WORD OF GOD

WORD OF GOD

Wednesday, May 18, 2011

என்னை நோக்கி பாருங்கள்

எபிரெயர்.12 :1 

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். நமது கிறிஸ்தவ
வாழ்வில், அடித்தளம்  இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை என்ற பழமொழி நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.


மத்தேயு.14 :22 -32  ல் உள்ள சம்பவம், நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், சீடர்கள், படகில் இரவு நேரத்தில், அலைமிக்க கடலில் பயணம் செய்கிறார்கள். இரவு நேரம், பயம் திகில், நிறைந்த நேரத்தில், இயேசு கடலின் மீது நடந்து வருகிறார். பேதுரு மட்டும் அவர் இயேசுதான் என்று கண்டுக்கொண்டார். ஆனால் மற்றவர்கள், பயந்தார்கள். பேய் ஆவேசம் என்று அலறினார்கள். பேதுரு இயேசுவிடம், ஆண்டவரே நீரேயானால் நானும் கடலின் மீது நடந்து வர அனுமதியும் என்றார். மாத்திரமல்ல மிகுந்த  சந்தோஷத்தோடு நடந்து போனான், இயேசுவை பார்த்துக் கொண்டு போகும்போது, நம்பிக்கையோடு போனார். ஆனால் கடலையும், அதின் அலைகளையும் பார்த்தான், பயந்தான், விசுவாசம் இழந்தான் கடலில் மூழ்கினான்.


அன்பானவர்களே நாமும் நமது வாழ்வில், துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் வரும்போது இயேசுவின் மீது பார்வையை திருப்புங்கள், நமது ஆண்டவர் நாம் துன்பப்படும்போது  நம்மை அதிகமாய் தாங்கி, விடுவித்து வழி நடத்துகிறார். இயேசுவின் மீது நம்பிக்கை கண்ணை வைத்து வாழ வேண்டும். அவருடைய வாக்குத்தத்தம் நம்மோடு உண்டு. நாம் எங்கே போனாலும் இயேசு நம்மை தொடர்ந்து வருகிறார். பேதுருவை தாங்கி கைத்தூக்கி உயர்த்தியதை போல நம்மை மீட்டு இரட்சித்து வாழ்வு தருகிறார். அவருடைய உயிர்த்தெழுதலின் பலனாய் பாவம், பிசாசு, மரணம், பயம்  இவைகளை வென்று நாம் சாதிக்க பிறந்தவர்கள். அப்பா பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவிகார ஆவியை பெற்றிருக்கிறோம். அவருடைய பிரசன்னம் நம்மோடு உண்டு.

LET US FIX OUR EYES ON JESUS

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews