WORD OF GOD

WORD OF GOD

Thursday, September 29, 2011

உயர்வு தரும் ஆண்டவர்

I சாமுவேல் 2 :8

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்."

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பிற்கினிய ஸ்தோத்திரங்கள். 
அன்னாள் பிள்ளையில்லாமல் அவமானங்களையும் வேதனைகளையும் சந்தித்து வாழ்ந்தவள். ஆனால் தன வேதனையிலும், அவமானத்திலும்  ஆண்டவர் ஒரு குழந்தையை கொடுப்பார் என்ற விசுவாசத்தை மட்டும் விடாமல் பற்றிக் கொண்டிருந்தாள். ஆபிரகாமுக்கு 100 வயதில் பிள்ளை வரம் கொடுத்தவரல்லவா அவர். எனவே தேவாலயம் வந்து இறைவனை மன்றாடி விசுவாசத்தோடு வேண்டினாள். ஆண்டவரின் அவளுக்கு பிள்ளை கொடுத்தார். அன்பானவர்களே பிள்ளை வரம் வேண்டி நிற்போரே விரக்தியடையாதீர், ஆண்டவரிடம்  மன்றாடுங்கள், அவரில் விசுவாசமாய் இருங்கள் அவரே காரியத்தை வாய்க்க செய்வார்.

அன்னாள் தனக்கு பிள்ளை பிறந்த பிறகு, தனது வேண்டுதலை நிறைவேற்ற, தன மகனை ஊழியத்திற்கு அர்ப்பணிக்க, தேவாலயத்திற்கு அவனை கொண்டு வந்து, ஆண்டவரின் வசம் அவனை ஒப்புக் கொடுத்துவிட்டு, ஆண்டவருக்கு நன்றி செலுத்தி அவள் எறேடுக்கிற ஜெபம்தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.

இந்த ஜெபத்தில் குறிப்பாக நாம் தியானிக்கிற வசனத்தில் அவள் சாட்சியாக சொல்லுகிற விஷயம், எளியவனை கடவுள் உயர்த்தி, பிரபுக்களோடும் அதிபதிகளோடும் உட்கார வைப்பார் என்பதே. அதற்கு காரணம் பூமியனைத்தும் அவருடையதே.

அப்படியானால் என்ன அர்த்தம் இந்த பூமியனைத்தும் அவருடையது, இங்கே அவர் எதை செய்ய விரும்புகிறாரோ அதை அவர் நிறைவேற்றுகிறார். எனவே நாம் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறோம், நம் தேவைகளும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, அவரை மிஞ்சி இவ்வுலகில் எதையும் நாம் பெற்றுவிட முடியாது.

எனவே, நம்  வாழ்வில் நம்மை உயர்த்த வேண்டும் என்பது அவருடைய 
சித்தமாய் இருப்பின் யார் அதை தடுக்க முடியும்? அன்னாள் பிள்ளை இல்லாமல் மலடி என்று அனைவராலும், அற்பமாய் எண்ணப்பட்டபோது, அவள் விசுவாசத்தை விடாமல், அனைத்தையும் அருளும் ஆண்டவரை பற்றி  பிடித்து அவள் தேவையை பெற்றுக் கொண்டாள்.

துன்பங்கள் சிறுமை படுத்துகிறதா? அனேக வலியவர்களுக்கு முன்னாள், எளியவர்களாய் கூனி குறுகி நிற்கிற நிலை இருக்கிறதா? சோர்ந்து போகாதீர்கள், சிறுமையும் எளிமையுமானவனை உயர்த்துகிற ஆண்டவர் நம் பட்சத்திலிருக்கிறார். பூமியின் அஸ்திபாரங்கள் அவருடையது. அவர் நம்மை உயார்த்தி  நம்மை மேற்கொண்ட வலியவனுக்கு நிகராய், அவர்களோடு உட்கார வைப்பார். அதற்காகவே மேலான பரலோக வாழ்வை விட்டு, தாழ்வான மனித சரீரத்தில் வெளிப்பட்டு, கொடூரமான சிலுவை தூக்கி, மரணம் வரை தன்னை தாழ்த்தினார், நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்து, நம்மை உயர்த்த இன்றும்  நம்மோடு வாழ்பவர் அவர். இந்த விசுவாசத்தில் தரிந்திருந்து மேன்மைகளை அடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணை புரிவாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews