WORD OF GOD

WORD OF GOD

Wednesday, May 25, 2011

அற்புதம்


அன்பான சகோதர சகோதரிகளே, இந்த காலை நேரத்தில் இறை மகன் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். சில நாட்களுக்கு முன் என் வாழ்வில்  நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.என் மனைவி தற்போது ஆசிரியர் பயிற்சி இரண்டாம்  ஆண்டு பயின்று வருகிறார்கள். கடந்த மார்ச்சு மாதம் தவக்காலங்களின்   இரண்டாவது வெள்ளிக்கிழமை 25  ம் தேதி, நான் வெள்ளிக் கிழமை மாலை ஆராதனை நடத்துவதற்காக பயணம் செய்துக் கொண்டிருந்தேன், போகிற வழியில் என் மனைவி என்னை தொலை பேசியில் தொடர்புக் கொண்டு, தான் ஆசிரியர் பயிற்சியின் முதலாம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டதாக கூறினார்கள். நன் பேசிவிட்டு தொடர்ந்து ஆராதனைக்கு என் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

அதாவது, என் மனைவி தேர்ச்சி பெற்றால், காணிக்கையாக 1000  ருபாய் திருச்சபைக்கு கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே என்னிடத்தில் கூறியிருந்தது அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது. ஆனால் என்னிடத்தில் 100  ருபாய் தவிர வேறில்லை அப்போது. சரி ஆராதனை முடிந்து சபையார் தரும் காணிக்கை கொண்டு ஏதாகிலும் சிறிதாய் வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிடலாம், காணிக்கை அப்புறம் போட்டுக் கொள்ளலாம் என தீர்மானித்து ஆராதனைக்கு சென்று விட்டேன்.

ஆலயத்திற்குள் போய் அங்கி மாற்றிக் கொண்டு, பலி பீடத்தை நோக்கி,  ஆராதனையை துவங்க  கடந்து போனேன், அப்போது ஒருவர் என்னை நோக்கி வந்து வெளியே நிற்கிற ஒருவர் உங்களை காணவேண்டும் என்று கூறுகிறார் என்றார். நான் உடனே வெளியே வந்தேன், காரணம் நான் ஆராதனை நடத்த வந்திருப்பது எனக்கு ஒப்புவிக்கப்பட்ட திருச்சபைகளில் ஒன்றல்ல, இன்னொரு போதகர், என்னை அங்கு தவக்கால ஆராதனை நடத்த அழைத்திருந்தார். எனவே யாரோ என்னவோ என உடனே வெளியே வந்தேன்.

அங்கே எனக்காக ஒருவர் காத்திருந்தார். அவரது தோற்றத்தில் செல்வந்தராகவும், வார்த்தையில் எளிமை உள்ளவராகவும் என்னோடு பேசினார். அவர் சொன்னது, என் பெயர் ஜோசப் பாஸ்டர்,   இன்று எனக்கு  பிறந்த நாள், என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார், நான் ஜெபிக்க கேட்பார் என்று நினைத்து ஜெபிக்க ஆயத்தமான நேரத்தில் அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு ஜெபிக்கலாமென அவருக்கு வாழ்த்து கூறினேன் அவர் நன்றி சொல்லி என் கரங்களை குலுக்கி காணிக்கை கொடுத்தார்.

நான் அதை என் அங்கியில் வைத்துக் கொண்டு, ஆராதனைக்கு நேரமானதால், அவரை உள்ளே அழைத்துவிட்டு, நான் ஆராதனைக்கு சென்று விட்டேன், ஆராதனை முடிந்து, திருச்சபையார் அன்போடு கொடுத்த காணிக்கையை
பெற்றுக்கொண்டு எதுவும் வாங்காமலேயே  வீட்டிற்கு வந்துவிட்டேன். சரி என் மனைவியிடம் காணிக்கைகளை கொடுக்கலாம் என பிரித்து பார்த்த பொது நான் கர்த்தருக்கு நன்றி என்று வாய் திறந்து துதித்தேன் காரணம்,

அந்த செல்வந்தர் கொடுத்திருந்தது, இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள். நான் தவித்தது 1000  ருபாய் இல்லையே என்று. ஆனால் கர்த்தர் கொடுத்தது 2000   ரூபாய். என் மனைவியிடம் இதை கூறின போது அவரும் ஆண்டவரை துதித்து அந்த இரண்டாயிரம் ரூபாயையும் ஆண்டவருக்கு பெரிதான  மகிழ்ச்சியோடு காணிக்கையாக படைத்தார்.

அன்பானவர்களே, இது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். இதை கர்த்தர் தன் கிருபையால் எனக்கு கொடுத்தார்.  காரணம் பிறகுதான் எனக்கு தெரிந்தது அவர் அந்த திருச்சபையின் விசுவாசியல்ல. யாரோ அந்த வழியில் பயணிப்பவர் ஆலயத்தை கண்டு கிறிஸ்தவர் என்பதாலே தன் பிறந்த நாளுக்காக ஜெபிக்க வந்திருக்கிறார். கடவுள் அவருடைய பிள்ளைகளை போஷிக்க எப்படியெல்லாம் வழி  நடத்துகிறார்.

சரியாக அந்த நாளில், அந்த நேரத்தில், அந்த இடத்தில், சரியாக என்னிடத்தில், என்னுடைய சூழ் நிலையில், நான் கேட்டதை இரண்டு மடங்கு கொடுக்க ஒருவர் வந்ததை என்னால் யதார்த்தமாக  நடந்த சம்பவமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சத்தியமாய் அது நான் விசுவாசிக்கும் என் கிறிஸ்துவாம், இயேசு ஆண்டவரின் அற்புத வழி நடத்துதல்.
இந்த நேரத்தில் ஒரு வசனத்தை நினைவு கூற  விரும்புகிறேன்,   ஏசாயா.51 :3  ல்  ஏசாயா  கூறுகிறார் வனாந்திரத்தை ஏதேனை போலவும், அவாந்திர வெளியை, கர்த்தரின் தோட்டம் போலவும், மாற்றுவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும், துதியும் கீத சத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

எவ்வளவு சத்தியமான வார்த்தை இந்த காலை இந்த வார்த்தையை அனுபவிக்க போகிறம் என்ற விசுவாசத்தோடு இந்த நாளின் பணிகளை துவங்குங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews