரண பெலவீனமான போதகர் மார்டீன்
லுத்தர் திரு வசனத்தை கையில் வைத்துக் கொண்டு உரக்க கத்தினார், விசுவாசத்தால் நீதிமான்
பிழைப்பான் என்று. காரணம் அவர் ஒரு விவாச சிங்கம். இந்த பெலவீனனை விசுவாச பெலவானாக
மாற்றியதில் பிலிப் மெலாங்க்தன் எனும் பேராசிரியர் பெரும் பங்கு வகித்தார்.
மக்கள் திரு வசனத்தை
படித்தனர் உண்மையை உணர்ந்தனர், ஆன்மீக திருப்பயணத்தை சரியாக அமைத்துக் கொண்டனர், மக்கள்
பணத்தை பிடுங்கி பிழைக்கும் கூட்டத்திற்கு முடிவு கட்டினர்.
ஆனால் இன்று????
திரு வசனம் கையில் தான் இருக்கிறது, தாய் மொழியில் தான் இருக்கிறது.
ஆனாலும் கள்ள உபதேசங்கள்
பெருகியிருக்கிறது, சில தனிப்பட்ட போதகர்கள் பிதாவின் ஏஜென்டுகளாகியிருக்கிறார்கள்,
தசம பாகம் கொடுக்காதவர்கள் தனி திருச்சபைகளில் பாவிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்,
கன்வென்ஷனுக்கு இலட்சங்கள் கேட்கிறார்கள், மக்கள் பணத்தை வாங்கி அதில் கூட்டங்கள் நடத்தி
மக்களையே பாவிகள் என்று மேலும் மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அன்னிய பாஷை பேசாதவன்
பரலோகம் போகமாட்டான் என்று வேதத்தில் இல்லாததை சொல்லுகிறார்கள், பல ஊழியரகள் பணம் சம்பாதிக்கும்
வழியாக ஊழியத்தை பயன்படுத்தி வருகிறார்கள், கார், கோட், மிகப்பெரிய அரங்குகளில் பிரசங்கம்
செய்வதுதான் ஊழியனின் அடையாளமாக மாறிப் போயிருக்கிறது,
மெயின்லைன் சபைகளில்,
கடவுள் பெயரால் மக்கள் பணம் சூறையாடப்படுகிறது, அதிகார போதையில் தள்ளுதலும் விலக்குதலும்
சுக போகமாய் நடக்கிறது, அநியாயங்கள் நியாயமாகிறது, சர்வாதிகாரம் தலை தூக்குகிறது, கிறிஸதவ
ஒழுங்குகள் காற்றில் பறக்கிறது, எதிர்ப்பு குரல்கள் சதி திட்டங்களாலும், மிரட்டல்களாலும்
ஆளுக்கு தகுந்தபடி முறியடிக்கப்படுகிறது, குரல் வளைகள் நெருக்கப்படுகிறது, பணம் - பதவி
மட்டும்தான் கிறிஸ்தவத்தின் மையமாகியிருக்கிறது, திருச்சபைகள் இரண்டாகி நிற்கிறது,
நிறுவனங்கள் பாழாய் கிடக்கிறது, கிறிஸதவ மன்னிப்பு விலை பேசப்படுகிறது, ஏன் யாரும்
திரு வசனத்தின் பக்கம் துணிந்து நிற்கவில்லை?? பணம் வேண்டும் பதவி வேண்டும், வேலை வேண்டும்,
ப்ராஜெக்ட் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும், என்னென்னவோ வேண்டும்???
விசுவாசத்தால்
நீதிமான் பிழைப்பான்
“முட்டாள்களின்
கூக்குரல்”
மன்னித்து விடுங்கள்
இந்த முட்டாள், லுத்தரன் உபதேசம் தெரியாதவன் இப்படித்தான் உளரிக் கொண்டிருப்பேன், புத்திசாலிகள்
பிழைத்துக் கொள்ளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
ஏசாயா.25 :6 -9 உயிர்த்த கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். அன்பானவர்களே, அழாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. மனிதன் பிறக்கும்போதும...
உங்கள் இதயம் தொட்டவை
-
நமதாண்டவராகிய இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஸ்தோத்திரம். 1பேதுரு.2 :௨௧ இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்த...
-
அன்பான உடன் விசுவாசிகளே, ஒரு முன்மாதிரியான போதகர் எப்படி இருக்க வேண்டும் என வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது திருச...
-
அன்பான தள நண்பர்களே உடன் விசுவாசிகளே, ஸ்தோத்திரங்கள். ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போதும் இந்த நாள் ஆசீர்வாதமான நாளாக இருக்க வேண்டும் என்கி...









