WORD OF GOD

WORD OF GOD

Saturday, October 29, 2011

இயேசுவின் குரல்!!!!!!!



அன்பான சகோதர சகோதரிகளே, நண்பர்களே, கர்த்தருடைய பெரிதான கிருபையால் இயேசுவின் குரல் பத்திரிக்கை கடந்த 23 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்டது, ஆலாங்குப்பம் போதக வட்டத்தில் அறுப்பின் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்பட்டது, அந்த நன்றி செலுத்தும் திரு நாளில், இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர் அருள்திரு.ராஜகம்பீரம் அவர்கள் ஜெபித்து வெளியிட்டார், அதன் முதல் பிரதியை அருள்திரு.கிறிஸ்டோபர் நவராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

தற்போது இயேசுவின் குரல் உங்கள் இல்லங்களை தொட ஆயத்தமாயிருக்கிறது. ஆவிக்குரிய பெலன் தரும் கர்த்தருடைய செய்திகளும், வேதவினா போட்டிகளும், சிந்திக்க வைக்கும் சிறுகதைகளும், மேலும் இணையதள ஊழியம், சிறுவர் ஊழியம் போன்றவற்றின் தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன, இப்புத்தகம் பெற்றுக் கொள்ள விரும்புவோர் உடனே உங்கள் முகவரியை எனது மின்னஞ்ச‌லுக்கு அனுப்புங்கள்,

மின்னஞ்சல் முகவரி: jesusblessings65@yahoo.in

கடிதங்கள் வாயிலாக தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி;

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
ஆசீர்வாத இல்லம்
ஏ.பி நகர் செட்டியப்பனூர் அஞ்சல்
வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்
635751.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews