WORD OF GOD

WORD OF GOD

Monday, October 10, 2011

ஜெப குறிப்புகள்.

இந்த இணையதள ஊழியத்தின், இணையற்ற வாசகர்களே, உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து நீங்கள் பார்ப்பதே இவ்வூழியத்தை நான் இன்னும் விடாமல் செய்ய உதவுகிறது.

நான் பிரபலமான ஊழியனல்ல. ஆனால் நீங்கள் என் ஊழியத்தை அங்கீகரித்திருக்கிறீர்கள். உங்களுடைய ஜெபத்தில்தான் சிறுவர் ஊழியத்தை துவங்கினேன். இம்மாதம் எங்கும் நிகழ்சிகள் நடத்த இயலவில்லை. ஆனால் வருகிற நவம்பர் மாதம் ஆம்பூர் நகரத்துக்கு  அருகே  உள்ள பச்சை குப்பம் பகுதியில்  சிறுவர் ஊழியத்தை நடத்த, பச்சை குப்பம் போதக வட்டத்தின் போதகர் அருள்திரு.மில்டன் அவர்கள்  கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் படி வருகிற நவம்பர் மாதம் 14 ம் தேதி இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை ஆதரவற்றோர் விடுதிகளில் நடத்திய நமது குழு முதன் முறையாக ஒரு கிராமத்திற்கு போக போகிறோம். அதற்காக உங்கள் ஜெபங்களிலே தாங்குங்கள்.


ஜெப குறிப்புகள்.

கிராம பிள்ளைகளின் உள்ளத்திலே ஆண்டவரின் சத்திய வார்த்தைகள் சரியாய் சேரவேண்டும்.

நாம் விதைக்கிற விதை பெரிய  விருட்சமாக வேண்டும்.

கால சூழ் நிலைகள் சரியாய் அமைய வேண்டும்.

நம்மை உற்சாகமாய் அழைத்து ஊக்கப்படுத்துகிற அருள்திரு.மில்டன் அவர்களின் ஊழியமும், குடும்பமும்  போதகவட்ட விசுவாசிகளும்  
ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.

சிறுவர்களுக்கான உதவிகள் செய்ய, தேவைகளை தேவன் சந்திக்க வேண்டும்.

நம் குழுவினரின் ஆரோக்கியம் மற்றும் தேவைகள் தேவன் சந்திக்க வேண்டும்.

தொடர்ந்து குறைந்தது மாதத்திற்கு 150 பிள்ளைகளையாவது நம் குழு சந்திக்க தேவன் உதவ வேண்டும்.

உங்கள் ஜெபத்திற்கு நன்றிகள். தேவனுக்கு ஸ்தோத்திரம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews