WORD OF GOD

WORD OF GOD

Thursday, December 29, 2011

The final days of 2011

Text: 1Chronicles.15:29

When the ark of the Lord’s promise came to the City of David, Saul’s daughter Michal looked out of a window and saw King David dancing and celebrating, so she despised him.


Dance is one of the important charactristics of human. Whenever we feel fullness of happy in ourselves we urge to dance. We Indians mostly have shy to dance in public. If any dancing in the street how can we see them, we can think that they may have psychological problem, or they may alcohilics. But we never see them as a normal persons. Because, in our culture, dancing in the street is a sign of indescent. But the same time, we can see many are dancing in our religious festivels, many people dancing before their Idols in festivels. It is very common in India. But the political leaders never dance in public. If any political leader will dance in a religious feativels we never vote them again, because it is not a quality we are expecting from them. We are expecting only the leadership qualities from them.


But here we see in our scripture passage that, the king of Israel dancing in public. why he is dancing? The king and the elders decided that to take the ark of the covenant of the Lord from the Obed-Edom's house to Jerusalem. So the king David got so much happy, and forget all about himself, He is playing music, and dancing before the ark. Before the public he was dancing without any shy. Why the King behave like this? because David always gives important to the God almigty and His words. He clearly know that his power and authority are all nothing before God, only the grace of the God almigty he got this authority, so he didnt care about his authority he give important to the Lord, this is the secret of David's success.


Now we are in the final days of 2011, within a two days we will finish it of. How it happend? how many problems we faced this year, how many accidents we seen this year? how many earthquakes we seen this year? inspite of all theses dangers still we are living with peace. How? only because of the God of david. He is the source of our life and salvation. He is ready to give His life to save us. So inspite of all our New Year celebarations giving most important to the Jesus and waiting for His grace and blessings will definitely give us a blessfull NEW YEAR. Amen.

In Christ.
Rev.Gilbert Asirvatham.

Share your comments ...

Wednesday, December 28, 2011

பாக்கியவான் எவன்?

TEXT. PSALM.1


அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரங்கள், சங்கீதங்கள் பொதுவாக தாவீதின் சங்கீதங்கள் என்று அழைக்கப்பட்டாலும், தாவீது எழுதாத அநேக சங்கீதங்களும் உள்ளன. சங்கீத புத்தகத்தின் முதல் சங்கீதமே, தாவீது எழுதிய சங்கீதம் அல்ல, முதலாம் சங்கீதத்தை எழுதிய ஆசிரியர் யார் என்பதும் தெரியவில்லை. இந்த சங்கீதம் ஞான அறிவுரைகளை கூறும் சங்கீதமாக அமைந்துள்ளது. எனவே இந்த சங்கீதம் ஞான போதனை கீதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சங்கீதத்தில் சங்கீதக்காரன், மனிதர்களின் இருவித வாழ்வையும் அதின் பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்லுகிற முதல்தர வாழ்க்கை என்பது, பொல்லாதவரின் ஆலோசனைபடி நடவாமல், பாவிகளின் வழியில் நில்லாமல், பரிகாசக்காரர் கூட்டத்தில் உட்காராமல், இரவும் பகலும் கர்த்தருடைய வார்த்தையை தியானித்து, அதின்படி வாழ்கிற வாழ்க்கை.


ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்பவர்களே முதல்தர வாழ்க்கை வாழ்பவர்கள். கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை என்பது, தீயவை கேட்காமல், தீயவை பேசாமல், தீயவரோடு அவர் பாதையில் உட்காராமல், தீயவை பின்பற்றாமல், வேதாகமத்தின் படி மட்டுமே வாழ்கிற வாழ்க்கை.

இப்படிப்பட்ட வாழ்வை பின்பற்றுவோருக்கான பலனையும் சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். அவர்கள் ஆற்றோரங்களில் நடப்பட்டிருக்கிற மரத்தை போலிருப்பார்கள். ஆற்றோரத்திலிருக்கிற மரம் எப்படி இருக்கும்? எல்லா காலமும் பருவ காலமாகவே ஆற்றோர மரத்திற்கு இருக்கும், சுத்தமான தண்ணீரும், சுத்தமான காற்றும் குறைவின்றி கிடைப்பதால், அதின் இலைகள் என்றென்றும் பசுமையாகவும், எப்போதும் கனிதருகிற மரமாகவும் யாராலும் அசைக்க முடியாத உறுதியோடும் நிலைத்திருக்கும் அந்த வாழ்க்கை முதல்தர வாழ்வு வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் என்கிறார்.


ஆனால் இரண்டாம் தர வாழ்க்கை இதற்கு நேரெதிரான வாழ்க்கை, தீயவை கண்டு, தீயவை பேசி, தீயவரோடு உறவாடி, தீயவை பின்பற்றி, கர்த்தருக்கு செவி கொடுக்காமல் வாழ்கிற வாழ்க்கை. அதன் பலனை அதிகமாக சங்கீதக்காரன் விளக்கவில்லை இரண்டே வார்த்தைகளில் கூறிவிடுகிறார், அவர்கள் பதரை போலிருப்பார்கள், அவர்கள் வழி பாழாகும்.


அன்பானவர்களே, அவர்கள் பதர் அதாவது தூசிக்கு சம்மானவர்கள், ஊதினால் அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடும், அவர்கள் வாழ்க்கை பாழாகும்.

நம்முடைய பாதை என்ன? நமக்காய் விண்ணரச வாழ்வை விட்டு ஏழைக்கோலமெடுத்து வந்த ஆண்டவரின் உறுதியான பாதையா? அல்லது பாழாய் போகும் பாதையா? யோசிப்போம், வருகிற புத்தாண்டில் எப்பாதையில் நிலைப்பது என்ற முடிவெடுக்க ஆயத்தப்படுவோம். கர்த்தர்தாமே உங்களுக்கு துணை புரிவாராக ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, December 27, 2011

கிறிஸ்துமஸ் செய்தி

TEXT: JOHN.1:14

அன்புக்குரிய இந்த இணைய தளத்தின் வாசகர்களே, உங்கள் யாவரையும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அநேக துன்பங்களும் சோதனைகளும் சில நாள் என்னை பதிவிட விடாமல் தடுத்துவிட்டன, ஆனால் அந்த துன்பங்களோ சோதனைகளோ என்னையா, ஊழியத்தையோ முடக்கிவிடாமல் கர்த்தர் பார்த்துக் கொண்டார். அந்த அனுபவங்களை ஒரு சாட்சியாக விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன். தற்போது கிறிஸ்துமஸ் செய்தியை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற  நான்கு பேர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறை   கூறுகிறார்கள், அந்த நான்கு பெரும் அவரது வாழ்க்கை வரலாற்றை  எழுதுவதற்கு மிகவும் தகுதியானவர்கள், காரணம் நான்கு பேரில் இருவர் இயேசுவின் நேரடியான சீடர்கள், இருவர் பவுலின் சீடர்களாக திருப்பணி செய்தவர்கள். இந்த  நான்கு பேரில் மூவர் ஒரே மாதிரியாக இயேசுவின் வரலாறை எழுதுகின்றனர், ஆனால் யோவான் மட்டும் மிகவும் வித்தியாசமாக எழுதுகிறார். அவரது எழுத்துக்கள் இயேசுவின் வரலாற்றை பிரதிபலிப்பதைவிட அவரது ஆள்தன்மையை  பிரதிபலிப்பதிலேயே கவனாமாக இருப்பதை வாசிக்கும்போது அறியலாம்.

எல்லாரும் (மாற்கு தவிர) இயேசு எங்கே பிறந்தார், அவரது பெற்றோர் யார்? அவர் எந்த ஊரில் பிறந்தார்? அவரது பிறப்பின் போது நடந்த சம்பவங்கள் என்ன என்பதை எழுதுவதில் அக்கறை காட்டுகின்றனர். ஆனால் யோவானோ, அவர் எப்படிப்பட்டவர் என்பதை மட்டுமே கூறுகிறார். அவர் இரண்டு கருத்துருக்களால் மண்ணில் பிறந்த இயேசு பாலன் யார் என்று கூறுகிறார். முதலாவது வார்த்தையானவர் என்றும், இரண்டாவது ஒளியானவர் என்றும் கூறுகிறார். கடவுள் இவ்வுலகை படைக்கும் முன் வார்த்தையாக இருந்தார், அவர் தனது வார்த்தையை கொண்டே இம்முழு பிரபஞ்சத்தையும் படைத்தார். மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல கடவுளுடைய வார்த்தையினாலேயே பிழைப்பான் என்று ஆண்டவர் கூறுகிறார். படைக்கவும், காக்கவும், பிழைப்பூட்டவும் வல்லமை கொண்டது கடவுளுடைய வார்த்தை. அது மாத்திரமல்ல கடவுள் வார்த்தையாகவே இருந்தவர், அவருக்கு உருவமில்லை. இரண்டாவது அவர் ஒளியாக இருந்தார், ஒருவரும் சேரக்கூடாத ஒளி என்று அவரை பற்றி வேதாகமம் கூறுகிறது. அவர் படைத்த சூரியனையே நாம் நெருங்க முடியாதென்றால், அவரை நெருங்க முடியுமோ? எனவேதானே கடவுள் மோசேவிடம் என் முகத்தை கண்டால் நீ சாகவே சாவாய் என்றார்.

அன்பானவர்களே, அவரை நாம் நெருங்குவது சாத்தியமில்லாத காரியம், அவரும் நம்மை நெருங்க முடியாது, காரணம் மனுஷனை நினைப்பதற்கும், மனுஷ குமாரனை கண்ணோக்குவதற்கும் அவன் எம்மாத்திரம். அவர் நம்மை நெருங்கினாலும் நாம் பொசுங்கி போவோம். எனவே நம் மீது அன்பு கொண்ட கடவுள், நம்மையெல்லாம் காக்க, நாம் நெருங்க முடியாத அவரை நெருங்கி சேர, நாம் காணும் வகையில், நாம் தொட்டு உணரும் வகையில், நம்மோடு வாசம் செய்ய சாதாரண மனிதனாய் அவதரித்து பிறந்தார். இனி கடவுள் நமக்கு எட்டாத உயரத்தில் இருப்பவரல்ல, நம்மோடு வாசம் செய்பவர் அதைதான் யோவான், வார்த்தையானவர் மாமிசமானார், கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நம்மோடு வாசம்பண்ணினார் என்று குறிப்பிடுகிறார்.


அன்பானவர்களே, கடவுள் மனிதனாய் பிறந்திருக்கிறார், இனி கவலையை தூக்கியெறியுங்கள், காரணம் அவர் பிறந்த நோக்கம் நம்மை உயர்த்துவது. எதெல்லாம் நம்மை தாழ்த்துகிறதோ அதையெல்லம் நம்மிலிருந்து அகற்ற, பாவம், பிசாசு, மரணம், ஆகியவற்றிலிருந்து நம்மை விடுதலையாக்க விடுதலை வீரர் பிறந்துவிட்டார். மகிழ்வோம், களிகூறுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, November 25, 2011

Text: பிலிப்பியர்.4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு


அன்பானவர்களே வேலூர் மாவட்டத்தில் வடகரை என்ற ஒரு கிராமம் உள்ளது அது மிகவும் பின் தங்கிய கிராமம் பேருந்து வசதி கூட இல்லாத கிராமமாக இன்றளவும் உள்ளது, நான் அங்கே பயிற்சி போதகராக இருந்த காலத்தில் ஊழியம் செய்து வந்தேன். நான் அங்கே ஊழியத்தை துவங்கிய காலத்தில் ஆலயத்திற்கென்று முறையான கட்டிடம் இல்லை, ஓலை கூரை வேய்ந்த கட்டிடத்தில்தான் ஆராதனை நடத்தி வந்தோம்.

ஒரு நாள் ஒரு தாயார், தனது மகனை ஆலயத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தார், அவன் 15 வயது நிரம்பிய இளம் வாலிபன், ஆனால் பார்க்க மிகவும் பெலவீனமாக இருந்தான், அவன் பெயர் அருண். அவன் தாயார் அவனை எங்களுக்கு அறிமுகம் செய்தார், அவன் பெயர் அருண் என்றும், அவன் வயிற்று வலியால், தினந்தோறும் போராடுவதாகவும், சென்னை சென்று மருத்துவம் செய்துக் கூட பலன் இல்லை என்றும் மிகவும் வேதனையாக கூறினார்.

மேலும் அவனை இயேசு சாமிக்கு ஒப்புக் கொடுக்க போவதாகவும், அவர் அவனை ஏற்றுக் கொண்டாலும் சரி, எடுத்துக் கொண்டாலும் சரி என்றும் வேதனையோடு கூறிவிட்டு, சென்று விட்டார், அவன் ஆலயத்தில் போடப்பட்டிருந்த தரை விரிப்பானில் அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டான்.

நானும் அனைத்து விசுவாசிகளும் ஆராதனை முடிந்து அவனுக்காக ஜெபித்தோம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஜெபித்தனர். பலன் நடக்க முடியாமல் வந்தவன், எழுந்து நடந்து வீட்டிற்கு போனான். அடுத்தடுத்த வாரங்களில், நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது. இப்போதும் அருண் சுகமாய் இருக்கிறான், ஆனால் வெறும் அருணாக அல்ல, அருண் சாமுவேலாக. ஆம் இப்போது அவன் ஞானஸ்னானம் பெற்று உறுதியான விசுவாசியாக அவன் குடும்பத்திற்கும், அவன் சமூகத்திற்கும் சாட்சியாக வாழ்ந்து வருகிறான்.

அன்புக்குரியவர்களே, நாம் பெலவீனர்கள், நோயினாலும், போராட்டங்களாலும் சூழப்பட்டவர்கள், நம்மால் இவ்வுலகில் நிலை நிற்பதும் போராடுவதும் இயலாத ஒன்று, ஆனால் நம்மோடு இருக்கிறவர் வல்லமையானவர். எவ்வளவு கொடிய வியாதியையும், எவ்வளவு பெரிய போராட்டத்தையும் மேற்கொள்ளும் ஆற்றலை நமக்கு அருளுகிறவர். மரணத்தையே ஜெயித்தவரல்லவா?

எனவேதான் பவுல் கூறுகிறார், என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு. நமக்கு பெலனில்லை, எதையும் செய்கிற ஆற்றல் இல்லை, ஆனால் அவரால், பெலன் தருகிறவரால் எல்லாவற்றையும் செய்வோம்.

இந்த காலையில் இந்த விசுவாசத்தோடு நம் நாளை துவங்குவோம், கிறிஸ்துவின் பெலத்தால் துன்பங்களை மேற்கொள்வோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Saturday, November 19, 2011

சிறுவர் கொண்டாட்டம்



அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள், கடந்த இரு தினங்களாத இணைப்பு செயல்படாததால் என்னால் பதிவிட இயலவில்லை. கடந்த சனிக் கிழமை, கர்த்தருடைய பெரிதான கிருபையால், அழிஞ்சி குப்பம் திருச்சபையில், சிறுவர் கொண்டாட்டம் நிறைவாய் நடந்தது. அருள்திரு.மில்டன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவாய் செய்திருந்தார்.



60க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்துக் கொண்டு ஆவிக்குரிய அனுபவத்தை பெற்றுக் கொண்டனர். பரிசுகளும், மதிய உணவும் பிள்ளைகளுக்கு வழங்கினோம். இந்நிகழ்ச்சிக்கான மொத்த செலவையும் என்னுடைய சகோதரி திருமதி.ஜூலியலட் ஒல்வியா செல்வம் அவர்களும், சென்னையில் வசித்து வருகிற சகோதரர்.பாபு பிரபுதாஸ் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


இந்நிகழ்ச்சிக் குறித்து தலைமை ஆசிரியர்.திரு.ரமேஷ் அவர்கள் பேசும்போது, வாலிபர்கள் இவ்வளவு ஆர்வமாய் இவ்வூழியங்களை செய்வதைக் கண்டு கண் கலங்கினேன் என்று நெகிழ்வாய் பாராட்டினார். இந்த பாராட்டு எங்களை மேலும் ஆண்டவருக்காய் எவ்வளவேனும் உழைக்க தூண்டுகிறது.


காரணம் அற்ப பதர்களான எங்களை கொண்டு கடவுள் எவ்வளவு வல்லமையாய் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பது எங்களுக்கு பிரமிப்பாய் இருக்கிறது. அவர் அற்புதர், சர்வ வல்லவர் அவரது நாம மகிமைக்காய் உழைப்பதே என் மேலான பணி. தொடர்ந்து இந்த மகிமையான ஊழியங்களுக்காய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Thursday, November 17, 2011

மேன்மை தேடிவரும்!!!!!!!!

Text. Psalm.71:21

என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.


என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு நிறுவனத்திலே பணியாற்றுகிறார், அவர் தன பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர், தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மிக நேர்த்தியாக முடிப்பதில் வல்லவர். அவரது திறைமைக்கு ஏற்ப சவாலான ஒரு பணி அவருக்கு கொடுக்கப்பட்டது, அப்பணியை அவர் மிக கவனமாக மிக திறமையாக குறுகிய காலத்தில் செய்து முடித்தார், அதன் பலன் என்ன தெரியுமா? பொறாமை, அவரோடு பணியாற்றுகிற அனைவருக்கும் அவர் மீது பொறாமை வந்தது, தொடர்ந்து அவருக்கு கிடைக்கவிருந்த பணி உயர்வை தடுக்க அனைத்து வழிகளையும் கையாண்டனர்.

இதுதான் இன்றைய உலகின் நிலை நாம் என்னதான் கஷ்டப்பட்டு இந்த உலகில் நம் திறமையை நிரூபித்தாலும், அதன் பலனான மேன்மையை இந்த உலகம் தருவதில்லை, மாறாக நம் மேன்மையை கெடுக்கப் பார்க்கிறது. இது அனைத்து துறைகளிலும் இருக்கிறது. எப்படிதான் நாம் இந்த பொறாமை நிறைந்த நீதியற்ற சமூகத்தில் மேன்மை பெறுவது??????

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகிற்கு வந்தார்? பாவிகளாகிய நம்மை இரட்சிக்க..

பாவிகளாகிய நாம் இரட்சிப்புக்கு பாத்திரவான்களல்ல, ஆனால் அவரோ, இரட்சிப்புக்கு எந்த தகுதியும் இல்லாத நம்மை இரட்சிப்பின் மேன்மைக்கு தகுதிப்படுத்த இவ்வுலகிற்கு வந்தார். தகுதியே இல்லாத நம்மை தகுதிப்படுத்த அவர் எடுத்த முடிவுதான் கொடூர சிலுவை மரணம், அடுத்தவனை மேன்மைப்படுத்த தன்னை சீரழித்துக் கொண்டார். எவ்வளவு அன்பு... இந்த அன்பின் ஆண்டவர் நமக்கு துணையிருந்தால் அனைத்து மேனமைகளும் நம்மிடம் சராணாகதி அடையுமே!!!!!

எனவேதான் சங்கீதக்காரன் இங்கே என் மேன்மையை பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர் என்று தன் கடவுளில் விசுவாசம் வைக்கிறான்.

காரணம் இந்த சங்கீதத்தின் 10, மற்றும் 11ம்   வசனங்களில் தன்னை சுற்றியிருப்பவர்கள் தனக்கு விரோதமாய் ஆலோசனை செய்வதையும், தன் மேன்மையை கெடுக்க பார்ப்பதையும் தெளிவாய் விளக்குகிறார்.

ஆனாலும் நீர் என்னை மேன்மை படுத்துவீர் என்று ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறார். அன்பானவர்களே, நம் மேன்மையை கெடுக்க நினைக்கிற இவ்வுலகில் நாமும் இந்த வழியில்தான் மேன்மை பெற முடியும். அரிய பொக்கிஷமான இரட்சிப்பை பெறுவதற்கே நம்மை தகுதிப்படுத்தினவர், இந்த உலகின் மேன்மைகளை நமக்கு அருளாதிருப்பதெப்படி..

சந்தோஷமாய் இந்நாளின் பணிகளை தொடருங்கள், விசுவாசமாய் பணியாற்றுங்கள், நம்மை சேர வேண்டிய மேன்மை தேடிவரும். ஆம் என் நண்பர் இப்போது அந்நிறுவனத்தின் மேலாளர்.

கர்த்தர்தாமே இத்திரு வசனங்களை கொண்டு நம்மை மேன்மைப்படுத்தி காப்பாராக ஆமேன்.


 
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, November 16, 2011

தியானம் இனிதாயிருக்கும்

Text: Psalm.104:34

நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்

காலை தோறும் கண் விழிப்பது கர்த்தரின் கிருபை, இரவின் அந்தகாரம் நம்மை சேதப்படுத்தாமல், தன சுத்த தயவால் ஆண்டவர் நம்மை காத்து, காலை தோறும் நமக்கு புது உயிர் கொடுக்கிறார்.

அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள். நீதிமொழிகள்.8:17 . என்று கடவுள் சாலமோன் ஞானி மூலம்  நமக்கு அறிவிக்கிறார்.  ஒவ்வொரு காலையும் நமக்கு கடவுளின் மகிமையை அறிவிக்கிறது.

எனவே காலை தோறும் அவரை தேடுவது நமக்கு குறைவற்ற நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். எப்படி இறைவனை நாம் தேடுவது அதைதான் தாவீது இன்றைய நம்முடைய தியான பகுதியில் அறிவிக்கிறார்.


நான் அவரை தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும் என்கிறார். ஆம் அன்பானவர்களே, ஒவ்வொரு காலையும் நமக்கு இனிதாயிருக்கும் அவருடைய வார்த்தைகளை தியானிக்கும்போது. காலையில் எழுந்து இனிய ஒரு பாடலின் சில வரிகளை பாடி, ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்து. ஒரே ஒரு வசனம் வாசித்து, அதை தியானித்து, அல்லது நமது தளத்தின் ஒரு தியானத்தை தியானித்து துவங்கும் காலை  எவ்வளவு இனிமையானது?

நான் கர்த்தருக்குள் மகிழுவேன்  என்கிறார், அன்பானவர்களே, இப்படி துவங்குகிற ஒவ்வொரு காலையும், நம்மை கர்த்தருக்குள் மகிழச்  செய்யும். இனி  ஒவ்வொரு காலையும் தவறாமல் தியானத்தோடு துவங்கி   அவருக்குள்  மகிழ்வோம். ஆமென்.  

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Tuesday, November 15, 2011

HAPPY CHILDREN'S DAY



அன்பான கடவுளுடைய பிள்ளைகளே, நேற்று நமது தேசத்தில் சிறுவர் தினம். இன்றைய சிறுவர்கள்தான் நாளைய தலைவர்கள். எனவே சிறுவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். எதிர்காலம் மிகவும் முக்கியமானதல்லவா, எதிர்காலமே இன்றைய சிறு பிள்ளைகள்தான். அவர்களை இந்த போட்டியுள்ள உலகில் அனைத்து துறைகளிலும் தேர்ந்தவர்களாய் நாம் உருவாக்க வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்போமே, எனவே சிறுவர்களை சிறு வயதிலேயே நாம் தயார்ப்படுத்த வேண்டும்.

நாம் கண்டுக் கொண்ட உயர்வை போன்று, பல மடங்கு  உயர்வை நம் பிள்ளைகள் பெற வேண்டும். ஆனால் பொதுவாக இந்தியாவில், அதிலும் குறிப்பாய் திராவிடர்களான தென்னிந்திய பிள்ளைகளிடத்தில் அதிகமாக தென்படுகிற ஒரு குணம் தாழ்வு மனப்பான்மை. தமிழர்களிடம் இது பன்மடங்கு அதிகம். "போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து", "இருப்பதைவிட்டு பறப்பதை பிடிக்காதே", என்றெல்லாம் சொல்லப்படும் பழ மொழிகள் தாழ்வு மனப்பான்மையின் ஆணிவேராகவே நான் கருதுகிறேன்.

மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கி, நிறைவாய் ஒரு வீடு கட்டி, சிக்கனமாய் வாழ்க்கை நடத்துவது போதுமானதா? அப்படியானால் உயர்ந்தவன் உயர்ந்தவனாகவே இருக்க வேண்டும், தாழ்ந்தவன் தாழ்ந்தவனாகவே இருக்க வேண்டுமா? ஆளுகை, உலக வர்த்தகம்,
போன்றவையெல்லாம் யாரோ செய்துக் கொண்டிருக்க நாம் இதுவே போதும் என்று உட்கார்ந்திருக்க வேண்டுமா?

கர்த்தர் பட்சபாதம் உள்ளவரல்லவே.(அப்போஸ்தலர்.10:34).
உன்னை கன்மலையின் மேல் உயர்த்துவேன்  என்று சொன்னவரல்லவா.(சங்கீதம்.27:5)????
நீ கையிட்டு செய்கிற காரியத்தை வாய்க்க செய்வேன்.(உபாகமம்.28:8) என்கிறாரே.
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19.
என்று பவுல் தெளிவாய் ஆண்டவர் ஐசுவரியம் தருவார்  என்கிறாரே.


எனவே பிள்ளைகளை வளர்க்கும்போதே, இந்த இறை வார்த்தைகளில் விசுவாசம் கொண்டவர்களாய் வளர்க்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அவரை நம்புகிற யாவரையும் தேவன் மேலாய் உயர்த்துவார் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். உலகின் அனைத்து உயர்வுகளையும் எட்டிப்பிடிக்கும் ஆற்றல் அவர்களுக்குள் இருப்பதை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும். தாவீதின் வாழ்வையும், மோசேயின் வாழ்வையும், யோசேப்பின் வாழ்வையும் கற்றுக் கொடுங்கள்.

நமது சிறுவர் கொண்டாட்டம் ஊழியத்தின் நோக்கமும் இதுதான், விசுவாச பொறியை அவர்கள் உள்ளத்தில் விதைத்தால் போதும். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு (பிலிப்பியர்.4:13)  என்ற வசனம்  அவர்கள் வாழ்வில் எளிதில் சாத்தியமாகும்.

சிறு பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிற ஆண்டவர்  நம் வீட்டு சிறுவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து இந்த மேலான வாழ்வருளி காப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Friday, November 11, 2011

சோதனை இப்படியும் வந்தது..

அன்பான உடன் விசுவாசிகளே, கடந்த 7 ம் தேதி, என்னுடைய இளைய சகோதரியின் கணவர் திரு செல்வம் மாமா அவர்கள், அவருடைய சொந்த ஊரான வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு அருகேயுள்ள பாலூர் கிராமத்தில் இரண்டு ஆவிக்குரிய கூட்டங்களை ஒழுங்கு செய்தார். காலை 10 முதல் மாலை 4 மணிவரை உபவாசக் கூட்டமும், மாலை 6:30௦ மணியிலிருந்து 9 மணிவரை மாபெரும் ஆவிக்குரிய நற்செய்தி கூட்டமும் நடத்தினார். இந்த இரண்டு நிகழ்சிகளும் அவருடைய சொந்த ஊரில் மிகப்பெரிய எழுப்புதலை கொண்டு வந்ததை என் கண்ணாரக் கண்டேன்.

அன்று மிகவும் பிரமிப்போடு அவரை கண்டு அவரை வாழ்த்தினேன், தொடர்ந்து இது போன்ற ஆவிக்குரிய கூட்டங்களை பெருமளவில் நடத்த அவரை ஊக்கப்படுத்தினேன்.

அடுத்த நாள், எங்கள் வீட்டிற்கு அவர் வந்து காலை முதல் மாலை வரை எங்களோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். மாலை ஒரு 6 மணியளவில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டார். ஏன் என கேட்க நெஞ்சம் பதறியது அவரது தாயார்  விபத்தில் சிக்கியதாகவும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்தது. பதறியடித்து நானும் அவரும் ஓடி தாயாரை ஆம்புலன்சில் ஏற்றி அவர் அவர்களோடு மருத்துவமனைக்கு சென்றார். வேலூர் C.M.C கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் தன் மகன் செல்வம்  அவர்களின் மடியிலேயே  பிரிந்தது.

குடும்பம் முழுக்க சோகமாகிப்போனோம். ஏன் இப்படி? நேற்று ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம், ஆவிக்குரிய உபவாசக் கூட்டம் என ஆண்டவருக்காய் தன் உழைப்பையும் செல்வத்தையும் தந்தவருக்கு ஏன் இந்த  நிலை?

நேற்றைய சந்தோஷம் இன்று வேதனையாகிப் போனதே ஏன்? ஆண்டவர் ஏன் இதை அனுமதிக்கிறார்? ஒரே ஒரு வசனம் எனக்கு ஆறுதல் அளிக்கிறது,  கலப்பையில் கை  வைத்தவன் பின்னிட்டு பாராதே என்ற வசனம். ஏனெனில்?,

அன்பானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெறும் வாழ்க்கை அல்ல, பிசாசு, பாவம், மரணம் இவைகளுக்கு எதிரான போராட்டம். நாம் ஆண்டவருக்காய் உழைப்பதை இம்மூன்றும் பிடுங்க பார்க்கும். பாவம் இச்சையின்   உச்சத்திற்கும், பிசாசு சோதனையின் உச்சத்திற்கும், மரணம் வேதனையின் உச்சத்திற்கும் நம்மை கொண்டு போய் அவருக்காய் வாழ்கிற  வாழ்க்கையை பறிக்க பார்க்கிறான்.
ஆனால் கலப்பையில் கை வைத்தவர்கள் பின்னிட்டு பார்க்க கூடாது. பாவம் மரணம் பிசாசையும் நாம் தொடர்ந்து ஆண்டவருக்காய் உழைத்து வெற்றிக் காண வேண்டும். இந்த உறுதி, விசுவாசம் நம்மை பரலோக வாசலண்டை சேர்க்கும். ஆமேன்
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Tuesday, November 8, 2011

நம்மை முற்றும் அறிந்தவர்!!!!!!!!

Text. நாகூம். 1:7

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, நம்பிக்கை என்பதுதான் மனித வாழ்வின் மையமாக இருக்கிறது. ஆனால் நாம் யாரை நம்புகிறோம் என்பது மிகவும் முக்கியம். மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கவும் பெருக்கவும் சில தனியார் நிறுவனங்களின் வார்க்குறுதிகளை நம்பி அதில் முதலீடு செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அனேக நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டிவிட்டன.

நல்லாட்சி தருவார்கள் என்று மக்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்களில் அநேகர், கொள்ளையர்களாகி மக்களின் வரிப்பணத்தை சூறையாடுகின்றனர்.

இறையருள் நிறைந்தவர்கள் என்று தங்கள் வாழ்வின் பிரச்சினைகள் தீர மக்கள் ஆன்மீக தலைவர்களை தேடி போகின்றனர். அவர்களிலும் அநேகர் பணத்தை சுருட்டுவதிலும், அவர்களை சீரழிப்பதிலுமே குறியாக உள்ளனர். இது எல்லா மதத்திலும் இருக்கிறது.

இதையெல்லாம் காணும்போது யாரை நம்புவது என்றே நமக்கு தெரியாமல் போகிறது, எப்போது யார் ஏமாற்றுவார்களோ என்ற ஒருவித அச்சத்தோடே இவ்வுலகில் நாம் வாழ வேண்டியிருக்கிறது. இந்த அச்சத்திலிருந்து நம்மை விடுவிக்கும் கர்த்தருடைய வார்த்தைதான் இன்றைக்கு நாம் தியானிக்கிற வசனம்.

நாகூம் தீர்க்கர் கடவுளை பற்றி தெளிவான 3 கருத்துக்களை நமக்கு தெறிவிக்கின்றார்.

1. கர்த்தர் நல்லவர்.

2. இக்கட்டு நாளில் அவர் அரணான கோட்டை.

3. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

இதில் மூன்றாவதாக நாகூம் தீர்க்கர் சொல்லுகிற கருத்து, தம்மை நம்புகிற ஒவ்வொருவரையும் அவர் அறிந்திருக்கிறாராம். இது நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது. காரணம் அவரை நாம் முழுதாய் நம்புகிறோமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும். இன்று அநேக கிறிஸ்தவர்கள் தங்களை விசுவாசிகள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்களே தவிர வாழ்வில் உண்மையான விசுவாசம் இல்லை. 

உதாரணமாக அநேக விஷயங்களை சொல்ல முடியும் ஆனால் ஒரு மேலோட்டமான உதாரண‌த்தை மட்டுமே இங்கே சொல்லுகிறேன். இன்றைக்கு அநேகமாக எல்லா திருச்சபைகளிலும் பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான அநேகர் நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். இதனால் பிரச்சினைகள் வலுக்கிறதே தவிர தீரவில்லை. ஒருவர் ஜெயித்தால் அடுத்தவர் மேல் முறையீடு செல்கிறார். அவர் ஜெயித்தால் இவர் மேல் முறையீடு செய்கிறார். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தவறு செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் யாருமே தவறு செய்தவனை கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார் என்று நம்பவில்லையே ஏன்?..

நியாயம் என் பக்கம் இருக்கிறது என்று நம்புகிறவர்கள், கர்த்தர் என் தலை நிமிர செய்வார் என்று நம்பாமல் வழக்காடு மன்றங்களை ஏன் நாடுகின்றனர்? அப்படியானால் நாம் பெயரளவு விசுவாசிகள்தானே?????????? விசுவாசம் நம்மிடம் இல்லை என்றுதானே அர்த்தம். நீதிமன்றம் போகிறவர்கள் மட்டுமல்ல, எதிரியை பழி வாங்க நினைக்கிற யாருக்குமே விசுவாசம் இல்லை. பழி வாங்குவது என் காரியம் என்று தெளிவாக கூறியுள்ளாரே. இந்த அறை குறை விசுவாசம் நமக்கு இருப்பதால்தான் அநேகர் கடவுள் எனக்கு நியாயம் செய்யவில்லை என்று நீதி மன்ற வாசலிலும் வீதிகளிலும் கூவுகின்றனர். அவர் எப்படி செய்வார்? அவர்தான் அவரை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறாரே.

எனவேதான் நம் விசுவாசத்தில் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். நன்றாக யோசித்து பாருங்கள் ஒரு அற்புதமான உண்மை நமக்கு புரியும். இந்த போலித்தனமான விசுவாசம் கொண்ட யாருமே நிம்மதியாக இருப்பதில்லை. காரணம் விசுவாசிக்கிறவர்களை அவர் அறிந்திருக்கிறார். அவர் பாவிகளுக்கும் நல்லவர் ஆனால் போலித்தனமான விசுவாச போர்வையில் தங்கள் பாவத்தை மறைக்கிறவர்களுக்கல்ல. ஒவ்வொரு மனிதனின் இக்கட்டிலும் ஏன் பாவிகளின் இக்கட்டை நீக்கவும் ஓடி வருகிறவர், தன் சொந்த குமாரனையே சிலுவையில் அதற்காய் ஒப்புக் கொடுத்தவர். ஆனால் போலித்தனமான விசுவாசம் கொண்டு தன்னை பரிசுத்தவான்களாக‌ காண்பிக்கிறவர்களுக்கல்ல.

ஏசாயா.49:16 ல் இதோ உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன் என்று, உன் ஆதி அந்தம் அனைத்தும் நான் அறிவேன் என்று கூறுகிறார்.

அன்பானவர்களே இந்த காலை வேளையில் ஒரு முறை நம் விசுவாசத்தை ஆராய்ந்து பார்ப்போம். நமக்கு முழுமையான விசுவாசம் உள்ளதா என்று.. உண்மையான விசுவாசிகளின் நம்பிக்கைக்கு இவ்வுலகினரை போல நம்பிக்கை துரோகம் செய்கிறவரல்ல நம் கடவுள். இக்கட்டில் அவரே அரணாயிருந்து ஜெயமாய் காத்திடுவார். ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Saturday, November 5, 2011

நம்மை கன்மலையின் மேல் உயர்த்துவார்!

TEXT:  சங்கீதம்.27:5

"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்"

அன்பானவர்களுக்கு இனிய ஸ்தோத்திரங்கள், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நன்மைகளை பெற்றுக் கொள்ள கடுமையாக உழைக்கிறோம், ஆனால் பல வேளைகளில் நம் உழைப்பில் தடைகளை சந்திக்கிறோம், ஏன் தடைகள் வருகிறது? தடைகள் வரக் காரணமென்ன?

1.பேதுரு.5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல், எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடி சுற்றி திரிகிறான்.

நம் வாழ்வில் தடைகளை பிசாசானவன் ஏற்படுத்துகிறான். பிசாசு என்றால் ஆவியோ, பேயோ அல்ல, எங்கோ இருக்கிற ஒரு சக்தி என்றும் நினைக்காதீர், நம்மை சுற்றி இருக்கிற மனிதரை கொண்டே அவன் செயலாற்றுகிறான். எனவேதான் பேதுரு எப்போதும் ஆண்டவரை விசுவாசிக்கிற‌ நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவன் நோக்கமே நம்மை விழுங்குவதுதான்.

தாவீதின் வாழ்வில் அவன் சத்துருவாக பெலிஸ்தியர்கள் இருந்தார்கள், ஆனால் பெலிஸ்தியர் மட்டும் அவன் எதிரியல்லவே, அவன் சொந்த இனத்தானாகிய சவுலும் அவனுக்கு எதிரியாய் இருந்தானே!!!.. எப்பக்கமும் சத்துருவினால் சூழப்பட்டவனாய், எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்துப் போகக்கூடிய ஆபத்தான வாழ்க்கை அவனுக்கு இருந்ததே அதை நாம் மறுக்க முடியுமா? இப்படியே பிசாசானவன் நம்மை நம் வளர்ச்சியை, கெடுக்க நம் வாழ்வை விழுங்கிவிட நம்மை சுற்றியுள்ளோரைக் கொண்டே நம்மை சுற்றி வருகிறான்.

அதற்காக நாம் பயந்துவிட வேண்டியதில்லை, பேதுரு சொல்வது போல விழிப்புள்ளவர்களாய் இருந்தால் போதும். எப்படி விழிப்புள்ளவர்களாய் இருப்பது? அதற்கும் தாவீதே தன் அனுபவத்தில் நமக்கு கற்றுத் தருகிறார்.
சங்கீதம்.27:4 ல் நான் ஒன்றை கர்த்தரிடம் கேட்டேன் அதையே நாடுவேன்.. என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் என்று கூறுகிறார். அதாவது அவர் கொடிய பிரச்சினைகளில் சிக்கி தவித்தாலும், கர்த்தரை நோக்கி பார்ப்பதும், அவர் சமூகத்தில் விசுவாசத்தோடு காத்திருப்பதுமே தனக்கு முக்கியம் என்கிறார். அது மட்டும்தான் என் தேடல் என்கிறார். அதன் பலன்தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி. தீங்கு நாள் வரும்போதெல்லாம் அவர் தமது கூடாரத்தில் மறைத்து பாதுகாத்தார்.

அன்பானவர்களே, இவ்வுலகம் நமக்கு தீமை செய்யும், நாம் பயப்பட வேண்டியதில்லை, விழிப்பாய் இருந்தால் போதும். அவரை பற்றுகிற உறுதியான விசுவாசத்தில் நிலைத்திருப்பதே, அவரை ஆவலாய் நாடித் தேடுவதே நாம் விழிப்பாயிருப்பதாகும். அவர் நம்மை அவருடைய கூடாரத்தில் மறைத்து பாதுகாப்பார். எந்த துன்பமும் நம்மை தீண்டாதபடி நம்மை ஒளித்து பாதுகாப்பார். அதுமட்டுமல்ல அன்பானவர்களே........

நம்மை கன்மலையின் மேல் உயர்த்துவார். நம்மை துன்பத்தில் எப்படி ஒளித்து வைக்கிறாரோ அதே போல சரியான தருணத்தில் நம்மை எல்லா கண்களுக்கும் முன்பாக உயர்த்திக் காட்டுவார். நம் சத்துருக்களுக்கு முன் நம்மை உயர்த்திக் காட்டுவார். தாவீதை வெறுமனே ஒளித்து வைத்தவரல்ல, அவன் சத்துருக்களுக்கு முன்பாகவே அவனை கன்மலையின் மேல் அரசனாக உயர்த்தி வைத்தவர். சந்தோஷமாய் இம்மாதம் முழுதும் விழிப்போடிருப்போம். கிறிஸ்துவில் உயிரையே கொடுத்து மீட்டவர், நம்மை துன்பத்தில் மறைத்து. சரியான தருணத்தில் உயர்த்திக் காட்டுவார். ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Friday, November 4, 2011

சீர்த்திருத்தல் ஓர் இரட்சிப்பின் புதிய வரலாறு



அன்பானவர்களே உங்கள் யாவருக்கும் இனிய ஸ்தோத்திரங்கள், கடந்த 31 ம் தேதி லுத்தரன் திருக்கபைகளிலே சீர்திருத்தல் ஆராதனை கொண்டாடப்பட்டது, ஆனால் இன்று சீர்திருத்தல் பற்றிய ஒரு தெளிவான பார்வை குறைந்து வருகிறது. அனேக திருச்சபைகளில் விசுவாசிகள் ஆர்வமாக பங்கெடுக்கவில்லை என்கிற செய்திதான் பரவலாக இருக்கிறது.

எங்கள் திருச்சபையில் சீர்திருத்தல் ஆராதனையில் பிரசங்கித்த கர்த்தருடைய வார்த்தையை இங்கே பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.

மார்டின் லூத்தர் 1483ம் வருடம் நவம்பர் 10ம் தேதி ஹன்ஸ் லூத்தர், மார்கரெட் அம்மையார் என்பவருக்கு மகனாக பிறந்தவர், இவர்கள் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இவர்கள் மிகவும் ஏழை குடும்பத்தினர், தந்தை ஆரம்பத்தில் கூலி வேலை செய்து பின்னர் படிப்படியாக முன்னேறி நடுத்தர குடும்பமாக தங்களை உயர்த்திக் கொண்டவர். அவரது ஒரே குறிக்கோள் தன் மகனை சிறந்த கல்விமானாக்க வேண்டும் என்பதுதான். எனவே மார்டின் லுத்தரும் சிறப்பாக படித்தார். இலக்கியம், தத்துவம் ஆகிய இரண்டிலும் பட்டம் பெற்றார், அடுத்ததாக அவருடைய தந்தை அவரை சட்டம் படிக்க அனுப்பினார். மார்டின் லுத்தரை ஒரு நீதிபதியாக காணவேண்டும் என்பது ஹன்ஸ் லுத்தரின் கனவு.

ஆனால் மார்டின் லுத்தரின் வாழ்வில் இரண்டு காட்சிகள் அவருக்குள் பெரிய மாறுதலை உண்டாக்கின.

1. ஒருமுறை அவர் வீதியில் நடந்து வரும்போது அன்கால்டு பெர்ன்பர்க் என்ற நாட்டின் இளவரசன் வில்லியமை காண நேர்ந்தது, இளவரசன் எப்படி இருப்பாரோ அப்படி வில்லியம் இல்லை, மாறாக கையில் ஒரு பிச்சை பாத்திரத்தை வைத்துக் கொண்டு வெறும் ஒரு அறைக்கச்சை மட்டும் கட்டிக் கொண்டு, வீடுகள் தோறும் பிச்சை எடுத்து வந்தார். அவர் இரட்சிப்பை பெற துறவியாகிவிட்டதே காரணம் என்பதை மார்டின் லுத்தர் அறிந்தார். ஒரு இளவரசன் ரட்சிப்புக்காய் எவ்வளவு தன்னை அர்பணித்திருக்கிறார் என்பது அவருக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.

2. தேவாலயத்தில் ஒரு படம் கண்டார், அதில் ஒரு அழகான ஓவியம் கப்பல் ஓவியம் இருந்தது, அந்த கப்பலின் மாலுமியாக பரிசுத்தாவியானவர் இருந்தார், கப்பல் பயணிகளாக போப்பும் அனைத்து குருமார்களும் இருந்தனர். கப்பல் மோட்சத்தை நோக்கி பயணிக்கிறது, மக்களெல்லாம், கடலில் தத்தளிக்கின்றனர் அவர்கள் வசதிக்காக, கப்பலில் இருந்து இரட்சணிய கயிறுகள் தொங்கவிடப்பட்டுள்ளது. அதை யார் பிடித்துக் கொள்ளுகிறார்களோ அவர்களும் மோட்சம் நோக்கி பயணிக்கலாம்.

இந்த இரு காட்சிகளும் மோட்சத்திற்கு போக வேண்டுமானால், துறவியாக, அதாவது, ஒரு கிறிஸ்தவ மத குருவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மார்டின் லுத்தரின் உள்ளத்தில் ஆழமாய் விதைத்தது.

மார்டின் லுத்தர் இளைமையில் சிறந்த அறிவாளியாக இருந்தாலும், சரீரத்தில் மிகவும் பெலவீனமானவர். கல்லூரியில் படிக்கிற காலத்தில் ஒருமுறை படுத்த படுக்கையானார், அவர் இறந்து போவார் என அனைவரும் ஏன் அவரும் நினைத்தார். ஆனால் எப்படியோ குணமானார். ஒரு முறை சாலையில் நடந்து வரும்போது ஜெர்மானிய வழக்கப்படி ஒரு வாளை தன்னோடு வைத்துக் கொண்டிருந்தார். திடீரென தவறி விழுந்து அவருடைய வாளே அவரை வெட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளப்பட்டார். இவ்விரு சம்பவங்களும் அவரது உள்ளத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்த, திடீரென அவரது நண்பன் அலெக்ஸ் என்பவர் கொல்லப்பட்டு மரித்து போனார்.

இதனால், தனக்கும் இது போன்ற அகால மரணம் எப்போது வேண்டுமானால் ஏற்படலாம் எனவே உடனடியாக தான் ரட்சிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.

இரட்சிப்பை உடனடியாக பெற வேண்டுமானால், அன்றைய முறைப்படியும், அவர் கண்ட தேவாலாய ஓவியத்தின்படியும் அவர் ஒரு துறவியாக வேண்டும், (கிறிஸ்தவ மத குருவாக) தகப்பனிடத்தில் தன் விருப்பத்தை கூற அவர் கடுமையாக எதிர்த்தார். ஆனால் தகப்பனிடம் சொல்லாமலே போய் துறவி மடத்தில் சேர்ந்தார். ஒரு மாதகாலம் குடும்பத்தார் யாரையும் சந்திக்க வில்லை. தொடர்ந்து மடத்தின் வாழ்வில் ஒன்றிவிட்டார்,

தினசரி பிச்சையெடுத்து வந்து வாழ வேண்டும். சந்தோஷமாக செய்தார், ஆனால் இர்ட்சிப்பின் உத்தரவாதம் கிடைக்கவில்லை. இரவு பகலாக உபவாசமிருந்து ஜெபித்தார். ஒரு முறை நான்கு நாட்க‌ளுக்கு மேல் உபவாசமிருந்து ஜெபித்து மயங்கி விழுந்தார். அறைக் கதவை உடைத்து அவரை பார்த்தனர். சலனமே இல்லாமல் இருந்தார், உடனே அவரை சுற்றி நின்று பாடல்களை பாட அவர் பிழைத்துக் கொண்டார். கடுமையான உபவாசம் ஜெபம் கூட அவரது வாழ்வில் இரட்சிப்பின் உத்தரவாதத்தை தரவில்லை. இறுதியாக குரு அபிஷேகம் பெற்றால் இரட்சிப்பின் உத்தரவாதம் நிச்சயம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்த குரு அபிஷேக நாளும் வந்தது, அவரும் இரட்சிப்பின் முழு உத்தரவாதம் பெற காத்திருந்தார், அந்த நாளில் ஒரு சந்தோஷம் நடந்தது, அவரது தந்தையும் அங்கே வந்தார், அனேக பரிசு பொருட்களையும் கொண்டு வந்தார், மடத்திலுள்ள எல்லாரும் ஆச்சரியப்பட்டனர். அன்று இரவு விருந்து ஆயத்தம் செய்து அதில் ஹன்ஸ் லுத்தரும் கலந்துக் கொள்ள செய்தனர். ஹன்ஸ் லுத்தரும் சந்தோஷமாய் கலந்துக் கொண்டார், அந்த நேரத்தில் ஒரு மூத்த குரு, ஹன்ஸ் லுத்தரை பார்த்து, இப்போதாவது புரிந்துக் கொண்டீர்களா? உங்கள் மகன் எவ்வளவு உன்னதமான முடிவெடுத்திருக்கிறார் என்று சொன்னார்.

அதுவரை அமைதியாக இருந்த ஹன்ஸ் லுத்தர், உடனே தன் மகனை நோக்கி திரும்பி, நீயெல்லாம் ஒரு மகனா? உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணு என்ற கர்த்தருடைய வார்த்தை உனக்கு தெரியாதா? உன் தாய் அங்கே நோயினால் அவதியுறுகிறாள், நான் வயதான காலத்தில் வீட்டு பணிகளை கவனிக்கிறேன், இதையெல்லாம் அறியாத, தாய் தகப்பனை மதிக்காத உனக்கு குரு அபிஷேகம் ஒரு கேடா என்று கடுமையாக திட்டிவிட்டு சென்றுவிட்டார்.

குரு அபிஷேகம் பெற்றால் ரட்சிப்பு நிச்சயம் என்று நினைத்தவருக்கு குரு அபிஷேக நாளிலேயே, அது தவறு என்று கடவுள் புரிய வைத்தார். எனவே அவர் மிகவும் சோர்ந்துப் போனார். ஆனாலும் அவருக்கு இன்னொரு நம்பிக்கை இருந்தது, அந்த நம்பிக்கை யாதெனில், அக்காலத்தில் புனித நகரமாக கருதப்பட்ட ரோம் நகருக்கு சென்றால் நம் பாவம் தொலையும் ரட்சிப்பை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். அடுத்தது ரோமாபுரிக்கும் பயணம் செய்தார். ரோமாபுரி மோட்சத்தின் வாசல் என்று போப்பு மக்கள் மத்தியில் பிரகடன படுத்தி வைத்திருந்தார்.

ரோமாபுரிக்கு சந்தோஷமாய் சென்ற லுத்தர், அங்கே நடக்கும் காட்சிகளை கண்டு, ஒன்றும் விளங்காமல் தவித்தார், காரணம், அங்கே புனித பொருள் வியாபாரம் நடந்தது, அதாவது, சீடர்கள், புனிதர்கள் பயன்படுத்திய, ஆடைகளின் துண்டுகள், சிலுவை மரத்துண்டுகள், அவர்களுடைய தலை முடிகள், என்று எதை எதையோ விற்றனர், அதையெல்லாம் வாங்கி வீட்டில் வைத்தால், பாவம் தீரும் வியாதி தீரும் என்று கூறினர், இதையெல்லாம், லுத்தரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரட்சிப்பை பெற இன்னும் எத்தனையோ கிரியைகள் அங்கே இருந்தது அனைத்திலும் பங்கு கொண்டார் ஆனால் எதிலும் அவருக்கு இரட்சிப்பின் நிச்சயம் கிடைக்கவில்லை.

நொந்து போனவராய் ரோமை விட்டு வெளியேறினார், அக்காலத்தில் இன்னொரு அக்கிரமும் நடந்தது, அது லுத்தரை மேலும் மனதளவில் கடுமையாய் பாதித்தது அதுதான் பாவ மன்னிப்பு சீட்டு வியாபாரம். ஒருவன் பாவம் செய்தால் அதிலிருந்து மன்னிப்பு பெற காசு கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும், அதில் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று எழுதப்பட்டிருக்கும், பாவத்துக்கு தக்கப்படி விலை நிர்ணயிக்கப்படும், இது முன் பதிவின் பேரில் பாவங்கள் நடக்கும் கேவலத்திற்கு விசுவாசிகளை தள்ளியது.

இதையெல்லாம் கண்ட லுத்தர் வேதாகமத்தில் விடை தேடினார், அக்காலத்தில் வேதாகமம் என்பது, காணக்கிடைக்காத பொக்கிஷமாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் அது லத்தீன் மொழியில்தான் இருக்கும், எனவே வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று யாருக்குமே தெரியாது. போப்பு என்ன சொல்லுகிறாரோ அதுதான் வேதமாக இருந்தது. ஆனால் லுத்தரோ லத்தீன் மொழி பயின்று வேதத்தை படிக்கலானார். வேதத்தின் வெளிச்சத்தில் கடவுள் அவருக்கு இரட்சிப்பின் உண்மையை வெளிப்படுத்தினார். அதுதான், ரோமர்.1:17 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். தொடர்ந்து வேதாகமத்தை ஆராய்ந்து அவர் கண்டறிந்த இரட்சிப்பின் இறையியல்தான் கிருபையினால் மட்டும், விசுவாசத்தினால் மட்டும், திருமறையினால் மட்டும், கிறிஸ்துவினால் மட்டும்.

ரட்சிப்பு என்பது இந்த நான்கு வழிமுறைகளில் மட்டும்தான் கிடைக்கும். தன் சுய கிரியைகளில் ரட்சிப்பு கிடைக்குமானால் இவை நான்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே, சுயமாய் இரட்சித்துக் கொள்ளும் திறமை மனிதனுக்கில்லை.

இந்த உண்மைகளை உலகிற்கு அறிவிக்க, இரவு பகலாக வேதாகமத்தை மொழி பெயர்த்தார். அது மட்டுமல்லாமல், எல்லாரும் தாய் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று கூறினார். அதன் பலன் தான் இன்று நம் கரங்களில் வேதாகமமும், இரட்சிப்பும் இருக்கிறது. அவரில்லையேல், இரட்சிப்பை பெரும் விலை கொடுத்தே வாங்க வேண்டியதாயிருந்திருக்கும். வேதாகமத்தை நாம் கண்டிருக்கவே முடியாது. எனவேதான் மார்டின் லுத்தர் நம் கிறிஸ்தவ வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இரட்சிப்பையே அடிமைப்படுத்த நினைத்த கூட்டத்திடமிருந்து மீட்கும் பணியை கடவுள் மார்டின் லுத்தரை கொண்டு நிறைவேற்றினார், எனவெ தான் சீர்திருத்தல் இரட்சிப்பின் புதியவரலாறு.

ஆனால் இன்று இதை நினைவுகூற லுத்தரன் சபைகளிலேயே ஆட்கள் இல்லை என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆடல் பாடல் கொண்டாட்டம் என்றால் குவியும் கூட்டமாக நாமும் மாறிவிட்டோம். இரட்சிப்பை கொண்டாட ஆட்கள் இல்லாமல் போய்விட்டது.  உண்மையை உணருவோம் இரட்சிப்பை கொண்டாடுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Monday, October 31, 2011

உன் துக்க நாட்கள் முடிந்து போம்.

Text : ஏசாயா.60:20b

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம்.

ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போதும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது அது யாதெனில், இந்நாளின் நிகழ்வுகள் அனைத்தும் சுகமாய் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் எல்லா நாளும் சுகமாய் அமைந்துவிடுவதில்லை.

அப்படியானால் எல்லா நாளும் சுகமாய் அமையாதா என்றால் அமையும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அது எப்படி முடியும் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை என்கிறீர்களா. ஆம் அதுவும் உண்மைதான். ஆனால் ஒரு நாள் முழுதும் போராட்டங்களை மட்டுமே சந்தித்தாலும், அந்த நாள் சுகமான நாளாக மாற ஒரு வழி இருக்கிறது.

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்பவர் இரு கரம் நீட்டி நம்மை அழைக்கிறார் நமது சுமைகளை வாங்கிக் கொண்டு சுகத்தை கொடுக்க. ஆம் அவர் எப்போதுமே நாம் பாரத்தோடும் துன்பத்தோடும் இருப்பதை விரும்பாதவர்.

நம்முடைய தியானத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட வசனத்தில் கூட பாபிலோனிய சிறையிருப்பில் இருக்கிறவர்களது துன்பத்தை கண்ட கடவுள் அவர்களது துன்பத்தில் ஏசாயா தீர்க்கதரிசியின் வழியாக ஒரு செய்தி சொல்கிறார் அது உங்கள் துக்க நாட்கள் முடிந்து போகும் என்ற உத்தரவாதம். நான் உங்களுக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பேன் என்ற பாதுகாப்பின் வாக்குறுதியையும் கொடுக்கிறார்.

அவர்களது துன்பத்திற்கு யார் காரணம்? அவர்களேதான் காரணம், அவர்கள் பாவம் செய்தார்கள் அதின் பலனாக துக்கத்திலிருக்கிறார்கள். ஆனால் கடவுளோ, அவர்கள் துன்பத்தை காண சகியாதவராய் இருக்கிறார். காரணம் நம் துன்பத்தை அவர் விரும்பாதவர்.

அன்பானவர்களே உங்கள் வாழ்விலும் இந்நாளை துவங்கும்போது அனேக கவலைகள் இருக்கக் கூடும், ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள்,  நம் கடவுள் நாம் கவலைப்படுவதை விரும்பாதவர் , அது மட்டுமல்ல நித்திய வெளிச்சமாய் நம்மை சந்தோஷத்திற்கு நேராக நடத்துகிறவர் அதையும் தாண்டி நம் துன்பங்களையும் பாரங்களையும், வாங்கிக் கொள்ள நம்மை கரம் நீட்டி அழைக்கிறவர்.

அத்தனை துன்பங்களையும் அவர் கரங்களில் கொடுத்துவிட்டு, உங்கள் துக்கத்தையும் கண்ணீரையும் துடைத்துவிட்டு இந்நாளின் பணிகளை தொடருங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..  இந்நாள்  சுகமான 
நாளாகும்.  ஆமேன். 

ஜெபம்:

அன்புள்ள பரம தகப்பனே இந்த  நாளுக்காய்  நன்றி. இந்த நாள் முழுவதையும் உமது கரத்தில் தருகிறோம், எங்கள் தேவைகளை பொறுப்பெடுத்துக் கொள்ளும். எங்கள் பாரங்களை நீக்கி மகிழ்ச்சியான பாதையில் எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் வேண்டுகிறோம் நல்ல பிதாவே.

Saturday, October 29, 2011

இயேசுவின் குரல்!!!!!!!



அன்பான சகோதர சகோதரிகளே, நண்பர்களே, கர்த்தருடைய பெரிதான கிருபையால் இயேசுவின் குரல் பத்திரிக்கை கடந்த 23 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்டது, ஆலாங்குப்பம் போதக வட்டத்தில் அறுப்பின் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்பட்டது, அந்த நன்றி செலுத்தும் திரு நாளில், இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர் அருள்திரு.ராஜகம்பீரம் அவர்கள் ஜெபித்து வெளியிட்டார், அதன் முதல் பிரதியை அருள்திரு.கிறிஸ்டோபர் நவராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

தற்போது இயேசுவின் குரல் உங்கள் இல்லங்களை தொட ஆயத்தமாயிருக்கிறது. ஆவிக்குரிய பெலன் தரும் கர்த்தருடைய செய்திகளும், வேதவினா போட்டிகளும், சிந்திக்க வைக்கும் சிறுகதைகளும், மேலும் இணையதள ஊழியம், சிறுவர் ஊழியம் போன்றவற்றின் தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன, இப்புத்தகம் பெற்றுக் கொள்ள விரும்புவோர் உடனே உங்கள் முகவரியை எனது மின்னஞ்ச‌லுக்கு அனுப்புங்கள்,

மின்னஞ்சல் முகவரி: jesusblessings65@yahoo.in

கடிதங்கள் வாயிலாக தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி;

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
ஆசீர்வாத இல்லம்
ஏ.பி நகர் செட்டியப்பனூர் அஞ்சல்
வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்
635751.

Thursday, October 27, 2011

இயேசு அற்புதர்!!!!

Text: சங்கீதம்.37:4.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

சகோ.ரூபன் & நம் குழுவில் இணைந்த புதிய சகோதரன்.

 அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே  உங்களை வாழ்த்துகிறேன், கடந்த 15 ம் தேதி வேலூரில், வள்ளலார் நகரில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற ஆதரவற்றோர் சிறுவர் விடுதியில் நமது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்கெனவே இதை நீங்கள் அறிவீர்கள். அன்று கர்த்தர் ஒரு பெரிய சங்கட‌த்தில் மிக அற்புதமாக நடத்தினார்.

அதாவது நம் சிறுவர் கொண்டாட்ட குழுவில் சகோதரர்.ரூபன் என்பவர் மிகவும் ஊழிய அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார், அவர்தான் அந்த விடுதி அங்கே இருப்பதை கண்டறிந்து சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்று வ‌ந்தார். எனக்கு தெரிவித்ததும் உடனே அதற்கான ஏற்பாடுகளை இரண்டு நாளில் துரிதமாக செய்தேன்.

குழுவின் அனைத்து சகோதரர்களையும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகும்படி கூறினேன். எல்லாரும் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டார்கள். 15 ம் தேதி காலை மீண்டும் அனைவரையும் தொடர்புக் கொண்டேன், எங்கே ஒன்றுக் கூட வேண்டும் என்பதை அறிவிக்க, ஆனால் யாருமே என் அழைப்பை எடுக்கவில்லை. எனக்கு ஒருவித சங்கடம் ஏற்பட்டது, காரணம் நாங்கள் அந்த விடுதிக்கு 10 மணிக்கு வருவதாக அறிவித்திருந்தோம், 10 மணிக்கு அங்கே போக வேண்டுமென்றால் ஆம்பூரிலிருந்து 8.30 மணிக்கே புறப்பட வேண்டும், ஆனால் 8 மணிவரை யாருமே என் தொலை பேசி அழைப்பை எடுக்கவில்லை. கடைசியாக சகோதரர் ரூபனை தொடர்புக் கொண்ட போது அவர் தெரிவித்த செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

காரணம் நம் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு முக்கிய வேலை இருப்பதாகவும், யாருமே இப்போது வர ஆயத்தமில்லை என்றும் கூறினார், நீங்கள் ஆயத்தமா? என்றேன் நான்  ஆயத்தமாயிருக்கிறேன் அண்ணா என்றார். உடனே ஆயத்தமாயிரு நாம் போகலாம் என்றேன். உடனே ஆண்டவரை நோக்கி ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்தேன், ஆண்டவரே இது உமது பணி நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டு விசுவாசத்தோடு ஆயத்தமானேன்.

8.30 க்கு வாணியம்பாடியிலிருந்து புறப்பட்டேன், 9 மணிக்கு ஆம்பூரை அடைந்தேன். அங்கே கண்ட காட்சி எனக்கு ஆச்சரியம் சகோதரர்.ரூபன் 6 சகோதரர்களோடு நின்றார். அதில் புதிதாக சகோதரர்கள் இருந்தனர். அவர்களோடு பேசக்கூட நேரமில்லை. உடனே புறப்பட்டோம். விடுதியை அடைந்தோம்.

பயிற்சியே பெறாத புதிய சகோதரர்களுக்கு எப்படி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று ஒரே முறை கற்றுக் கொடுத்தேன், அற்புதமாய் சகோதரர்கள் வெகு சிறப்பாக நடத்தினர். பிள்ளைகள் மெய்மறந்து ஆண்டவரை மகிமைப்படுத்தினர். நிகழ்ச்சியின் சிறப்பை பாராட்ட ஒரு குழந்தை தானாக முன் வந்து ஜெபித்தது எங்கள் குழுவினரை பெரிய உற்சாகமடைய வைத்தது.
 
நம் குழுவிற்காய் ஜெபித்த குழந்தை

எவ்வளவு அற்புதம், ஆண்டவர் ஊழியம் தடைபடாமல் இருக்க வேறு சகோதரர்களை ஆயத்தம் செய்தார். மேலான அற்புதம் என்னவென்றால், இந்நிகழ்ச்சிகள், நடத்த இரண்டு வாரங்கள் பயிற்சியெடுத்தோம், ஆனால் அன்று ஓரிரு நிமிட பயிற்சியில் புதிய சகோதரர்கள் கலக்கிவிட்டார்கள். இதுதான் கர்த்தரின் வழி  நடத்தல்.

அதைதான் இங்கே சங்கீதக்காரன் மிக தெளிவாக கூறுகிறார் அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார் என்று.. எவ்வளவு பெரிய உண்மை..

இப்போது நானும் குழுவின‌ரும் ஒரு உண்மையை புரிந்துக் கொண்டாட்டம், இந்த ஊழியத்தை நடத்துவது நாங்கள் அல்ல, நமதாண்டவர். நாங்கள் நினைத்தாலும் இவ்வூழியத்தை தடை செய்ய முடியாது. அதே நேரத்தில் மன மகிழ்ச்சியோடு இதை செய்யும்போது, அதின் தேவைகள் அனைத்தையும் அவர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்.

கதை நேரம்

அன்பானவர்களே உங்கள் வாழ்விலும் சந்திக்கிற தடைகளை கண்டு அஞ்சாதீர், அற்புதமாய் நடத்துகிற கடவுளிடம் ஜெபித்து தேவைகளை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு மனமகிழ்ச்சியாயிருங்கள், கர்த்தர்
பார்த்துக் கொள்வார். ஆமேன்.

ஜெபம்:

தேவைகளில் எங்கள் பட்சம் நிற்கும் எங்கள் அன்பின் பரம தகப்பனே, எங்கள் தேவைகளை நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும், சரியான நேரத்தில் அவைகளை நிறைவேற்றி எங்களை உமது அற்புத பாதுகாப்பினால் வழி நடத்தும். இப்போதும் உம்மண்டை மனமகிழ்ச்சியோடு தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கிற அனைவரின் தேவைகளையும் நிறைவாக்கும் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, October 26, 2011

இயேசுவே உலகின் ஒளி

Text: மத்தேயு. 4:15

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது..


அன்பான உடன் விசுவாசிகளே உங்களை இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். இவ்வுலகின் இரட்சகர், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தை எங்கே துவங்கினார் தெரியுமா? கலிலேயா என்கிற பகுதியில். கலிலேயா என்பது ஏழைகளும், எளியவர்களும் வாழ்ந்த பகுதி. அக்கால மக்கள் கலிலேயர்களை மிகவும் தாழ்வாக கருதினர். ஆனால் ஆண்டவரோ அவர்கள் மத்தியில்தான் தன் ஊழியத்தை துவங்கினார்.


இந்த காட்சியைதான் மத்தேயு சுவிசேஷகர் மேற்கண்ட வசனத்தில் அழகாய் விளக்குகிறார், இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று.. காரணம் அவ்ர்கள் வாழ்க்கை தரம் அப்படி.

நம்முடைய வாழ்வும் ஏதோ ஒரு இருளில் தான் சிக்கியிருக்கிறது. பாவம், வறுமை, வியாதி, பிசாசு, போன்ற ஏதோ ஒரு இருள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது. ஆனால் எந்த இருள் நம்மை ஆட்கொண்டிருந்தாலும், கிறிஸ்துவாகிய உலகின் மெய்யான ஒளி நம்மில் வீசும்போது நாம் ஒளியின் சந்ததியாகிறோம். நம்மை ஆட்கொண்டிருக்கிற இருள் விலகியோடுகிறது.

அன்பானவர்களே இந்த‌ காலை வேளையில் கிறிஸ்துவாகிய மெய்யான உலகின் ஒளி நம்மேல் உதிக்கிறார்,  நம்மை சூழ்ந்திருக்கிற எந்த இருளும் இபோதே நம்மை விட்டு அகன்று போகிறது. தைரியமாய்  இந்நாளை துவங்குவோம், கிறிஸ்துவின் வெளிச்சத்தில் துணிவுடன் சந்தோஷமாய் நடப்போம் ஆமென்.

ஜெபம்:

அன்புள்ள கடவுளே, மெய்யான ஒளியாம் இயேசு இந்த காலையில் எங்கள் மேல் உதித்தற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம், அவரது வெளிச்சத்தில், துணிவுடன் இருளான துன்பங்களை மேற்கொண்டு வாழவும், சந்தோஷம் எங்கள் உள்ளத்தை ஆட்கொள்ளவும் எங்களை வழிந‌டத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, October 25, 2011

இயேசுவின் வருகை நெருங்கிவிட்டதோ!!!!


1990 - 2011

Largest EarthquakesDeadliest Earthquakes
YearDateMagnitudeFatalitiesRegionYearDateMagnitudeFatalitiesRegion
201103/119.020896Near the East Coast of Honshu, Japan201103/119.020896Near the East Coast of Honshu, Japan
201002/278.8507Offshore Maule, Chile201001/127.0316000Haiti
200909/298.1192Samoa Islands region200909/307.51117Southern Sumatra, Indonesia
200805/127.987587Eastern Sichuan, China200805/127.987587Eastern Sichuan, China
200709/128.525Southern Sumatera, Indonesia200708/158.0514Near the Coast of Central Peru
200611/158.30Kuril Islands200605/266.35749Java, Indonesia
200503/288.61313Northern Sumatra, Indonesia200510/087.680361Pakistan
200412/269.1227898Off West Coast of Northern Sumatra200412/269.1227898Off West Coast of Northern Sumatra
200309/258.30Hokkaido, Japan Region200312/266.631000Southeastern Iran
200211/037.90Central Alaska200203/256.11000Hindu Kush Region, Afghanistan
200106/238.4138Near Coast of Peru200101/267.720023India
200011/168.02New Ireland Region, P.N.G.200006/047.9103Southern Sumatera, Indonesia
199909/207.72297Taiwan199908/177.617118Turkey
199803/258.10Balleny Islands Region199805/306.64000Afghanistan-Tajikistan Border Region
199710/147.80South of Fiji Islands199705/107.31572Northern Iran
199712/057.80Near East Coast of Kamchatka1997
199602/178.2166Irian Jaya Region Indonesia199602/036.6322Yunnan, China
199507/308.03Near Coast of Northern Chile199501/166.95530Kobe, Japan
199510/098.049Near Coast of Jalisco Mexico1995
199410/048.311Kuril Islands199406/066.8795Colombia
199308/087.80South of Mariana Islands199309/296.29748India
199212/127.82519Flores Region, Indonesia199212/127.82519Flores Region, Indonesia
199104/227.675Costa Rica199110/196.82000Northern India
199112/227.60Kuril Islands1991
199007/167.71621Luzon, Philippine Islands199006/207.450000Iran

அன்பானவர்களே, மேலே இருக்கும் பட்டியல் கடந்த 1990 ம் ஆண்டு முதல், இந்த ஆண்டு வரை நிகழ்ந்த மிக்ப்பெரிய பூகம்பங்களும், மரணங்களும் குறித்த தகவல் அறிக்கையாகும். இதை சற்று கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மையை நாம் புரிந்துக் கொள்ள முடியும், மரணங்களின் எண்ணிக்கை ஏற்ற இரக்கத்தோடு காணப்படும் அதே வேளையில் படிப்படியாக உயர்ந்து வருவதை தெளிவாக காணலாம்.


Turkey earthquake
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஒரே ஆண்டில், மிக அதிகமான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதை பற்றிய தகவல்களுக்கு கீழே உள்ள லின்கில் சென்று காணுங்கள். (http://theextinctionprotocol.wordpress.com/2011/07/12/2011-on-target-for-most-earthquakes-recorded-in-12-years/)

இதை முதலில் காணும்போது எனக்குள் ஏற்பட்ட அச்சத்தை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. நேற்று காலை கூட துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இவையெல்லாம் எதை காட்டுகிறது? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? பூகம்பம் வழக்கமானது என்றால் ஏன் அதிகரிக்க வேண்டும்? இதுவரை பூகம்பம் ஏற்படாத இடங்களில் கூட பூகம்பங்கள் நடக்கின்றனவே..

காரணங்கள் சொல்வதற்கு நான் கடவுளல்ல ஆனால், கடவுள் வேதத்தில் சில காரணங்க‌ளை கூறியுள்ளார்.

ம‌த் 24:7" ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும் , கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இட‌ங்க‌ளில் உண்டாகும்.

மாற்கு 13:8 " ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், ...

லூக்கா 21:11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்...

உண்மைதான் இயேசு ஆண்டவர் வருவதற்கு அவரே சொன்ன
அடையாளங்களில் முக்கியமானது பூகம்பம்.

என்ன செய்ய போகிறோம்?????

இயேசு ஆண்டவரை சந்திக்க ஆயத்தமா? இந்த  காலையில் அவருக்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். அவரை சந்திக்க ஆயத்தப்படுவோம்.

ஜெபம் :

அன்புள்ள பரம தகப்பனே, நேற்றுக் காலை துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களை உமது கரத்தில் சமர்ப்பிக்கிறோம்
வீடுகளை, உறவுகளை இழந்து வாடுவோரை கண்ணோக்கும், உமது மேலான பாதுகாப்பில் அவர்களை ஆட்கொள்ளும், தொடர்ச்சியான பின் நில அதிர்வுகளில் எவ்வித ஆபத்தும் நேரா வண்ணம் அவர்களை காத்தருளும். இவ்வடையாளங்கள் எங்களை உம்மை சந்திக்க ஆயத்தப்படுத்துகிறதை நாங்கள் உணருகிறோம், எனவே சக மனிதரை நேசித்து வருங்காலத்தை நாங்கள் ஆதாயப்படுத்திக் கொள்ள எங்களுக்கு இக்காலையில் இயேசுவின் வழியாய் பலன் தாரும் ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews