WORD OF GOD

WORD OF GOD

Sunday, September 3, 2017

சோறு இல்லாம கூட இருந்துடுவான் ஆனா செல்போன் இல்லாம இருக்க மாட்டான் என்ற நிலை இன்று உண்டாகிவிட்டது, 

செல்போன் என்பது இன்று மனிதனின் இன்னொரு விரல் என்று கூறுகிறார்கள, செல்போன் இல்லாமல் வாழவே முடியாத நிலைக்கு நாம் வந்திருக்கிறோம், இந்த செல்போன் கொடுக்கும் ஆபத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல, 

இன்று நடைபெறும் பல சாலை விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது, 

மேலும் இது பயன்படுத்துவோரை அதற்கு அடிமையாக்கிவிடுகிறது.  
மொபைல் போன் பயன்படுத்தினால் சரியாக தூக்கம் வராதாம் ஏனென்றால், அதில் உள்ள நிறம், தூக்கத்தை கட்டுபடுத்திவிடும் எனவேதான் இரவில் நீண்ட நேரம் செல்போன் உபயோகிப்பவரை நாம் பார்க்க முடியும். 

புளூ வேல் என்ற விளையாட்டு சிறுவர்களை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி இறுதியில் தற்கொலை செய்ய தூண்டுகிறது. 

ஜூலை மாதம் 17ம் தேதி, நாயக் கதிரேசன் என்ற இராணுவ வீரர், பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தி கொண்டிருப்பதை, அவருடைய உயரதிகாரியான ஷிகார் தாபா என்பவர் பார்த்து பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தவறு என்று கண்டிக்கிறார், அவ்வளவுதான்,  நாயக் கதிரேசன் இதனால் கடும் ஆத்திரம் உண்டாகி தன் கையில் இருந்த ஏகே-47 துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார். 

செய்த குற்றத்தை கண்டிப்பது உயரதிகாரியின் பணி, அதற்கு கீழ்படிய வேண்டியது ஒரு பணியாளரின் கடமை, ஆனால் இன்று யாரும் குற்றத்தை எடுத்து சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக குற்றம் சொன்னவன எப்படி ஒழிக்கலாம்னு திட்டமிடராங்க. 

எரேமியா தீர்க்கதரிசி இதை தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அனுபவித்தவர். எரேமியா தீர்க்கதரிசிக்கு கடவுள் கொடுத்த பொறுப்பு இஸ்ரவேல் மக்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்கள் மனந்திரும்ப வழி நடத்த வேண்டும். ஆனால் யாரும் மனந்திரும்பவில்லை, மாறாக, குற்றத்தை சுட்டிக்காட்டிய எரேமியாவுக்கு அடி 20:2 , உதை, அவமானம், இவைகள்தான் பரிசாக கிடைத்தது. இதை அவர் யாரிடம் சொல்ல முடியும், அவரை அழைத்து கட்டாய படுத்தி கொடுத்த கர்த்தரிடத்தில்தானே சொல்ல முடியும், 

இவ்வாறு, தான் அனுபவிக்கும் வேதனையை கர்த்தருக்கு தெரிவிக்கிற ஜெபம்தான் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதி. 

எப்படி தன் ஜெபத்தை துவங்குகிறார், கர்த்தாவே நீர் இதை அறிவீர் என்று துவங்குகிறார், நாம் ஜெபம் செய்யும்போது ஆண்டவருக்கு தெரியாதுனு நினெச்சி நீண்ட நேரம் விளக்கமா சொல்லிட்டிருப்போம், இல்ல ஆண்டவருக்கு நாம் என்ன கேட்க போகிறோம் என்பது தெளிவாக தெரியும். என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னை துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீதியை சரி கட்டும் என்று துவங்குகிறார், இதற்கு அர்த்தம் என்ன, என்னை துன்பப்படுத்துகிறவர்களை தண்டியும் என்பதே. அடுத்த வசனத்தில்,

அவர் எப்படிப்பட்டவர் என்று கூறுகிறார்..

உம்முடைய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி. என்று கூறுகிறார், அதாவது, அவருடைய வார்த்தைகளை அவர் வேண்டாம் என்று சொல்லவில்லை, மாறாக இந்த வார்த்தைகளை, சொல்லும்போது துன்பப்படுத்துகிறவர்களை தண்டியும் என்பதே அவரது விண்ணப்பம். 

மேலும் அடுத்த வசனத்தில், நான் பரிகாசக்காரர் கூட்டத்தில் களித்ததில்லை, உமது கரத்தினால் தனித்து உட்கார்ந்தேன். அதாவது இவர் மிக இளம் வயதில் திருப்பணிக்கு வந்ததால், அவர் அவர் வயதுக்கு ஒத்த நண்பர்களோடு, இயல்பாக கூடி பேசி மகிழ்ந்ததில்லை என்பதை கூறுகிறார். 

கடவுளின் மீது சில குறைகள்.
1. சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
2. நித்திய ஆறாத காயம்
3. கானல் நீர் - கடவுள்
4. வற்றிப்போகிற தண்ணீர் - கடவுள்

19-21 கடவுளுன் பதில், 

நீ திரும்பினால், சீர்படுத்துவேன். 
அப்படியானால், எரேமியா கடவுளிடம் திரும்பவில்லையா? சீர் கெட்டு போயிருக்கிறாரா?? ஆம் இதை புரிந்துக் கொள்ள, இன்றைய சுவிசேஷ பகுதியை விளங்க வேண்டும். 

மத்தேயு. 16:21-28
 தன் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவிக்கிறார். - பேதுரு அவரை தனியே அழைத்து அவனை கண்டிக்கிறார், உடனே இயேசு பேதுருவை, எனக்கு பின்னாக போ சாத்தானே, என்று பேதுருவை சாத்தான் என்று கடிந்துக் கொண்டார்.. ஏன்??? 

கடவுளுக்கு ஏற்றவைகளை அவன் சிந்திக்கவில்லை. அதாவது இயேசு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறானே, ஆனால் அவர் நன்றாக இருந்தால், நாம் மீட்படைய முடியாதே, அவர் கொடுத்த பொறுப்பை எத்தனை சவால் இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது அவரது கடமை. 

அதேதான் எரேமியாவுக்கும், கடவுள் கொடுத்த பணியை 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews