WORD OF GOD

WORD OF GOD

Saturday, April 30, 2011

பொறுத்திருப்போம் தோழி

அன்புள்ள தோழி,


பொறுத்தார் "பூமிஆள்வார்"  என்று சொல்லுவார்கள், பொறுமைக்கு  இலக்கணமாக  பெண்களை சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் அனேக வேளைகளில் நமது பொறுமைகள் கரைந்துப்போய் விடுகின்றன - என்பதே உண்மை.

"தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கேட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்". (யோவான்.3 :16 ) என்ற வேத வாக்கின் படி பாவ மனுக்குலத்தை மீட்கும் பிதாவின் ஒப்பற்ற திட்டத்தின்படி ஆண்டவராகிய இயேசு உலகிற்கு வந்தபோது, அதற்கான ஒரு பாத்திரமாய் மரியாள் தெரிந்தெடுக்கபட்டிருந்தாள்.

அந்த காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, ஒரு கன்னிப் பெண்ணானவள் கர்ப்பம் தரிப்பது என்பது, சமூகத்தின் பார்வையில் இலேசான காரியம் அல்ல.

ஆனால் மரியாள் கடவுளின் திட்டத்திற்கு முழுமையாய் தன்னை அர்ப்பணிக்கின்றாள். வாக்குத்தத்தங்கள் நிறைவேரும்படியாய்
முழுமையாய் பொறுமையாய் காத்திருக்கின்றாள் .

தோழி, "பொறுமையாய் செய்யும் காரியம் சிதறாது" என்பார்கள். மரியாளின் பண்பட்ட வளர்ப்பில் பொறுமையாய் வளர்ந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.... ஏற்ற காலம் வரும் வரை அதாவது தனது முப்பதாவது வயது வரை காத்திருந்து பொறுமையாய் தன ஊழியத்தை ஆரம்பித்தார். ஊழியத்தின் விளைவாக இரட்சிப்பின் திட்டத்தின் நிறைவாக அவர் சிலுவையில் அறியப்பட வேண்டியது வந்தபோதும், பொறுமையாய், முழுமையாய் தன்னை அற்பணிக்கின்றார். அனைத்து அவமானங்களையும், வேதனைகளையும் பொறுமையுடன் சகித்து தீர்த்தார்.


அன்பு தோழி நாம் அனைவரும், அவருடைய பிள்ளைகளாய் அழைப்பு   பெற்றவர்கள்

வாழ்வின் எந்நிலையிலும் அவருடைய பொறுமைகளை தரித்துக்கொள்வோம், நம்முடைய பொறுமையும், சகிப்புத்தன்மையும் மற்றவர்கள் முன்பாக ஆண்டவர் நம்மீது வைத்த அன்பினை, இரக்கத்தை சுட்டிக்காட்டக்கூடியதாக அமைந்திருப்பதாக.

பாடுகளின் காலத்தை  பரிசுத்தமாய் ஆசரித்த நாம், உயிர்த்தெழுந்த உன்னதரை முழுமையாக சார்ந்திருப்போம். உபத்திரவமோ, வறுமையோ, துன்பமோ - எதுவாயினும் பொறுமையாய் அவரிலே கொடிகளாய் நிலைத்திருப்போம். ஆண்டவர் தாமே நம்மையும் தம்முடைய கிருபைகளாலும், இரக்கங்களாலும் நிறைத்து, முழுமையாய் நம்மை தமது பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தி காப்பாராக ஆமென்.

அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
 
கருத்துரையிடாமல் செல்லலாமா தோழியரே........

Friday, April 29, 2011

அதிகாரம்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, இயேசுவின் இனிதான நாமத்தில் ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை. மத்தேயு.28 :18 .

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது




அன்பானவர்களே, நம் வாழ்வில் நமக்கு  பயத்தை கொடுக்ககூடிய, நம்மை மிரட்டக்கூடிய, நம்மை முடக்கக்கூடிய சக்திகள், எவையெல்லாம் என்று யோசித்திருக்கிறீர்களா?

1 .உடல் : இந்த உடல் எப்போதெல்லாம் பலவீனமடைகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்ந்துப்போகிறோம். ஏதாவது ஒரு சரீர உபாதை இருந்துக்கொண்டே தான் இருக்கிறது, நம்மை அது அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த சரீர பலவீனத்திலிருந்து விடுதலையே இல்லையா? என்றுகூட அங்கலாய்க்கிறோம்.

2 .வேலை: வேலை இல்லாதவர்களுக்கு வேலையின்மை ஒரு பெரிய பிரச்சனை, அதனால் அவமானங்களையும், வேதனைகளையும் சந்திக்கவேண்டியுள்ளது. வேலை இருந்தால் அங்கே நம்மை தேவையில்லாமல் எதிர்ப்பவர்களோடும், நம் முன்னேற்றத்தைக் கண்டு, பயமும் கலக்கமும் கண்டு நம்மை முன்னேற விடாமல் தடுக்க நினைப்பவர்களோடும் போராடவேண்டியுள்ளது.

3 .உலகம்: நம்மை சுற்றியுள்ள உலகம், ஊழலும், வஞ்சகமும், ஆபாசங்களும், 
அசிங்கங்களும் நிறைந்து நம்மை அச்சுறுத்துகிறது. நம் பிள்ளைகளை தைரியமாய் வெளியே அனுப்பமுடியாத நிலைக்கு இன்று பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளோம். கொலை கொள்ளை ஒருபுறம், இயற்கை சேதங்கள் ஒருபுறம், நீதியற்ற தலைவர்கள் ஒருபுறம், நம்மை நிம்மதியில்லாமல் செய்துவருகின்றனர்.

4 .பிசாசு: பிசாசு ஒருபுறம், தேவையற்ற சிந்தைகளையும், சோதனைகளையும் கொண்டுவந்து நம்மை விழுங்கப் பார்க்கிறான். விசுவாச வாழ்வை பிடுங்கப் பார்க்கிறான்.

5 .உறவுகள்: நம்மை சுற்றியுள்ள உறவுகள், நண்பர்கள் யாரையும் நம்ப முடியாத அளவுக்கு வாழ்க்கை சூழல்கள் மாறிவருகிறது. நம்மை பிடுங்குகிறார்களே தவிர, நம்மை ஆதரிப்பவர்கள் இல்லாமல் தவிக்கிறோம். பெற்றோரை கைவிடுகிற மனசாட்சியில்லாத பிள்ளைகள் வாழும் காலத்தில் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.

இவையெல்லாம் அடிப்படையில் நம்மை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. விடுதலை பெற வழியில்லாமல் சிக்கி தவிக்கிறோம். ஆனால்.........


உயிரோடு எழுந்த ஆண்டவர் பரலோகத்திற்கு போவதற்கு முன், உலகை, பிசாசை, எதிரிகளை கண்டு பயத்தொடிருந்த  தன் சீடர்களை அழைத்து அவர்களுக்கு மிக அருகாமையில் சென்று கூறிய வார்த்தை, ''வானத்திலும் பூமியிலும் எனக்கு சகல அதிகாரமும்  கொடுக்கப் பட்டிருக்கிறது" என்பதே.

அப்படியானால், நம் உடல் மீது, வேலை மீது, உலகத்தின் மீது, பிசாசின் மீது, நம் உறவுகள் மீது, அவருக்கு சகல அதிகாரம் உள்ளது. இதையெல்லாம் வாழும்போதே நிரூபித்தவர் உயிரோடு எழுந்து அதை உறுதி செய்திருக்கிறார். என்வவே பயத்தோடு வாழாமல் விசுவாசத்தோடு வாழ்வோம், நாம் இயேசுவின் சேனை. நமக்காய் உயிரையும் கொடுத்தவர். நம்மை காப்பார், நம்மை நிலை நிறுத்துவார், நாம் ஜெயிப்போம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

 

Thursday, April 28, 2011

JESUS BORN IN BETHLEHEM

Hi kutties today we will learn the second lesson from the New Testament. Read and share it to your friends.

One day the king's messengr came to the town where Mary and Joseph were living. The messenger had some importent news from the king. Everyone listened very carefully. He said, "The king wants count all the people. Everyone must go back to the town where their parents and grant parents lived. Then you will all be counted.

So when they heard the messenger, they knew that they would have to go to Bethlehem, where their grant parents lived.

It was very difficult for Joseph to travel sucha a long way with a pregnant lady. But they had to obay the king's order. So they packed up things and started out to Bethlehem in Judea. Since they were poor, they did not ride on a camel or horse but on a donkey.


After some days they reached Bethlehem. Thousands of people were stringing  out to the place from all over the country. Evryone was waiting to be counted. Bethlehem was over crowded.

All houses and inns were full. Mary was very tired and wanted to rest somewhere. Joseph went about knocking door to door looking for a place to stay at night. But all said sorry. Joseph said to one innkeeper, "My wife is very tired, we want to stay for the night." He said, "I am sorry I haven't any room, but there is some space in my stable. The animals that belong to other travelers are there you amy sleep there ifyou like". Joseph and Mary found a corner away from the animals and lay down in the straw.

That night Jesus was born. He was God's Son. But He was not born in a palace or a good house. He was born in a stable with animals nearby!.

Marry wrapped Baby Jesus in the swadding clothes. But she had not a cradle for him. So Joseph said. Let us use one of the animal's feeding boxes. The feeding box was called a Manger. Joseph put some clean straw in to the manger and then Mary gently put Baby Jesus down to sleep.

Mary and Joseph looked at Baby Jesus and realized that it was a divine child. They were so happy and they knew that God had sent His Son as He had promised.

By
Your's beloved Uncle.
Rev.Gilbert Asirvatham. 

Put your comments. My email jesusblessing65@yahoo.in

Wednesday, April 27, 2011

இயேசுவின் அடிச்சுவடுகள்

நமதாண்டவராகிய இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஸ்தோத்திரம்.

1பேதுரு.2 :௨௧

 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.


இயேசுகிறிஸ்து நமக்கு என்ன மாதிரியை வைத்து போயிருக்கிறார் என்று பேதுரு நமக்கு கூறுகிறார்.

இயேசு ஆண்டவர் பாடுபடுவதற்காக, இந்த உலகில் பிறந்தார். பாடுகளை ஏற்றுக்கொண்டார். மரித்தார், உயிர்த்தார். அவருடைய அழைப்பு நமக்கும் இன்று என்ன அறைக்கூவல் விடுக்கிறதேன்றால், பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு ஆண்டவருடைய பாடுகளில் பங்காளிகளாக வேண்டும்.

கடவுளுடைய அழைப்பும் அதற்குதான் நம்மை ஏவுகிறது. கிறிஸ்தவ வாழ்வு என்பது, நாம் நினைப்பது போல சுகபோக வாழ்வு மட்டுமே நிறைந்ததல்ல அனேக நேரங்களில் துன்பங்களை துயரங்களை, பாடுகளை, அனுபவிக்க வேண்டும். சிலுவையின் வழி, பாடுகளின் வழியாகும். இயேசு ஆண்டவர் தமது  சீடர்களை பார்த்து கூறுவது, ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால், தன்னைத்தான் வெறுத்து, தன சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் பின்பற்ற வேண்டும்.

ஆகவே சிலுவையை நாம் தினமும் சுமக்க வேண்டும், யோ.12 :24 : கோதுமை மணி நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் மிகுந்த பலன் கொடுக்கும். கிறிஸ்தவ வாழ்வு என்பது மலர்கள் மீது நடப்பதல்ல, முட்கள் மீது நடப்பது. இயேசுவின் சீடர்கள் இரத்த சாட்சிகளாய்  மரித்தார்கள்.


ஆகவே நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நடந்து சென்ற அடிச்சுவடுகளை பின்பற்றி பாடுகளை ஏற்றுக்கொண்டு, சிலுவை வழி நமது வழி என்பதனை உலகிற்கு காண்பிக்கவும், சாட்சியாக வாழவும் சிலுவை சுமந்த நமது இரட்சகர் நம்மை வழிநடத்துவாராக. ஆமென்.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, April 26, 2011

இரட்சிப்பின் சரித்திரம்

அன்பான இணையதள நண்பர்களே ஸ்தோத்திரங்கள். இன்று JESUS SAVES ஊழிய நண்பர்கள் கர்த்தர் உயிர்த்தெழுந்த பண்டிகையின் வாழ்த்துக்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறார்கள். கடந்த ஞாயிற்று கிழமை அன்றே பதிவிட வேண்டியது ஆனால் என்னால் பதிவிட இயலவில்லை. இன்று இதை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

JESUS SAVES


அகிலத்தையும் அழகாய், தன் சாயலில் மனிதனையும் உருவாக்கி

ஆண்டு அனுபவி என்றார் பாரினை படைத்தவர்

இறைவனின் ஆணையை பாவ இச்சையால் மீறி பிசாசின்  வலையில் வீழ்ந்தான்

ஈனத்தன பாவம் செய்து பாரே பாவக்கடலில் உழன்றது

உள்ளத்தினாலும் உணர்வினாலும் கற்பனைகளின் கண்ணியத்தையே மாற்றினான்

ஊரே அல்ல, இந்த உலகே வீழ்ந்தது கொடிய  பாவத்தீயில்

எல்லாம் திறம்பட, சிறப்பு படைத்த பரமன் கண்ணுற்று கண்ணீர் சிந்தினார்.

ஏற்றமிகு வாழ்வை மானுடம் பெற்றிட தீட்டினார் திட்டம் திரியேக தேவன்

அய்யனே பிறந்தார் இத்தாரணியில், எல்லாம் இழந்து ஏழை மனுவாய்

ஒப்பில்லா இறைமகன் நம் பாவம் சுமந்து கோர சிலுவையில் மரணத்தை ஜெயித்தார்.



ஓங்கியது விண்ணவரின் மகிமை - வீழ்ந்தது சதிகார சாத்தானின் பெருமை.

ஒளஷதமான மீட்பை தந்தார் ஆதியில் வீழ்ந்த மானிடத்தை மீட்டார்.

பாவத்தை வெறுப்போம்: பரமனின் சிலுவை தியாகத்தை நினைப்போம்.

நானே உன் தேவன், தாய் தந்தை கணம், ஒய்வு நாள் பரிசுத்தம் உனக்கு
வேண்டும்



களவு, பொய், துன்மார்க்கம் கர்த்தர் வெறுப்பது:

காணும் அயலானில் அன்பு செய்: ஒன்றையும் இச்சியாதே-நீ நன்றாய்

களிப்புடன் வாழ கற்பனைகளை கைக்கொள்.

விசுவாசி இரட்சிக்கப்படுவாய்: உன்பாவத்தை அறிக்கையிடு மன்னிப்பு பெறுவாய்:

பரலோகில் பரனுடன்  பரிசுத்த வாழ்வு வாழ ஆயத்தமா?

மரணத்தையும் பிசாசையும் வென்று மீட்பை தந்திட அழைக்கிறார் நண்பனே

எழுந்து பிரகாசி, உன் ஒளி வந்தது, இரட்சிப்பை பெற்றாய் இலவசமாய் கூறு.

அனைவரும் இரட்சிப்படைவதே அவரின் சித்தம்.

உயிர்த்தெழுந்த நாதர் இயேசு இரட்சகரின் உன்னத நாமத்தில் வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின் நற்செய்திப் பணியில்...
பரிசுத்த மாற்கு லுத்தரன் திருச்சபையின்
இயேசு இரட்சிக்கிறார் ஊழியங்கள்
விண்ணமங்கலம்.
ஆம்பூர்.
வேலூர் மாவட்டம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, April 23, 2011

உயிர்த்தெழுவோம்

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் எனது இதயபூர்வ கர்த்தர் உயிர்த்தெழுந்த நன்னாள் வாழ்த்துக்கள்.



அன்பானவர்களே, நம் ஆண்டவர் உயிர்த்தெழாமல்   போயிருந்தால் நம் விசுவாசம் பிரயோஜனமில்லாத விசுவாசம். அவர் உயிரோடு இன்றும் வாசமாயிருக்கிறார் என்பதற்கு நாம் சாட்சிகளாய் இருக்கிறோம்.

கல்லறையில் அடக்கம் செய்து காவல் வைத்த பிறகு, ஆண்டவர் கல்லறை பிளக்க உயிரோடு எழுந்தார்.

நாம் ஜெயித்துவிட்டோம் என்று பகல் கனவு கண்ட, போலி சாமியார்களுக்கும்,  மக்களை ஏமாற்றி வஞ்சித்து வாழ்ந்த சமய மற்றும் சமூக தலைவர்களுக்கும் சாவு மணியோசையாக அந்த சப்தம் அமைந்தது.

ஐயோ நேர்மை செத்ததே, உண்மை போனதே, பொய்யும் அதிகார துஷ்ப்ரயோகமும் ஜெயித்ததே என்று கதிகலங்கிப்போன உள்ளங்களுக்கு, சந்தோஷ களிப்பின் தொனியாக கல்லறையை பிளந்து ஆண்டவர் வெளியே வந்தார்.

அன்பானவர்களே, உண்மை, நேர்மை, தூய்மை, மனிதாபிமானம், அன்பு, இவையெல்லாம் பார்த்து பார்த்து நொந்துப்போனது தான் மிச்சம். நாம் இவ்வுலகில் பிழைக்க முடியாது, அடிக்கிறவனும், அடக்குபவனும் தான், இங்கே வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?

இதோ உயிரோடு எழுந்த இயேசு, அவரை பாருங்கள், உண்மை, நேர்மை, தூய்மை, மனிதாபிமானம், அன்பு இவையெல்லாம் ஜெயித்துவிட்டது. பரலோகத்தில் அல்ல, இவ்வுலகத்தில்.

எனவே தைரியமாய் நம் வாழ்வை கிறிஸ்துவின் வழியில் வாழ்வோம், நாம் தான் இவ்வுலகில் ஜெயிக்க போகிறோம். தீமை சக்திகளின் பயத்திலிருந்து உயிர்த்தெழுவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, April 18, 2011

*பரிசு ரொம்ப பெரிசு* சிறுகதை

எப்படியும் உன்னை மாற்றிக் காட்டுகிறேன் பார்... நீ எவ்வளவு முயன்றாலும் முடியாது..... நடத்திக் காட்டுகிறேனா.... இல்லையா பார்.... பார்க்கத்தான் போகிறேன்... போடா முட்டாள் இல்லாத ஒன்றை இருக்கிறது என்கிறாய். கேப்பையில் நெய் வடிகிறதென்று நீ சொன்னால் அதை நான் நம்பிவிடுவேனா? தினமும் அவர்கள் இருவருக்கும் உரையாடல்தான் இது. செல்வராஜ் - தேவராஜ் இருவரும் மலரும் மணமும் போல, திருநெல்வேலி அல்வாவும் இனிப்பும் போல பிரிக்க முடியாத நண்பர்கள்.

ஒன்றில் மட்டும் பெருக்கல் குறியாக, எதிரும் புதிருமாக இருந்தார்கள். செல்வராஜ் இல்லை-இல்லை கடவுள் இல்லவே இல்லை என்பதில் உறுதியானவன். தேவராஜோ கடவுள் ஒருவர் உண்டு அவர்தான் இயேசுகிறிஸ்து என்பதை உறுதியாக விசுவாசிப்பவன். இந்த கொள்கையில் மட்டும் கிழக்கு மேற்காக இருந்தாலும் அவர்கள் பிசின் மாதிரி ஒட்டிக் கொண்டிருக்க காரணம் இருந்தது. எப்படியும் மாற்றிவிடலாம் என்று ஒருவருக்கொருவர் எண்ணியதால்தான்.

செல்வராஜ் வீடு அன்று அமர்க்களப்பட்டது. வாசலை பச்சைப்பந்தல் அடைத்திருந்தது. முகப்பில் வாழை மரங்கள். முகப்பிலிருந்து அந்த வீதி முழுக்க மாவிலை தோரணங்கள். அனைத்திலும் சீரியல் பல்புகள் கண்சிமிட்டின.ஒலிநாடா வழியாக திரைப்பட பாடல்கள் அலறியது.

இரண்டு மாலைகளை மாற்றிக்கொண்டும், இரண்டு மோதிரங்களை மாற்றிக்கொண்டும் செல்வராஜ் - செல்வி திருமணம் இனிதே முடிந்தது. தேவராஜும் திருமணத்தில் இருந்தான். வாழ்த்தினான், பரிசளித்தான்-நண்பனல்லவா?

அப்பாடா, என்று மாலையை கழட்டி ஆணியில் அறைந்தான் செல்வா, செல்வியும்தான் இருவர் பார்வையும் அறையில் குவிக்கப்பட்ட பரிசுப் பொருள்கள் மீது பாய்ந்தது. செல்வி எனக்கு வந்த பரிசு பொருட்களை பார்த்தாயா? வா ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கலாம் என்றான். பூம் பூம் மாடுமாதிரி செல்வி தலையாட்டினாள்.

தங்க மோதிரங்கள், சிறிய பெரிய கடிகாரங்கள், பால்குக்கர்கள், சாசருடன்
கப்புகள், பாத்திரங்கள், சில்வரிலும், பித்தளையிலுமான குடங்கள்.
அண்டாக்கள் இருவருக்கும் கையே வலித்தது. அதோ அது என்ன? பெரிய
பார்சலாய் இருக்கே. இருவரும் ஆவலாய் பிரித்தார்கள். பிரிக்க பிரிக்க வளர்ந்துக் கொண்டே போனது. ஒரு வழியாக பிரித்து முடித்தார்கள். உள்ளே...... பரிசுத்த வேதாகமம் என்று கொட்டை எழுத்துக்கள். அன்பளிப்பு தேவராஜ். கோபமானான் செல்வா.

புத்தகத்தை தூக்கி எறிந்தான். பத்தடி தொலைவில் விழுந்த வேதம், வேகமான மின்விசிறியின் சுழற்சியால் பக்கங்களை சிதறவிட்டது. பின் ஒரு பக்கத்தில் நின்று அடங்கியது, அதன் பிறகு அதன் பக்கங்கள் மாறவே இல்லை, மின் விசிறியின் காற்று அதை கொஞ்சமும் அசைக்க வில்லை.

அதை கண்ட மணமக்கள் அதிசயித்து, பின் அதிர்ந்தனர். செல்வா ஓடிப்போய் எடுத்தான். அந்த பக்கத்தில் சில வாசகங்கள் அடிக்கோடு இடப்பட்டிருந்தன, அவைகளை அவள் காதில் படும்படி வாசித்தான்.

" மனைவிகளே கர்த்தருக்குள் கீழ்படிகிறது போல உங்கள் சொந்த புருஷருக்கும் கீழ்படிந்திருங்கள். அப்படியே புருஷர்களும் தங்கள் மனிவிகளை தங்கள் சொந்த சரீரங்களாக பாவித்து அவர்களில் அன்புக்கூற வேண்டும். எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூறுவது போல தன் மனைவியிடத்தில் அன்பு கூறக்கடவன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாய் இருக்கக்கடவள்".

"கடைசியாக சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்".

அவன் படிப்பதையே கவனித்த செல்வி, அவன் முகத்தை அழுத்தமாய்  ஆராய்ந்தாள்.  அந்த முகம் சாந்தம், சந்தோஷம்  ஆகியவைக்கு மாறிக்கொண்டே இருந்தது. வேதத்தின் வெளிச்சம் அதில் விளங்கியது.

எவ்வளவு நேரம் வேதத்தை படித்தான் என்பது அவனுக்கே தெரியாது. பிறகு புது மனிவியின் கரத்தை அழுத்தமாய் பற்றினான். இழுத்துக்கொண்டு வெளியே ஓடினான். வண்டியை கிளப்பினான். பாஸ்டர் சாலமன் வீட்டை அடைந்தான். இருவரும் உள்ளே ஓடினர்.

பாஸ்டரின் முன் நான்கு கால்கள் இப்போது மண்டியிட்டன. செல்வராஜ் அழுதுக்கொண்டே தனது கடந்த கால தவறுகளை பட்டியலிட்டான். பாவ மன்னிப்பு வேண்டினான். போதகரும் புன்முறுவல் பூத்திட தம்பதிகளுக்காக ஜெபித்து, தந்தை, மைந்தர், தூய ஆவியின் திருப்பெயரால் அவன் பாவங்களை மன்னித்து வாழ்த்தினார்.

பிறகு நடந்தது என்ன? ஆலய வாசம்தான். திருமுழுக்குதான், திடப்படுத்தல் தான், திருவிருந்துதான். அவன் வீடே ஜெப வீடுதான். செல்வராஜ், திரவியராஜ் ஆனதற்கும், செல்வி ஞானசெல்வியாக மாறியதற்கும் காரணம் தேவராஜ் கொடுத்த அந்தப் பரிசுதானே. ஆம் உண்மையாகவே அந்தப்பரிசு ரொம்ப பெரிசுதான்.

திரவியராஜ், தேவராஜை நன்றி பெருக்குடன் நினைத்தான். இருவர் நட்பிலும் மேலும் இறுக்கம் ஏற்பட்டதில் வியப்பென்ன இருக்க முடியும்?...

சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்
 
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, April 16, 2011

திருச்சபை தூண்களே வாங்க (கவிதை)

வா! வா!
வாடாத மலரே வா!
வளரும் குழந்தை வா!
உன் பெயர் என்ன?
நகோமியா? சலோமியா?
அன்னாளா? மின்னாளா?
உன்னுடைய பெயர்
என்னவாக இருந்தால்
எனக்கென்ன?

எதை வெகுநேரம்
இப்படி நீ தேடுகிறாய்?
வேத புத்தகத்தையா?
வேகமாய் தேடு
கடுமையாய் முயன்றேனும்
கண்டுபிடி
வாசி வாசி
தொண்டை
வற்றிப்போகும் வரை
வாசித்துக் கொண்டே  இரு

வசனப் பால் பருகி
நீ வளர்ந்திட
வேண்டும் அல்லவா?
வா! வா!
வற்றாத நதியே வா!
மலர்ந்த முகமே வா!
உன் பெயர் என்ன?
சாலமோனா? சாதராக்கா?
சார்லசா ? மோசஸா?
உன்னுடைய பெயர்
என்னவாக இருந்தால்
எனக்கென்ன?

எதை நோக்கி இப்படி
விரைவாக ஓடுகிறாய்
ஆலயத்தையா?
ஓடு ஓடு
கால்கள் கடுக்கும் வரை
ஓடிக்கொண்டே இரு
வசனப்பால் அருந்தி
நீ பலம் கொள்ள
வேண்டும் அல்லவா?

வாங்க! வாங்க! வருங்கால
திருச்சபை தூண்களே வாங்க!
தேடாத திரவியன்களே
விரைந்து வாங்க!
உங்க பெயர் என்ன?
ராபர்ட்டா? நார்பர்ட்டா?
நான்சியா? ஜான்சியா?
உங்க பெயர்
என்னவாக இருந்தால்
எனக்கென்ன?


எங்கிருந்துதான் வருகிறீங்க?
ஒ புரிகிறது
ஞாயிறு பள்ளியில்
இருந்துதானே
நன்று! நன்று!
மிக மிக நன்று!
படிங்க! நல்லா படிங்க!





 
வசனப்பாலில் வாழ்ந்திடுங்க
வளர்ந்திடுங்க வாழ்த்துக்கள்!



சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்



மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, April 15, 2011

ஆயத்தமா?

அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரங்கள். இன்றைய காலை மன்னாவில் தியானிக்க எடுத்துக் கொண்ட வசனம், லூக்கா.14 :27 .

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை பின்பற்றுகிறவர்களை பார்த்து சொன்ன கட்டளை தான் இந்த வசனம். அவரை பின்பற்றுகிறவர்கள், தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரை பின்பற்ற வேண்டும் என்று கட்டளையாகவே கூறுகிறார், சிலுவையை சுமக்க மனமில்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார்.



நம் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் சீடர்களாய் வாழ வேண்டும் என்பதுதான் விருப்பம், அவருடைய சீடர்களாக நாம் இருக்க வேண்டும் என்றால் அவர் கொடுக்கிற கட்டளை சிலுவை சுமக்க வேண்டும். முதலாவது சிலுவை என்றால் என்ன என்று நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

பலர் தாங்கள் சந்திக்கிற பாடுகளை சிலுவை என்று சொல்லுகின்றனர், அதாவது, கடன் பிரச்சனை, வியாதிகள், வேலையின்மை, தடைகள், போன்ற நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கிற போராட்டங்களை சிலுவை என்கின்றனர். ஆனால் ஆண்டவர் தெளிவாக கூறியுள்ளார் இந்த உலகில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு என்று. இவையெல்லாம் நம் உபத்திரவங்களே தவிர சிலுவை அல்ல.

சிலுவையின் மெய்யான அர்த்தத்தை புரிந்துக் கொள்ள, இயேசு ஏன் சிலுவை சுமந்தார் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.


ஏன் இயேசுகிறிஸ்து சிலுவை சுமந்தார்? தனக்காகவா? இல்லை இவ்வுலகில் வாழ்ந்த மற்ற மனிதர்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக. அவர்கள் இரட்சிப்படைய வேண்டும் என்பதற்காக. அப்படியானால் சிலுவையின் மெய்யான அர்த்தம் என்ன?

பிறருக்காக சுமப்பது. நம் வாழ்வில் நம் சக மனிதனுக்காக, அவர்கள் நன்மைக்காக, அவர்கள் வாழ்வுக்காக நாம் துன்பங்களை அனுபவிக்க ஆயத்தமாயிருப்பதுதான் சிலுவை சுமக்கிற வாழ்க்கை. இன்று துன்பத்தோடிருக்கிற கடவுளுடைய ஊழியனை தாங்குவதைக்கூட உபத்திரவமாக நினைக்கிற நிலைக்கு நம் வாழ்வு சுயநலம் மிகுந்துள்ளது.

அப்படியானால் நமக்காக கிறிஸ்து சிலுவை சுமந்ததை பெருமையாக சொல்ல நமக்கு இடம் இல்லை. நாம் மற்றவர்களை தாங்க ஆயத்தமாக இல்லை என்றால் நம்மை தாங்க அவர் ஆயத்தமாக இல்லை எனவேதான் அப்படிப்பட்டவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது என்று மிக தெளிவாக இயேசுகிறிஸ்து கூறுகிறார்.


சிந்தித்து பார்ப்போம், அடுத்தவர் வாழ்வில் நம் பங்கு என்ன? உண்மையாக கஷ்ட்டப்படுகிறவனுடைய வாழ்வில் நம் நிலை என்ன? திறமைகள் இருந்தும் முன்னேற வசதியும் வாய்ப்புகளும் இன்றி தவிக்கிற ஒரு சகமனிதனுக்கு வாய்ப்பிருந்தும் உதவாமல் இருக்கிறோமா?

சகமனிதனை தாங்க மனமுண்டா? அதுதான் மெய்யான சிலுவை.
சுமக்க ஆயத்தமா? சிந்திப்போம். செயல்படுவோம்..


 
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, April 14, 2011

வெற்றி (காலை மன்னா)

அன்பார்ந்த  உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள். இந்த காலை நேரத்தில் உங்களோடு தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை மீகா.4 :10b 

கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.

ஆபத்தை, பிரச்சினைகளை, போராட்டங்களை, வியாதிகளை, சத்துருக்களை, நாம் யாரும் விரும்புவதில்லை. இவைகளிலிருந்து தப்பிப்பதுதான்  நம் குறிக்கோள். ஆனால் இவைகளை அனுபவிக்காமல் மனித வாழ்வை நாம் கடந்துவிட முடியாது. எவ்வளவுதான் எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் நாம் வாழ்ந்தாலும் இந்த பிரச்சினைகளிலிருந்து நாம் தப்பித்துவிட முடியாது.




இவையெல்லாம் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் இவ்வுலகில் வாழ்ந்தப்போது அனுபவித்துள்ளார், அப்படியானால் இதன் தீவிரம் நமக்கு புரிகிறது. எனவே இவைகள் வரவே கூடாது என்பது சாத்தியமில்லாதது. வந்த பிறகு அவைகளை எப்படி எதிர்க்கொள்வது என்பதுதான் முக்கியமானது.


இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்வில் அநேகந்தரம் மிகக் கொடிய பிரச்சனைகளில் சிக்கி சத்துருக்களால் சிதைந்துப்போனவர்கள். தங்கள் பாவத்தின் பலனாக இவைகளை அனுபவித்தனர்.

நம்முடைய தியானப்பகுதியிலும், வரப்போகிற பாபிலோனிய துன்பத்திலிருந்து எப்படி விடுதலையாவது, தங்கள் சத்துருக்களை எப்படி மேற்கொள்வது என்று தெரியாமல் குழம்பி போயிருக்கிற இஸ்ரவேலர்களுக்கு மீகா தீர்க்கதரிசி சொல்லுகிற பதிலைத்தான் காண்கிறோம். கர்த்தர் உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார் என்கிறார்.


நம் வாழ்விலும் சத்துருக்களை நாம் தடுக்க முடியாது ஆனால் அவர்கள் நம்மை மேற்கொள்ள  முடியாமல் தலைதெறிக்க ஓட வைக்க முடியும். ஜெயம் தரும் கிறிஸ்துவின் நாமத்தில் நாம் இதை சாதிக்க முடியும். இந்த விசுவாசத்தோடு நாம் இந்த நாளை துவங்குவோம். கர்த்தர் நம்மை நம் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, April 13, 2011

MY DCPC GRADUATION PICTURES















காலை மன்னா

தியான பகுதி மாற்கு.15 :42 -46 

பலவீனன் பெலவான் ஆகிறான்.


சிலுவையின் நாயகனாகிய பாடுகளின் தாசனாகிய, இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம். அன்பான கடவுளுடைய பிள்ளைகளே இந்த தவக் காலங்களில், சிலுவை பாதையில் நாம் யார் என்பதனை தியானித்து வருகிறோம். இங்கே அரிமத்தியா யோசேப்பு என்பவன் மிகச்சிறந்த சீடராக சிலுவை பாதையில் இருந்தார்.

அரிமத்தியா யோசேப்பு:

இவர் யூத சனேகரீம் சேர்ந்தவர், செல்வம் மிக்கவரும்,  மதிக்கப்பட்டவரும் ஆவார்.

* மாற்கு.15 :42 -46  ல் கடவுள் ராஜ்ஜியம் வர காத்திருந்தவர் என்று காண்கிறோம்.

* மத்தேயு.27 :57 -60  இவன் ஐசுவரியவான்.

* லூக்கா.23 :50 -53  உத்தமன், நீதிமான், மற்றவர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும், சம்மதியாதவன். கடவுளின் ராஜ்ஜியம் வரக் காத்திருந்தவன்.

* யோவான்.19 :38 -42  இயேசுவின் சீடர், யூதர்களுக்கு பயந்திருந்தவர். அந்தரங்க சீடன்.

தைரியம் நிறைந்தவர்:

சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருக்கிறார், சீடர்கள் அவரது உடலை கேட்க வரவில்லை, இவர் பயந்தார் ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பிலாத்துவிடம் போய் கேட்டார். இன்று அனாதையாய் இருக்கும் ஒருவருக்கான உரிமைகள் கிடைக்க நாம் மேலிடத்தில் பரிந்து பேச முயல்வோமா? நமக்கு அந்த தைரியம் உண்டா?

மனிதநேயம் உடையவர்:

இவர்  ஒரு நல்லவர் என லூக்கா குறிப்பிடுகிறார். மனித தன்மையற்று நீதிமானாகிய இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களில் இவர் ஒரு சிறந்த மனிதன். மனிதனை மனிதனாக பார்க்கவேண்டும்.

தியாகம்:

இயேசுவுக்காய் தன சொந்த கல்லறையை தந்தார். ஏசாயா.53:9 ல் ஒரு செல்வந்தனின் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவார் என்பது நிறைவேறியது, இன்று நாம் தியாக மனப்பான்மையாக வாழ்கிறோமா?

இயேசுவின் பகிரங்க சீடன்:

மத்தேயு, யோவான், இவரை இயேசுவின் சீடன் என்று கூறுகிறார்கள். யூதாஸ் மரித்துவிட்டார், மற்றவர்களோ ஓடிப்போய்விட்டார்கள். ஆனால் இவரோ தன்னை சரியான நேரத்தில் சீடன் என்பதனை வெளிப்படுத்துகின்றார்.

இன்று நாம் எப்படி? பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா? உண்மையான பகிரங்க சீடர்களா? பலவான்களை வெட்கப்படுத்த பலவீனர்களை தெரிந்தெடுத்தார். 1.கொரிந்தியர்:1;27 .ரோமர்.5:6, ரோமர்.8:13, ரோமர்.8:24 ஆகிய வசனங்கள், பலவீனர்களை இயேசு எப்படி பெலவானாக்குகிறார் என்பதை காட்டுகின்றன.

இன்று திருச்சபை யாரோடு நிற்கிறது? எந்த கூட்டணியில் உள்ளது? பதவி பலம், செல்வம், போன்றவற்றால் கைவிடப்பட்டவர்களோடா? கைவிட்டவர்களோடா? அரிமத்தியா யோசேப்பின் திணிச்சல் நமக்கு உண்டா? கடவுள்தாமே நம்மை பெலப்படுத்துவாராக ஆமென்.


கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, April 12, 2011

ANGEL APPEARS TO MARY

Dear children here after every tuesday your's day. Every Tuesday we will learn each stories in Bible. It is not only for children, but for veryone. I hope it will helps you to learn Bible stories clearly. Ok now we will learn 1st lesson.

Do you have a baby brother or sister in your house? It is exciting when we know that a new baby is going to be born in our house, isn't it?
A long time ago, in a town called Nazareth in Galilee, there was a girl named Mary. She was God fearing and humble. Marry was going to be married to a man called Joseph. Joseph was a good, kind and God fearing man. He was a carpenter. A carpenter makes wooden furniture and tools. Mary was looking forward to the day when she would marry Joseph the carpenter.

Mary and Joseph were the descendents of king David. Joseph was the great grandson of king Solomon (Matthew.1:6, 16). Similarly Mary was the great grand daughter of Nathan the son of David (Luke.3:24,31).

One day when Mary was at home, God sent an angel to speak her. The angel's name was Gabriel. When Mary saw Gabriel and heard him speaking, she was frightened. Because she had never seen an angel before. Then the angel said to her "Don't be afraid, Mary. God has chosen you. God says that you will have a Baby Boy. He will be a vey special Baby, because He will be God's own Son. When He is born, you must call Him "Jesus".

Mary listened to the angel Gabriel. She knew that God will send a special king into the world one day. That king would be God's own son. But she never thought that God would choose her to be His mother. She was very surprised.

But Mary believed what the angel said. She believed that God had chosen her and she was glad. When Gabriel had gone, se sang special song thanking and praising God.

ANGEL APPEARS TO JOSEPH IN A DREAM
(Read the passage in Mtt.1:18-25, which is found only in this Gospel).

Joseph was waiting the day of marriage too. One night Joseph had a dream. In that dream, he saw an angel. The angel said to him, Joseph, in a little while Mary will have a Baby. Her Baby will be God's own son. You must call him "Jesus".

So Mary and Joseph were married and they waited for God send His son, just as He has promised.

(Ref: Lk.1:26-38, Mtt.1:18-25)

Memory verse Luke.1:28

The angel went to her and said, Greetings, you who are highly favoured! The Lord is with you.

Exercise:

1.Where did Mary hail from?
2.What were the good qualities in Mary?
3.What was Joseph?
4.What id the angel Gabriel tell to Mary?
5.Why was Mary's baby called very special?

By
Your's beloved Uncle.
Rev.Gilbert Asirvatham. 

Put your answers in comments box  or my email jesusblessing65@yahoo.in .

Monday, April 11, 2011

ஆவியின் வல்லமை

அன்பானவர்களே, உடன் சகோதர சகோதரிகளே சிறிய இடைவெளிக்குப்பின் சந்திப்பதில் மகிழ்ச்சி, இன்று உங்களோடு  பகிர்ந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை, எசேக்கியேல்.37 :7 -10 

7. எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

8. நான் பார்த்துக்கொண்டிருக்கையில் இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது.

9. அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

அன்பானவர்களே இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த காலத்தில் கடுமையான  உபத்திரவங்களை அனுபவித்தனர், கடவுளை நோக்கி, தங்கள் புலம்பலை முன் வைத்தனர். அவர்கள் புலம்பி கூறியது யாதெனில், (எசே.37 :11 ) எங்கள் எலும்புகள் உலர்ந்துப் போனது, எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று, நாங்கள் அறுப்புண்டு போகிறோம் என்பதே, இதைக்கேட்ட கடவுள் அவர்களுக்கு ஒரு உண்மையை புரிய வைக்க  எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு  கடவுள் காட்டின தரிசனம் தான் இன்றைய தியானப்பகுதி.



ஒரு பள்ளத்தாக்கில் கொண்டுப்போய் நிறுத்தி உலர்ந்த எலும்புகளை கடவுள் காண்பித்து  இவைகள் உயிர் பெறுமா? என்று கேட்கின்றார். தற்போது விஞ்ஞான துறையில் குளோனிங்  முறையில் ஒரு மனிதனின் கொஞ்சம் தசை கிடைத்தால் கூட அதிலிருந்து ஒரு உயிரை உண்டாக்கி விடுகின்றனர், ஆனால் இந்த எலும்புகளோ உலர்ந்துப் போனவை ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவை, அந்த எலும்புகளை கடவுள் காட்டினார், உடனே எசேக்கியேல் தேவரீர் நீர் அறிவீர் என்று பதிலுரைக்கிறார்.


உடனே கடவுள் தன வார்த்தைகளை அந்த எலும்புகளோடு பேச சொல்லுகிறார், கர்த்தருடைய வார்த்தைகள் வந்தவுடனே அற்புதமான காட்சி எசேக்கியேல் கண்களுக்கு முன்பாக அரங்கேறுகிறது கிட்டத்தட்ட ஒரு படைப்பை நேரடியாக காண்கிறார்.

எலும்புகள் ஒன்றோடு ஒன்று இனைந்து, நரம்புகளால் இணைக்கப்பட்டு, தசைகள் உண்டாகி, தோலினால் மூடப்படுகிறது.


ஆனால் அவைகளுக்குள் ஜீவன் இல்லை உடனே கடவுள் தன ஆவியை அனுப்பினார், நான்கு புறங்களிலிருந்தும் கர்த்தருடைய ஆவி அந்த உடல்கள் மீது மோதினவுடனே அவைகள் உயிர் பெற்று சேனைகளாய் எழும்பி நின்றன.

உலர்ந்துப்போன எலும்புகளுக்கு உடல் கொடுத்தது அவர் வார்த்தை, உடல்களுக்கு உயிர் கொடுத்தது அவர் ஆவி. இவ்வளவு வல்லமை மிக்க ஆவியை தன் ஜனத்திற்கு கொடுத்திருக்கிறேன் என்று கடவுள் சொல்லுகிறார், அப்படியானால்  எவ்வளவு துன்பத்திலும் எழும்பி நிற்கிற ஆற்றலும் முன்னேறுகிற துணிவும் கடவுள் நமக்குள் வைத்திருக்கிறார்.

பரிசுத்தாவியின் அபிஷேகத்தை ஞானஸ்நானத்தின் வழியாக பெற்றுக்கொண்ட நாம் சாதாரனமானவர்களல்ல, காரணம், எவ்வளவு பெரிய துன்பத்தையும் எதிர்த்து நின்று ஜெயிக்கக்கூடிய ஆற்றலை நமக்குள் இருக்கிற ஆவியினாலே நமக்குள்ளேயே பெற்றவர்கள்.


எனவே நமக்குள் இருக்கிற வார்த்தையான கிறிஸ்துவையும்,  ஆவியானவரையும்  நம்புவோம், துன்பங்களை துணிவுடன் வென்று ஆவியில் நிலை நிற்போம் ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்




Tuesday, April 5, 2011

நம்மை அறிந்தவர்

அன்பார்ந்த உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான வசனம், நாகூம்.1 :7 

 கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

நம்முடைய வாழ்வில் நம்மை புரிந்துக் கொள்ளுகிறவர்கள்  மிக மிக குறைவே, நம்மை தவறாக புரிந்துக் கொள்ளுகிறவர்கள் இருக்கிறார்கள், ஆனால் நம்மை சரியாக புரிந்து கொள்ளுகிறவர்கள் மிக மிக குறைவே.

காரணம் அடுத்தவர்களையும், அடுத்தவர்களின் சூழ்நிலையையும் புரிந்துக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. தற்சமயம் நமது தமிழ் நாட்டில் தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்களும், அவர்களது தலைவர்களும், கட்சிக்காரர்களும், மிகத்துரிதமாக ஒட்டு சேகரித்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் மக்களை புரிந்துக்கொண்டு, மக்களின் சூழல் தெரிந்து, அவர்கள் தேவை அறிந்து, ஆட்சி நடத்திய யாரும் ஒட்டு கேட்டு மக்களை தேடி போக வேண்டியதில்லை, ஒட்டு அவர்களை தேடி வரும். அதுதான் உண்மையான மக்களை ஆளுகிறவர்களின் பண்பாக இருக்கவேண்டும்.

நம்முடைய தியானப் பகுதியில் கடவுள், தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் என்று நாகூம் தீர்க்கதரிசி, மிக தெளிவாக கூறுகிறார். காரணம் அவர் நல்லவர், இக்கட்டு நாளில் அரணான கோட்டையாக விளங்குகிறார்.

இதுதான் மக்களை வழி நடத்துகிற உண்மையான அரசனின் குறிக்கோள். காரணம் நம் ஆண்டவர் நம்மை உருவாக்கினவர், நம் தேவைகளை அறிந்து நமக்கு நன்மை செய்கிறவர்.

எனவே நம்மை, நம் தேவைகளை, நம் சூழ்நிலையை புரிந்துக் கொண்டவர்கள் யாருமே இல்லை என்ற தவிப்பு இருக்கிறதா? உடனே தூக்கி எறியுங்கள், ஆண்டவர் நமக்கு துணையாக நம்மை உண்மையாக புரிந்துக்கொண்டவர்.

நம் இக்கட்டில் அவர் நமக்கு துணை. இந்த உலகின் மனிதர்களல்ல, இந்த அண்டசராசரத்தின்  கடவுள் நமக்கு துணையாக இருக்கிறார். தைரியமாய் இந்நாளை துவங்குவோம், ஆசீர்வாதங்களை பெறுவோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

அன்பானவர்களே, நான் ஏற்கெனவே தெரிவித்தபடி என்னுடைய Diploma in Clinical Pastoral Counselling  என்ற Course ஐ முடித்துவிட்டேன், நாளை முதல் அதற்கான தேர்வுகள் சென்னையில் நடைபெறுகிறது, எனவே அதற்காக ஜெபியுங்கள், எனவே தொடர்ந்து வருகிற நான்கு  நாட்களில் என்னால் பதிவிட முடியாது என்பதை வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறேன். தற்சமயம் நமது இணையதள பக்கம் துவங்கி நான்கு மாதங்களை வெற்றிகரமாக கண்டுவிட்டோம், தொடர்ந்து இதன் வளர்ச்சிக்காக இணையதள சீரழிவிலிருந்து இளைஞர்கள் இத்தளம் வழியாக
 காக்கப்பட ஜெபியுங்கள் அநேகருக்கு தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்.  
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எல்லா பதிவுகளையும் படித்து உங்கள் ஆத்தும அனுபவத்தை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்



Monday, April 4, 2011

காலை மன்னா

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான வசனம்.சங்கீதம்.27 .10  ௦

என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.”

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வை துவங்குவது, தன் பேற்றோரிடமிருந்துதான்  , எனவே தான் பெற்றோர்களை நம் முன்னோர்கள் மிக பெருமையாக சொல்லி வைத்துள்ளனர், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று.




காரணம் நம் வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமே அவர்கள் தான் எனவேதான் நாம் அனைவருமே நாம் வாழும் வரை நம் பெற்றோர்கள் நம்மோடு வாழ வேண்டும் என்று ஆசைப் படுகிறோம், அதே நேரத்தில் அவர்கள் முதியவர்களாய் மாறிவிடுகிற காலத்தில் நம் அன்பிலும்,  நம் பாதுகாப்பிலும் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பலர் அதை பாரமாக கூட நினைக்கிறார்கள், அதெல்லாம் கல் நெஞ்சத்தின் ஒரு அடையாளம். ஆனால் இந்த தியானப்பகுதி சொல்லவருவது ஒரு செய்திதான் அது யாதெனில் நம் பெற்றோர் கூட நம்மை கை விடுகிற காலம் உண்டு, காரணம் அவர்கள் முதியவர்களான பிறகு நாம் பாதுகாக்கிற நிலைக்கு வருகிறார்கள்.

அக்காலத்தில் நமக்கு வழி காட்ட, நம்மை அன்போடு, கரிசனையோடு தாங்க, ஒரு கரம் தேவைப்படுகிறது. அந்த கரத்தைப் பற்றிதான் சங்கீதக்காரன் கூறுகிறார், கர்த்தர் என்னை சேர்த்துகொள்வார் என்று.

நம் பணியின் நிமித்தமாக, நம் பெற்றோரை பிரிந்திருக்கலாம், மரணம் பெற்றோரை பிரித்து வேதனையோடு இருப்பவர்கள் இருக்கலாம், முதுமையின் நிமித்தமாக பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏக்கத்தோடு இருக்கலாம், ஆனால் கர்த்தர் நம்மோடிருக்கிறார்.

அவர் நம்மை எக்காலத்திலும் கை விடாதவர். நமக்கு அவரே துணையாளர். துணிவாய் இந்நாளை துவங்குவோம்.


கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews