WORD OF GOD

WORD OF GOD

Thursday, April 2, 2015

இரத்ததான முகாம் - 2015

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே, வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டாக நமது மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. இதுவரை நமது இரத்ததான முகாம் வழியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்து இரத்ததானம் செய்துள்ளனர். இந்த ஆண்டு 100 பேரை எதிர்பார்க்கிறோம். கிறிஸ்து நம்மை காக்க தன்  இரத்தம், சதை, உடல், உயிர் யாவும் கொடுத்தாரே, அவரது நாமத்தை பின்பற்றும் நமக்கு இந்த அன்பை பகிர்ந்துக் கொள்ள கட்டளை கொடுத்திருக்கிறாரே. 

பெயரில் அல்ல செயலில் கிறிஸ்தவர்களாய் வாழ்வோம் வாருங்கள்.. 
நாள்: 03.04.2015 புனித வெள்ளி அன்று. 
இடம்: கன்கார்டியா மேல் நிலை பள்ளி - ஆம்பூர் 


உண்மை உபவாச கூடுகை March-2015

அன்பான சகோதர சகோதரிகளே, நமது உண்மை உபவாச கூடுகை வெகு சிறப்பாக நடை பெற்றது. எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள் வந்து நமது உதவியை பெற்றுக் கொண்டார்கள். திரு.செல்வம் ஊழியர் அவர்கள் துதி ஆராதனையில் நம்மை வழி நடத்தினார்கள். 20க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் பங்கு பெற்று கடவுளை மகிமைப் படுத்தினார்கள். ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள், புடவை மற்றும் ஒரு திருமறை அவர்களுக்கு பரிசளித்தோம். மிக்க மகிழ்ச்சியோடு பற்று சென்றார்கள். கர்த்தர் தொடர்ந்து தடையின்றி இக்கூடுகை நடைபெற கிருபை செய்வதற்காய் கர்த்தருக்கு கோடி நன்றிகள். தொடர்ந்து இந்த ஊழியங்களுக்கய் ஜெபிக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 


முகம் மறைக்கப்பட்டுள்ளது 

முகம் மறைக்கப்பட்டுள்ளது 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews