WORD OF GOD

WORD OF GOD

Tuesday, May 10, 2011

ஆசீர்வாதம் தருபவர்

அன்பானவர்களே உங்கள் யாவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த காலையில் நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட வசனம். உபாகமம்.7:14a

 

சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
நான் எல்லாரையும் விட விசேஷமானவன் என்று சொல்வதை நாம் எல்லாருமே விரும்புவோம், ஆனால் பல நேரங்களில் மற்றவர்களுடைய வாழ்க்கை தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நம்மால், நான் மற்றவர்களை  விட விசேஷமானவன் என்று சொல்ல முடியாது. காரணம் சமூகத்தில், பணபலம், படைபலம், அதிகார பலம் கொண்டவர்களுக்கு முன்னால் நாம் ஒன்றுமே இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

நாம் மாதம் 10000  ரூபாய்க்கு போராடுகிறோம், ஆனால் மாதம் 10  கோடி ருபாய் சாதாரணமாக செலவு செய்யும் செல்வந்தர்கள் இருக்கிறார்கள், தற்போது நடைப்பெற்று வருகிற IPL  கிரிக்கெட் போட்டிகள், நமக்கு பணக்காரர்களின் முகத்தை தெளிவாக காட்டி வருகிறது பணம் சாதரணமாக வாரி இறைக்கப்படுவதை நாம் கண்கூடாக காண்கிறோம். நம்மை அவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதே முட்டாள்தனம், காரணம் அவ்வளவு உயரத்தில் இருகிறார்கள்.

ஆனால் கடவுள் தன் ஜனத்தை பார்த்து கூறுகிற ஆசீர்வாதம், நீ சகல ஜனங்களை பார்க்கிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் என்பதே. இது உண்மைதானா? நம் கடவுளுக்கு பொய் பேச தெரியாதே, அப்படியானால் இது சாத்தியம் தானா?

அன்பானவர்களே, என் வாழ்வில் இதை உண்மையாகவே உணர்கிறேன், நான் இன்னும் ஒரு திருச்சபையில் அங்கீகரிக்கப்பட்ட போதகராக இல்லை, எனக்கென்று ஒரு சம்பளம் இல்லை, ஆனால் ஓடிக்கொண்டிருக்கிறேன், சமாதானமாக, சந்தோஷமாக, உள்ளார்ந்த ஆத்ம திருப்தியோடு, எப்படி? என் கேள்விக்கு ஒரே பதில் தான் நான் என் கடவுளை நம்பி இருக்கிறேன், அவர் என்னை விசேஷமாகவே வைத்திருப்பதாக உணர்கிறேன் இது தொடரும் எனவும் விசுவாசிக்கிறேன்.

ஆனால் இந்த ஆத்மார்த்த திருப்தி  நாம் காணும் செல்வந்தர்களிடத்தில் இல்லை என்பது சத்தியமான உண்மை, இன்றைய நாட்டு நடப்பையும், அரசியல் சூழ்நிலைகளையும் காண்பவர்களுக்கு அது நன்றாக தெரியும் .

உங்கள் வாழ்வில் கடவுள் நிச்சயமாக இந்த வசனத்தின் படி ஆசீர்வதித்து வருவார் என்று நம்புகிறேன், அதை சாட்சியாக கருத்துரையில் பகிர்ந்துக் கொள்ளுங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

3 comments:

  1. தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து இறை ஆசி பெற்றிட ஜெபிக்கிறேன்.

    ReplyDelete
  2. உங்கள் உற்சாகமிக்க கருத்துக்கு நன்றி, தொடர்ந்து பகிருங்கள்.

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews