WORD OF GOD

WORD OF GOD

Monday, May 30, 2011

ஜெபியுங்கள்

அன்பான எனது தள நண்பர்களே உடன் விசுவாசிகளே உங்களோடு ஒரு இனிமையான செய்தியை தற்போது பகிர்ந்துக் கொள்ளுகிறேன். இந்த இணைய தள ஊழியத்தின் வாயிலாக, சிறுவர் ஊழியம் துவங்க வாஞ்சிக்கிறேன். காரணம் தற்போதைய கால போக்கு மிக மோசமாக உள்ளது, கடவுள் பயமும் விசுவாசமும் இல்லாத சந்ததி உருவாகி வருகிறது. இது அடுத்த தலைமுறைக்கும் தொடர நாம் அனுமதிக்க கூடாது, பயபக்தியும் விசுவாசமும் உள்ள தலைமுறையை உருவாக்க வேண்டும். கர்த்தருக்கு பயப்படுவதுதான் ஞானம் என்பதை தெளிவாக அவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் உள்ளது.

ஒன்றை நாம் தெளிவாக மறந்து வருகிறோம், நாம் இன்றைக்கு செல்வத்தில் தழைக்கலாம், வசதி வாய்ப்புகளில் பெருகியிருக்கலாம், ஆனால் ஒரு காலத்தில் இந்த வசனத்தை தவிர வேறொன்றும் நம்மிடத்தில் இல்லாத நிலை இருந்தது, இந்த வசனம் தான் ஒவ்வொன்றாக நமக்கு கொடுத்து வந்தது, ஆனால் இன்றோ வசனத்தை விட்டுவிட்டு அது கொடுத்த செல்வத்தை மட்டும் நாம் பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறோம், அதே போல நமது தலைமுறை நடந்தால் என்னவாகும்? எனவே சிறுவர்கள் உள்ளத்தில் திருவசன விதையை விதைக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கோடு சிறுவர் கொண்டாட்டம் என்ற ஊழியத்தை துவங்க இருக்கிறேன்.

 இதை பற்றி சில நண்பர்களோடு பேசினவுடனே நான் நீ என்று அதன் தேவைகளை முன் வந்து நான் கேட்காமலேயே பொறுப்பெடுத்துக் கொண்டனர் .இதை முதலாவது கிறிஸ்தவ விடுதிகளில் இருக்கும்  மாணவர்களிடையே துவங்க விரும்புகிறோம்.  மாணவர்களுக்கு, தற்சமயம், திருவசன  கதைகள்,  நடனங்கள்,   ஆவிக்குரிய  பாடல்கள், இனிமையான  நாடகங்கள் உள்ளிட்ட மூன்று மணிநேர   ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்ச்சியும், அவர்களை உற்சாகப் படுத்தும் வண்ணமாக  ஒரு நோட்டுபுத்தகம், ஒரு பேனா, ஒரு சோப்பு, போன்றவையும் தர முன் வந்துள்ளோம், எனவே தயவு செய்து அதற்காக ஜெபித்து உங்கள் நல்  ஆதரவை தாருங்கள், உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் எனக்கு அனுப்புங்கள். அது ஊழியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews