WORD OF GOD

WORD OF GOD

Thursday, April 24, 2014

செயல் வீரர்கள்..

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையினால், நாம் ஜெபத்தோடு திட்டமிட்டபடி இரத்ததான முகாமை கர்த்தர் பெரிய அளவில் ஆசீர்வதித்தார். 67 பேர் பங்கு பெற்று கிறிஸ்துவின் அன்பை செயலில் காட்டி கடவுளை மகிமைப்படுத்தினர். நேரம் தாழ்ந்து வந்த சகோதரர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன். நம் முகம் தெரியாத யாரோ ஒரு சகோதர சகோதரியின் உயிர் காக்க நம் இரத்தம் பயன்பட போகிறது. எவ்வளவு மேலான அன்பை நாம் பகிர்ந்துக் கொண்டோம்?? இந்த உண்மையான அன்பில் நம் திருச்சபைகள் வளர நாம் ஜெபிப்போம். பணத்தேவைகளை கர்த்தர் அற்புதமாய் சந்தித்தார்.


அதே போல பல் சிகிச்சை முகாமிலும் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று பயன் பெற்றனர்.


கர்த்தர் உயிர்த்தெழுந்த திருநாளன்று எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளோடு ஒரு அன்பின் விருந்தை பகிர்ந்துக் கொண்டோம். அதன் முழு பொறுப்பையும் திரு.பாபு பிரபுதாஸ், திரு.ரஜினி, திரு.தாமஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பானதொரு விருந்தை ஆயத்தம் செய்தனர். 35 பேர் பங்கு பெற்று பயன் பெற்றனர். திருமதி.பிந்து கிளாட்சன் அவர்கள் ஆலோசனை மையம் மூலம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். அவர்களுக்கு மாதம் தோறும் சத்து உணவுகள் கொடுக்க தீர்மானித்து ஜெபிக்கிறோம். அதற்காக ஜெபியுங்கள்.

எச்.ஐ.வி யால் தன் பெற்றோரை இழந்து வாடுகிற அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை நானும், கிறிஸ்துவின் அன்பு என்ற அறக்கட்டளையும், நம்பிக்கை அறக்கட்டளையும் சேர்ந்து பொறுப்பெடுத்துக் கொண்டோம். 5 வயதான பெண் பிள்ளையின் கல்வி மற்றும் அவளது தினசரி தேவைகளை கடந்த 6 மாதங்களாக சந்தித்து வருகிறோம். அவளை ஒரு நல்ல விடுதியில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறோம். அதற்காக ஜெபியுங்கள். இப்படி அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் தேவைகள் சந்திக்கப்பட ஜெபித்து வருகிறோம் அவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.

அன்புடன்
Y. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Thursday, April 10, 2014

இரட்சணிய சிலுவை

இரட்சணிய சிலுவை


அன்பான உடன் சகோதர சகோதரிகளே, நமது ஆண்டவர் சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை பலமுறை நான் தியானித்திருக்கிறேன், ஒவ்வொரு முறை தியானிக்கும் போதும், எனக்குள் புதிய சிந்தைகளையும், புதிய ஞானத்தையும் அந்த மகத்துவ வார்த்தைகள் உருவாக்கியிருக்கின்றன. அந்த பேரனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி தனிப்பட்ட தியானத்திற்கும், ஊழியத்தில் பயன் படுத்தும் வகையிலும் அனேகருக்கு பயன்பட திட்டமிட்டு, ஜெபத்தோடு வெளியிடுகிறேன். வருகிற சனிக்கிழமை முதல் உங்கள் கரங்களில் கிடைக்கும். ஒரு புத்தகத்தின்  விலை ரூபாய். 30

ஆண்டவரின்  வார்த்தைகளை ஆழமாய் தியானிக்க இப்புத்தகம் உங்களுக்கு துணை நிற்கும்.

புத்தகம் பெற அணுக வேண்டிய முகவரி

போக்கஸ் கல்வி நிறுவனம்
 மகளிர் காவல் நிலையம் எதிரில்
ஆம்பூர்.

 தொடர்புக்கு : 9894456269

இரத்ததான முகாம் & பல் சிகிச்சை முகாம்

தலைப்பைச் சேருங்கள்

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாச உறவுகளே இம்மாதம் 18 ம் தேதி புனித வெள்ளி அன்று நமது இயேசுவின் குரல் மாத இதழ் ஊழியம் வாயிலாக ஒரு மாபெரும் ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். கடந்த ஆண்டு புனித வெள்ளி  அன்றும்  இதே போல் ஒரு மாபெரும் ரத்த தான முகாம் நடத்தினோம் அப்போது 65 பேர் பங்கு பெற்று  ரத்ததானம் செய்தனர்  இவ்வாண்டு 100 பேரை எதிர் பார்க்கிறோம். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து மருத்துவக் குழுவினர் வருகின்றனர். 



முழு உலகை காக்க இயேசு இரத்தம் சிந்திய நன்னாளில் ஒருவரை காக்கவேணும் நாமும் இரத்தம் சிந்துவோம், 

நம் இரத்தம் நம் முகம் தெரியாத ஒரு சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு உயிர் கொடுக்கப்போகிறது. இது தானே மெய்யான கிறிஸ்தவ அன்பு? 

அதே நாளில் இலவச பல் சிகிச்சை முகாமும், கல்யாணி ஸ்கேன் மற்றும் டென்டல் கிளினிக் மூலமாக நடைபெறுகிறது வாருங்கள் பயன் பெறுங்கள். 

நாள்:18.04.2014 புனித வெள்ளி 
இடம்: கன்கார்டியா மேல் நிலை பள்ளி, ஆம்பூர். 

வாருங்கள் கிறிஸ்துவின் அன்பை செயலில் 

காட்டுவோம். 

அன்புடன் 
Y. கில்பர்ட் ஆசீர்வாதம் 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews