WORD OF GOD

WORD OF GOD

Saturday, October 8, 2011

மனம் அமைதி பெற 4


அன்பானவர்களே மனம் அமைதி பெற இப்போது நாம் கற்றுக் கொண்ட முதல் இரு முக்கிய விஷயங்கள். ஒன்று நம் பலம், பலவீனம்  அறிந்துக் ஒப்புக் கொள்ள வேண்டும், நம் சகமனிதனுக்கும், பலம், பலவீனம் உண்டு என்பதை அறிந்து ஒப்புக் கொள்ள வேண்டும்.

 நம் பலமும் நம் பலவீனமும் நம்மோடு இருப்பவை எனவே அதை நாம் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கண்டறிந்து விடலாம், ஆனால் அடுத்தவர்களின் பலம், மற்றும் பலவீனத்தை எப்படி கண்டறிவது? நம் பலத்தையும் பலவீனத்தையும் கண்டறிவதே கடினம் எனும்போது அடுத்தவர்கள் பலம், பலவீனத்தை நாம் கண்டறிய முடியுமா? முடியும், ஆனால் அவ்வளவு எளிதாக கண்டறிந்துவிட முடியாது. எனவே அடுத்தவர்களின் பலம், பலவீனத்தை அறிய ஒரு எளிய வழிமுறையை கற்றுத் தருகிறேன்.


கவனித்தல்

கவனிப்பது என்பது நம் வாழ்வில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக  முக்கியமான குணம்.  கடவுள் நமக்கு இரு கண்களும், இரு காதுகளும் கொடுத்துவிட்டு ஒரே ஒரு வாயை மட்டும் கொடுத்திருப்பது எதற்காக தெரியுமா? குறைவாக பேசி அதிகமாய் கவனிப்பதற்காக.  ஆனால் எப்போதும் நம் கருத்துக்களை பேசுவதிலும், நம் விருப்பங்களை சொல்வதிலேயுமே கவனமாக இருப்போமே தவிர அடுத்தவர்கள் பேசுவதை  கவனிக்க விரும்புவதில்லை.

நாம் கவனிக்க தயாராக இல்லை என்றால் நாம் அடுத்தவர்களை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை என்று அர்த்தம் நாம் அடுத்தவர்களை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை என்றால், அடுத்தவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நம்மால் கண்டறிய  முடியாது. அடுத்தவர்கள் பலத்தையும் பலவீனத்தையும் நம்மால் கண்டறிய  முடியாமல் போனால், நாம் அவர்களோடு நல்லுறவுக் கொள்ளவியலாது, அடுத்தவர்களோடு நமக்கு நல்ல உறவு இல்லை என்றால், நம் மனம் அமைதியாய் இராது.

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; யாக்கோபு.1:19

இந்த வசனம் நமக்கு கற்றுத் தருவது என்ன? கவனியுங்கள் என்பதுதானே, எனவே இன்று நான் உங்களுக்கு ஒரு பயிற்சி தருகிறேன், உங்கள்  நெருங்கிய உறவுகளோடு இன்று  நீங்கள் பேசும்போது, நீங்கள் அதிகமாய் பேசாமல் அவர்கள் பேசுவதை கவனியுங்கள், முழுதாய் கவனியுங்கள். அவர்கள் பேசும்போது குறுக்கிடாமல் கவனியுங்கள். இந்த அனுபவம் எப்படி இருந்தது என கருத்துரையில் சொல்லுங்கள், அதற்கு பிறகு தொடர்ந்து முன்னேறுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews