WORD OF GOD

WORD OF GOD

Saturday, April 23, 2011

உயிர்த்தெழுவோம்

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் எனது இதயபூர்வ கர்த்தர் உயிர்த்தெழுந்த நன்னாள் வாழ்த்துக்கள்.



அன்பானவர்களே, நம் ஆண்டவர் உயிர்த்தெழாமல்   போயிருந்தால் நம் விசுவாசம் பிரயோஜனமில்லாத விசுவாசம். அவர் உயிரோடு இன்றும் வாசமாயிருக்கிறார் என்பதற்கு நாம் சாட்சிகளாய் இருக்கிறோம்.

கல்லறையில் அடக்கம் செய்து காவல் வைத்த பிறகு, ஆண்டவர் கல்லறை பிளக்க உயிரோடு எழுந்தார்.

நாம் ஜெயித்துவிட்டோம் என்று பகல் கனவு கண்ட, போலி சாமியார்களுக்கும்,  மக்களை ஏமாற்றி வஞ்சித்து வாழ்ந்த சமய மற்றும் சமூக தலைவர்களுக்கும் சாவு மணியோசையாக அந்த சப்தம் அமைந்தது.

ஐயோ நேர்மை செத்ததே, உண்மை போனதே, பொய்யும் அதிகார துஷ்ப்ரயோகமும் ஜெயித்ததே என்று கதிகலங்கிப்போன உள்ளங்களுக்கு, சந்தோஷ களிப்பின் தொனியாக கல்லறையை பிளந்து ஆண்டவர் வெளியே வந்தார்.

அன்பானவர்களே, உண்மை, நேர்மை, தூய்மை, மனிதாபிமானம், அன்பு, இவையெல்லாம் பார்த்து பார்த்து நொந்துப்போனது தான் மிச்சம். நாம் இவ்வுலகில் பிழைக்க முடியாது, அடிக்கிறவனும், அடக்குபவனும் தான், இங்கே வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?

இதோ உயிரோடு எழுந்த இயேசு, அவரை பாருங்கள், உண்மை, நேர்மை, தூய்மை, மனிதாபிமானம், அன்பு இவையெல்லாம் ஜெயித்துவிட்டது. பரலோகத்தில் அல்ல, இவ்வுலகத்தில்.

எனவே தைரியமாய் நம் வாழ்வை கிறிஸ்துவின் வழியில் வாழ்வோம், நாம் தான் இவ்வுலகில் ஜெயிக்க போகிறோம். தீமை சக்திகளின் பயத்திலிருந்து உயிர்த்தெழுவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews