WORD OF GOD

WORD OF GOD

Saturday, April 16, 2011

திருச்சபை தூண்களே வாங்க (கவிதை)

வா! வா!
வாடாத மலரே வா!
வளரும் குழந்தை வா!
உன் பெயர் என்ன?
நகோமியா? சலோமியா?
அன்னாளா? மின்னாளா?
உன்னுடைய பெயர்
என்னவாக இருந்தால்
எனக்கென்ன?

எதை வெகுநேரம்
இப்படி நீ தேடுகிறாய்?
வேத புத்தகத்தையா?
வேகமாய் தேடு
கடுமையாய் முயன்றேனும்
கண்டுபிடி
வாசி வாசி
தொண்டை
வற்றிப்போகும் வரை
வாசித்துக் கொண்டே  இரு

வசனப் பால் பருகி
நீ வளர்ந்திட
வேண்டும் அல்லவா?
வா! வா!
வற்றாத நதியே வா!
மலர்ந்த முகமே வா!
உன் பெயர் என்ன?
சாலமோனா? சாதராக்கா?
சார்லசா ? மோசஸா?
உன்னுடைய பெயர்
என்னவாக இருந்தால்
எனக்கென்ன?

எதை நோக்கி இப்படி
விரைவாக ஓடுகிறாய்
ஆலயத்தையா?
ஓடு ஓடு
கால்கள் கடுக்கும் வரை
ஓடிக்கொண்டே இரு
வசனப்பால் அருந்தி
நீ பலம் கொள்ள
வேண்டும் அல்லவா?

வாங்க! வாங்க! வருங்கால
திருச்சபை தூண்களே வாங்க!
தேடாத திரவியன்களே
விரைந்து வாங்க!
உங்க பெயர் என்ன?
ராபர்ட்டா? நார்பர்ட்டா?
நான்சியா? ஜான்சியா?
உங்க பெயர்
என்னவாக இருந்தால்
எனக்கென்ன?


எங்கிருந்துதான் வருகிறீங்க?
ஒ புரிகிறது
ஞாயிறு பள்ளியில்
இருந்துதானே
நன்று! நன்று!
மிக மிக நன்று!
படிங்க! நல்லா படிங்க!





 
வசனப்பாலில் வாழ்ந்திடுங்க
வளர்ந்திடுங்க வாழ்த்துக்கள்!



சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்



மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews