WORD OF GOD

WORD OF GOD

Monday, October 3, 2011

தீங்கை காணமாட்டோம்

செப்பனியா.3:15

கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்

அன்பான சகோதர சகோதரிகளே, எனது நண்பர் ஒருவர், புதிதாக ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர், அவர் ஒரு அரசு பணியாளர்.  கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு பணி செய்கிற இடத்திலே அவருக்கு அனேக பிரச்சினைகள், ஏற்பட்டது. பல முறை சோர்வடைந்து என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அதை எனக்கு தெரிவித்தார். அப்போதெல்லாம் நான் அவருக்கு அறிவித்த வசனம் இதுதான்.

இன்னும் அதே போராட்டத்தில்தான் இருக்கிறார், ஆனால் தீங்கு அவரை தொட முடியவில்லை, எத்தனையோபேர் அவருக்கு தீங்கு செய்ய நினைத்தும், அவர் ஜெயமாய் நிற்கிறார். கிறிஸ்துவை நம்புகிறவர்களின் வாழ்வின் சிறப்பு இதுதான்.

இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று மத்தேயு.18:20 ல் ஆண்டவர் கூறியிருக்கிறாரே, ஆம் அவர் நாம் தனியாய் இருக்கும்போதும் நம்மோடு இருப்பவர்.

உங்கள் வாழ்விலும் தீங்கு செய்வோர் உங்களை தொடரலாம், உங்கள் மனம் புண்படும்படி உங்களை அவமானத்துக்கு உள்ளாக்கலாம், நம் வெற்றியை பறிக்க  அவர்கள் திட்டமிடலாம், எத்தனை நாள்தான் இதை சகிப்பது என்று சோர்ந்துவிடாதீர்கள், மரணத்தையே ஜெயித்து பிசாசையும், பாவத்தையும் தன காலடியில் போட்டு அதன் தலையை நசுக்கிய  ஜெயவீரர் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து நம் நடுவில் இருக்கிறார். தீங்கு நம்மை தொடராமல் தீமை நம்மேல் பற்றாமல் நம்மை காத்தருள்வார்.

இனி நாம் தீமை செய்வோரையும், அவர்களுக்கு  நேரப்போவதையும் காண்போம், ஆனால் தீங்கை காணமாட்டோம். கடவுள் நம் நடுவில் பரிசுத்த ஆவியாய், அக்கினி மயமாய் நின்று காத்திடுவார். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews