WORD OF GOD

WORD OF GOD

Thursday, October 9, 2014

உண்மை உபவாச கூடுகை - September-13

    




கிறிஸ்துவுக்குள் அன்புடையீர், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, கடந்த மாத உபவாச கூடுகையானது செப்டம்பர்.13ம் தேதி 2வது சனிக்கிழமை, உங்களது ஜெபத்தாலும், தேவ கிருபையாலும் நிறைவாக நடை பெற்றது. சிறு கூட்டமாய் கூடி வந்தாலும் வந்தவர்கள் யாவரும் கர்த்தரின் பெரிதான கட்டளையை நிறைவேற்றும் மகத்தான கூட்டமாய் உற்சாகமாய் கூடிவந்தனர்.

இந்த சிறியரில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்  என்றும் வாருங்கள் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று அவர் அழைப்பதும்  இத்திருப்பணி செய்வோரைதானே.. 

சகோதரி ஜமீலா அவர்கள் நமது காணிக்கையின் பலனை பெற்றுக் கொண்டார்கள். ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அவர் தன கணவனை இழந்து மூன்று படிக்கும் பிள்ளைகளோடு தன்  வாழ்வில் போராடி வருகிறார்கள். நமது உதவியை  பெற்றுக்கொண்டு கண்ணீரோடு கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். அருக்திரு.ஜான் பெர்னாட்ஷா அவர்களும் ஊழியரும் மீட்பின் பேழை புத்தகத்தின் ஆசிரியருமான உதயகுமார்  அவர்களும் பங்கெடுத்து சிறப்பித்தனர்.




Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews