WORD OF GOD

WORD OF GOD

Thursday, December 29, 2011

The final days of 2011

Text: 1Chronicles.15:29

When the ark of the Lord’s promise came to the City of David, Saul’s daughter Michal looked out of a window and saw King David dancing and celebrating, so she despised him.


Dance is one of the important charactristics of human. Whenever we feel fullness of happy in ourselves we urge to dance. We Indians mostly have shy to dance in public. If any dancing in the street how can we see them, we can think that they may have psychological problem, or they may alcohilics. But we never see them as a normal persons. Because, in our culture, dancing in the street is a sign of indescent. But the same time, we can see many are dancing in our religious festivels, many people dancing before their Idols in festivels. It is very common in India. But the political leaders never dance in public. If any political leader will dance in a religious feativels we never vote them again, because it is not a quality we are expecting from them. We are expecting only the leadership qualities from them.


But here we see in our scripture passage that, the king of Israel dancing in public. why he is dancing? The king and the elders decided that to take the ark of the covenant of the Lord from the Obed-Edom's house to Jerusalem. So the king David got so much happy, and forget all about himself, He is playing music, and dancing before the ark. Before the public he was dancing without any shy. Why the King behave like this? because David always gives important to the God almigty and His words. He clearly know that his power and authority are all nothing before God, only the grace of the God almigty he got this authority, so he didnt care about his authority he give important to the Lord, this is the secret of David's success.


Now we are in the final days of 2011, within a two days we will finish it of. How it happend? how many problems we faced this year, how many accidents we seen this year? how many earthquakes we seen this year? inspite of all theses dangers still we are living with peace. How? only because of the God of david. He is the source of our life and salvation. He is ready to give His life to save us. So inspite of all our New Year celebarations giving most important to the Jesus and waiting for His grace and blessings will definitely give us a blessfull NEW YEAR. Amen.

In Christ.
Rev.Gilbert Asirvatham.

Share your comments ...

Wednesday, December 28, 2011

பாக்கியவான் எவன்?

TEXT. PSALM.1


அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரங்கள், சங்கீதங்கள் பொதுவாக தாவீதின் சங்கீதங்கள் என்று அழைக்கப்பட்டாலும், தாவீது எழுதாத அநேக சங்கீதங்களும் உள்ளன. சங்கீத புத்தகத்தின் முதல் சங்கீதமே, தாவீது எழுதிய சங்கீதம் அல்ல, முதலாம் சங்கீதத்தை எழுதிய ஆசிரியர் யார் என்பதும் தெரியவில்லை. இந்த சங்கீதம் ஞான அறிவுரைகளை கூறும் சங்கீதமாக அமைந்துள்ளது. எனவே இந்த சங்கீதம் ஞான போதனை கீதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சங்கீதத்தில் சங்கீதக்காரன், மனிதர்களின் இருவித வாழ்வையும் அதின் பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்லுகிற முதல்தர வாழ்க்கை என்பது, பொல்லாதவரின் ஆலோசனைபடி நடவாமல், பாவிகளின் வழியில் நில்லாமல், பரிகாசக்காரர் கூட்டத்தில் உட்காராமல், இரவும் பகலும் கர்த்தருடைய வார்த்தையை தியானித்து, அதின்படி வாழ்கிற வாழ்க்கை.


ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்பவர்களே முதல்தர வாழ்க்கை வாழ்பவர்கள். கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை என்பது, தீயவை கேட்காமல், தீயவை பேசாமல், தீயவரோடு அவர் பாதையில் உட்காராமல், தீயவை பின்பற்றாமல், வேதாகமத்தின் படி மட்டுமே வாழ்கிற வாழ்க்கை.

இப்படிப்பட்ட வாழ்வை பின்பற்றுவோருக்கான பலனையும் சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். அவர்கள் ஆற்றோரங்களில் நடப்பட்டிருக்கிற மரத்தை போலிருப்பார்கள். ஆற்றோரத்திலிருக்கிற மரம் எப்படி இருக்கும்? எல்லா காலமும் பருவ காலமாகவே ஆற்றோர மரத்திற்கு இருக்கும், சுத்தமான தண்ணீரும், சுத்தமான காற்றும் குறைவின்றி கிடைப்பதால், அதின் இலைகள் என்றென்றும் பசுமையாகவும், எப்போதும் கனிதருகிற மரமாகவும் யாராலும் அசைக்க முடியாத உறுதியோடும் நிலைத்திருக்கும் அந்த வாழ்க்கை முதல்தர வாழ்வு வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் என்கிறார்.


ஆனால் இரண்டாம் தர வாழ்க்கை இதற்கு நேரெதிரான வாழ்க்கை, தீயவை கண்டு, தீயவை பேசி, தீயவரோடு உறவாடி, தீயவை பின்பற்றி, கர்த்தருக்கு செவி கொடுக்காமல் வாழ்கிற வாழ்க்கை. அதன் பலனை அதிகமாக சங்கீதக்காரன் விளக்கவில்லை இரண்டே வார்த்தைகளில் கூறிவிடுகிறார், அவர்கள் பதரை போலிருப்பார்கள், அவர்கள் வழி பாழாகும்.


அன்பானவர்களே, அவர்கள் பதர் அதாவது தூசிக்கு சம்மானவர்கள், ஊதினால் அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடும், அவர்கள் வாழ்க்கை பாழாகும்.

நம்முடைய பாதை என்ன? நமக்காய் விண்ணரச வாழ்வை விட்டு ஏழைக்கோலமெடுத்து வந்த ஆண்டவரின் உறுதியான பாதையா? அல்லது பாழாய் போகும் பாதையா? யோசிப்போம், வருகிற புத்தாண்டில் எப்பாதையில் நிலைப்பது என்ற முடிவெடுக்க ஆயத்தப்படுவோம். கர்த்தர்தாமே உங்களுக்கு துணை புரிவாராக ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, December 27, 2011

கிறிஸ்துமஸ் செய்தி

TEXT: JOHN.1:14

அன்புக்குரிய இந்த இணைய தளத்தின் வாசகர்களே, உங்கள் யாவரையும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அநேக துன்பங்களும் சோதனைகளும் சில நாள் என்னை பதிவிட விடாமல் தடுத்துவிட்டன, ஆனால் அந்த துன்பங்களோ சோதனைகளோ என்னையா, ஊழியத்தையோ முடக்கிவிடாமல் கர்த்தர் பார்த்துக் கொண்டார். அந்த அனுபவங்களை ஒரு சாட்சியாக விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன். தற்போது கிறிஸ்துமஸ் செய்தியை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற  நான்கு பேர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறை   கூறுகிறார்கள், அந்த நான்கு பெரும் அவரது வாழ்க்கை வரலாற்றை  எழுதுவதற்கு மிகவும் தகுதியானவர்கள், காரணம் நான்கு பேரில் இருவர் இயேசுவின் நேரடியான சீடர்கள், இருவர் பவுலின் சீடர்களாக திருப்பணி செய்தவர்கள். இந்த  நான்கு பேரில் மூவர் ஒரே மாதிரியாக இயேசுவின் வரலாறை எழுதுகின்றனர், ஆனால் யோவான் மட்டும் மிகவும் வித்தியாசமாக எழுதுகிறார். அவரது எழுத்துக்கள் இயேசுவின் வரலாற்றை பிரதிபலிப்பதைவிட அவரது ஆள்தன்மையை  பிரதிபலிப்பதிலேயே கவனாமாக இருப்பதை வாசிக்கும்போது அறியலாம்.

எல்லாரும் (மாற்கு தவிர) இயேசு எங்கே பிறந்தார், அவரது பெற்றோர் யார்? அவர் எந்த ஊரில் பிறந்தார்? அவரது பிறப்பின் போது நடந்த சம்பவங்கள் என்ன என்பதை எழுதுவதில் அக்கறை காட்டுகின்றனர். ஆனால் யோவானோ, அவர் எப்படிப்பட்டவர் என்பதை மட்டுமே கூறுகிறார். அவர் இரண்டு கருத்துருக்களால் மண்ணில் பிறந்த இயேசு பாலன் யார் என்று கூறுகிறார். முதலாவது வார்த்தையானவர் என்றும், இரண்டாவது ஒளியானவர் என்றும் கூறுகிறார். கடவுள் இவ்வுலகை படைக்கும் முன் வார்த்தையாக இருந்தார், அவர் தனது வார்த்தையை கொண்டே இம்முழு பிரபஞ்சத்தையும் படைத்தார். மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல கடவுளுடைய வார்த்தையினாலேயே பிழைப்பான் என்று ஆண்டவர் கூறுகிறார். படைக்கவும், காக்கவும், பிழைப்பூட்டவும் வல்லமை கொண்டது கடவுளுடைய வார்த்தை. அது மாத்திரமல்ல கடவுள் வார்த்தையாகவே இருந்தவர், அவருக்கு உருவமில்லை. இரண்டாவது அவர் ஒளியாக இருந்தார், ஒருவரும் சேரக்கூடாத ஒளி என்று அவரை பற்றி வேதாகமம் கூறுகிறது. அவர் படைத்த சூரியனையே நாம் நெருங்க முடியாதென்றால், அவரை நெருங்க முடியுமோ? எனவேதானே கடவுள் மோசேவிடம் என் முகத்தை கண்டால் நீ சாகவே சாவாய் என்றார்.

அன்பானவர்களே, அவரை நாம் நெருங்குவது சாத்தியமில்லாத காரியம், அவரும் நம்மை நெருங்க முடியாது, காரணம் மனுஷனை நினைப்பதற்கும், மனுஷ குமாரனை கண்ணோக்குவதற்கும் அவன் எம்மாத்திரம். அவர் நம்மை நெருங்கினாலும் நாம் பொசுங்கி போவோம். எனவே நம் மீது அன்பு கொண்ட கடவுள், நம்மையெல்லாம் காக்க, நாம் நெருங்க முடியாத அவரை நெருங்கி சேர, நாம் காணும் வகையில், நாம் தொட்டு உணரும் வகையில், நம்மோடு வாசம் செய்ய சாதாரண மனிதனாய் அவதரித்து பிறந்தார். இனி கடவுள் நமக்கு எட்டாத உயரத்தில் இருப்பவரல்ல, நம்மோடு வாசம் செய்பவர் அதைதான் யோவான், வார்த்தையானவர் மாமிசமானார், கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நம்மோடு வாசம்பண்ணினார் என்று குறிப்பிடுகிறார்.


அன்பானவர்களே, கடவுள் மனிதனாய் பிறந்திருக்கிறார், இனி கவலையை தூக்கியெறியுங்கள், காரணம் அவர் பிறந்த நோக்கம் நம்மை உயர்த்துவது. எதெல்லாம் நம்மை தாழ்த்துகிறதோ அதையெல்லம் நம்மிலிருந்து அகற்ற, பாவம், பிசாசு, மரணம், ஆகியவற்றிலிருந்து நம்மை விடுதலையாக்க விடுதலை வீரர் பிறந்துவிட்டார். மகிழ்வோம், களிகூறுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews