WORD OF GOD

WORD OF GOD

Saturday, August 16, 2014

உண்மை உபவாச கூடுகை

அன்புக்குரிய  விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள் உங்கள் யாவரையும் மீண்டும் இணையம் வழியாய் சந்திப்பதில் பெரு  மகிழ்ச்சி கொள்ளுகிறேன். நமது உண்மை உபவாச கூடுகை கடந்த 9ம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் வெகு சிறப்பாக நடை பெற்றது. அனேகர் வந்து பங்கெடுத்து தனது ஒரு வேளை உணவுக்கான பணத்தை காணிக்கையாக கொடுத்தனர். நமது உதவிகளை பெற்றுக் கொள்ள சகோதரி .....ராணி (முழு பெயர் வேண்டாமே) அவர்கள் பங்கெடுத்து நமது உதவிகளை பெற்று சென்றனர் அவர்கள் வீட்டிற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை உதவியாக பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் கணவனை இழந்து எச்.ஐ.வி யோடு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாள். இரண்டாவது மகள் மற்றும் மூன்றாவது மகன் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்.

நமது உதவியை பெற்ற சகோதரி இது எனக்கு இறைவன் கொடுத்த பரிசு, நான்கு மாதமாக எந்த வருமானமுமின்றி தவித்த எனக்கு கடவுளே அழைத்து கொடுத்தது போல்  உணர்வதாக கூறினார்கள். நமது சகோதர சகோதரிகளுக்கு அது மன நிறைவை அளித்தது. 

கூடுகைக்கு வராவிட்டாலும் தனது காணிக்கைகளை அனுப்பிய சகோதரி.பிரவீனா (திருப்பத்தூர்) அவர்களுக்கும், எஸ்தர் ஜெபக்குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

 சகோதரிக்காக அனைவரும் ஜெபித்தோம்

சகோதரிக்கு நமது அன்பின் பரிசுகள் 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews