WORD OF GOD

WORD OF GOD

Thursday, April 14, 2011

வெற்றி (காலை மன்னா)

அன்பார்ந்த  உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள். இந்த காலை நேரத்தில் உங்களோடு தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை மீகா.4 :10b 

கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.

ஆபத்தை, பிரச்சினைகளை, போராட்டங்களை, வியாதிகளை, சத்துருக்களை, நாம் யாரும் விரும்புவதில்லை. இவைகளிலிருந்து தப்பிப்பதுதான்  நம் குறிக்கோள். ஆனால் இவைகளை அனுபவிக்காமல் மனித வாழ்வை நாம் கடந்துவிட முடியாது. எவ்வளவுதான் எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் நாம் வாழ்ந்தாலும் இந்த பிரச்சினைகளிலிருந்து நாம் தப்பித்துவிட முடியாது.




இவையெல்லாம் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் இவ்வுலகில் வாழ்ந்தப்போது அனுபவித்துள்ளார், அப்படியானால் இதன் தீவிரம் நமக்கு புரிகிறது. எனவே இவைகள் வரவே கூடாது என்பது சாத்தியமில்லாதது. வந்த பிறகு அவைகளை எப்படி எதிர்க்கொள்வது என்பதுதான் முக்கியமானது.


இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்வில் அநேகந்தரம் மிகக் கொடிய பிரச்சனைகளில் சிக்கி சத்துருக்களால் சிதைந்துப்போனவர்கள். தங்கள் பாவத்தின் பலனாக இவைகளை அனுபவித்தனர்.

நம்முடைய தியானப்பகுதியிலும், வரப்போகிற பாபிலோனிய துன்பத்திலிருந்து எப்படி விடுதலையாவது, தங்கள் சத்துருக்களை எப்படி மேற்கொள்வது என்று தெரியாமல் குழம்பி போயிருக்கிற இஸ்ரவேலர்களுக்கு மீகா தீர்க்கதரிசி சொல்லுகிற பதிலைத்தான் காண்கிறோம். கர்த்தர் உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார் என்கிறார்.


நம் வாழ்விலும் சத்துருக்களை நாம் தடுக்க முடியாது ஆனால் அவர்கள் நம்மை மேற்கொள்ள  முடியாமல் தலைதெறிக்க ஓட வைக்க முடியும். ஜெயம் தரும் கிறிஸ்துவின் நாமத்தில் நாம் இதை சாதிக்க முடியும். இந்த விசுவாசத்தோடு நாம் இந்த நாளை துவங்குவோம். கர்த்தர் நம்மை நம் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews