WORD OF GOD

WORD OF GOD

Monday, November 10, 2014

உண்மை உபவாச கூடுகை




 உபவாச கூடுகை கர்த்தருடைய பெரிதான கிருபையினால் கடந்த

சனிக்கிழமை (8.11.2014) அன்று மாலை 6.30 முதல் 8 மணிவரை சிறப்பாக நடை

 பெற்றது. மூன்று ஏழை விதவை சகோதரிகள் வந்து நமது காணிக்கையை

பொருட்களாக பெற்றுக் கொண்டு கர்த்தருக்கு நன்றி செலுத்தி கடந்து

போனார்கள். நமது ஜெப கூடுகையோடு இணைந்து அருமை சகோதரர் விக்டர்

 அவர்கள் ஒரு குடும்பத்திற்கும்,  தன் பெயரை தெரிவிக்காமல் ஒருவர் இரு

குடும்பங்களையும் தாங்கினார்கள். அநேக விசுவாசிகள் வந்து பங்கெடுத்து

 உற்சாகமாய் ஏழைகளை தாங்க காணிக்கை கொடுத்து தேவ

ஆசிர்வாதத்தோடு கடந்து சென்றார்கள். கர்த்தருக்கு பெரிதான நன்றி. உதவி

 பெற்றுக் கொண்ட சகோதரிகள் திருமதி.பவானி , திருமதி.சாந்தி ,

திருமதி. மகேஸ்வரி இவர்கள் மூவருக்கும் படிக்கிற பிள்ளைகள்

இருக்கிறார்கள் , அவர்களுக்காக அவர்களுடைய பிள்ளைகளுக்காக உங்கள்

 ஜெபங்களில் தாங்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஜெபக்கூடுகையில் ஊழியர் செல்வம் அவர்கள் துதி ஆராதனை

நடத்தினார். மீட்பின் பேழை ஆசிரியரும் ஊழியருமான உதயக்குமார்

அவர்களும், அருள்திரு ஐசக் ஷண்முகம் அவர்களும் பங்கெடுத்து ஜெபித்து

சிறப்பித்தனர்.


    ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்.19:17












Thursday, November 6, 2014

கட்டுரை போட்டி



அன்பான உடன் விசுவாசிகளே, நமது இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் அங்கமாக உள்ள ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தவும், திருச்சபையின்  எதிர்காலத்தை குறித்து சிந்திக்க வைக்கவும் ஓர் எளிய
முயற்சியாக ஒரு கட்டுரை போட்டியை நடத்துகிறோம்.

தலைப்பு : நான் விரும்பும் இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.

இந்த தலைப்பில் 2 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பவும்.

முதல் பரிசு :               500 ரூபாய்
இரண்டாம் பரிசு:       250 ரூபாய்
மூன்றாம் பரிசு:         வேதாகமம்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் www.jesusblessings.blogspot.com என்ற இணைய தளத்திலும் எனது முகனூல் (facebook) பக்கத்திலும் பதிவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.11.2014

வேத வினா போட்டி





அன்பான சகோதர சகோதரிகளே, நமது ஊழியத்தின் சார்பாகவும் மீட்பின் பேழை பத்திரிக்கையின் சார்பாகவும் ஒரு மாபெரும் வேத வினா விடை போட்டி நடக்கவுள்ளது. முதல் பரிசு - 3000 ருபாய் , இரண்டாம் பரிசு - 2000, மூன்றாம் பரிசு - 1000, நுழைவு கட்டணம் ருபாய் 75/-

படிக்க வேண்டியது : மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்.

இடம் : மேல்பட்டி (மீட்பின் பேழை வளாகம்)
                ஆம்பூர் அருகில் வேலூர் மாவட்டம்.

நாள் : 15.11.2014

நேரம் : காலை 10 மணி.

அனைவரும் திரண்டு வந்து பங்கெடுக்கும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews