அன்புள்ள சகோதரர்களே காலை வணக்கங்கள் ஏசாயா.43 :5 ன் வழியாக கடவுள் கூறுகிறார் பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.
ஒவ்வொரு காலையை துவங்குவதும் பெரிய சவாலாக உள்ளது காரணம், போட்டி பொறாமை நிறைந்த உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மை நிலை நிறுத்திக்கொள்ள தினந்தோறும் போராட வேண்டியுள்ளது, உதவி செய்யவோ துக்கிவிடவோ ஆள் இல்லாமல் தவிக்கிறோம், உண்மையான அன்புள்ள நண்பர்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறோம்.
எந்த நாள் எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். நன்மைகளையும் நல்லவர்களையும் தேடி தேடி அலுத்து போன வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் இந்த காலை வேளையில் கடவுள் நம்மோடு பேசுகிற வார்த்தை நான் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே என்பதே. இந்த முழு உலகையும் படைத்த நம் கடவுள் இன்று நமக்கு துணையாக இருக்கிறார். பயப்படாதே என்று தைரியமுட்டுகிறார்.
இந்த நாளில் நம்முடைய அத்துணை நிகழ்வுகளிலும் அவர் நம்மோடு இருந்து நம்மை பாதுகாக்க போகிறார். அந்த முழு நிறைவோடு இந்த நாளை நாம் துவங்க கடவுள் நம்மை ஆசிர்வதிப்பாராக ஆமென்.
WORD OF GOD
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
ஏசாயா.25 :6 -9 உயிர்த்த கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். அன்பானவர்களே, அழாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. மனிதன் பிறக்கும்போதும...
உங்கள் இதயம் தொட்டவை
-
சங்கீதம்.91:7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது அன்பானவர்களே, உ...
-
எபிரேயர்.12:1 விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமான இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். திரிய...
-
அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவரையும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் , நான் தற்போது D.C ....
No comments:
Post a Comment