WORD OF GOD

WORD OF GOD

Wednesday, May 11, 2011

இயேசுவின் குரல் கேட்போம்

யோவான்.10 :11 -18 ,



உயிர்த்த இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். நமதாண்டவர், நம் வாழ்வில் நல்ல மேய்ப்பனாக இருக்கிறார். நல்ல மேய்ப்பன் இயேசுகிறிஸ்து, தமது ஆடுகளைக் காக்க,  தமது ஜீவனை தந்தார். நாம் அவருடைய குரலுக்கு செவிகொடுக்க வேண்டும்.

நாம் நமது தலைவர், மேய்ப்பனாக இருக்கிற இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்திருக்கிறோம். அந்த விசுவாசத்தை நாம் அவருடைய குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். இன்றைய நவீன உலகத்தில் தாய் தகப்பன் வார்த்தைகளைப் பிள்ளைகள் கேட்பதில்லை, மதிப்பதுமில்லை இதனால் இன்றைய சமுதாயத்தினரும் சரி, நம்முடைய பெற்றோர்களும் சரி, இயேசுவின் குரல் கேட்க வேண்டும்.

இயேசு ஆடுகளை தனித்தனியாக அறிந்திருக்கிறார்.யோ.10 :27

#இயேசு தன் ஜீவனைத் தந்ததின் மூலம் அன்பை  வெளிப்படுத்தினார்.மத்.26 :53 .

#இதன் மூலம் தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்.யோ.15 :10   ௦

மேய்ப்பன் என்ற வார்த்தை , ஆங்கிலத்தில் Shepherd - Protecter, leader, provider, sustainer, redeanmer. போன்ற அர்த்தங்களில் அறியப்படுகிறது.


நல்ல மேய்ப்பனின் அன்பு தன்னை ஈவாக கொடுத்த அன்பு, தன்னைத்தான் அர்பணித்த அன்பு. இந்தக் கால  கட்டங்களில்  சிலர் நல்ல மேய்ப்பனை விட்டு வெளியே போகிறோம், அவருக்கு செவிக்கொடுப்பதில்லை, சபையை விட்டு போகிறோம். நம்முடைய மேய்ப்பர்களை விட்டு போகிறோம், மற்ற மேய்ப்பர்கள் தன ஜீவனை தராமல் நம் ஜீவனை எடுக்க முயற்சிப்பார்கள். நல்ல மேய்ப்பனின் குரல் கேட்போம், கீழ்படிவோம். வாழ்வோம்.


 
கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews