WORD OF GOD

WORD OF GOD

Thursday, October 20, 2011

அன்பான உடன் விசுவாசிகளுக்கு இனிய ஸ்தோத்திரங்கள். கடந்த சில நாட்களாக இணைப்பில் பிரச்சினைகள் இருந்ததால் பதிவிட இயலவில்லை. ஆனால் தற்போது மிக முக்கிய செய்திகளோடு வந்திருக்கிறேன், கடந்த 15 ம் தேதி வேலூரில், வள்ளலார் நகரில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற விடுதியில் கர்த்தருடைய கிருபையால் சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைப் பெற்றது.

கடவுளுடைய பெரிதான கிருபையால் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடந்தது. மேலும் பள்ளிக்கூடங்களிலும், கிராமங்களிலும் பல்வேறு இடங்களில் நடத்த அழைப்பு பெற்றிருக்கிறோம். தேவைகளையும் கடவுள் சரியாக சந்திக்கிறார். தொடர்ந்து உங்கள் ஜெபங்களில் எங்களை தாங்குங்கள்.

இன்னொரு சந்தோஷமான செய்தி நம்முடைய அடுத்த ஊழிய படைப்பாக இயேசுவின் குரல் பத்திரிக்கை வருகிற 23 ம் தேதி வெளியிட இருக்கிறோம், இதை மாதந்தோறும் தடையின்றி நடத்த ஜெபியுங்கள். தனி பிரதி 10 ரூபாய் ஆண்டு சந்தா 100 ரூபாய். இந்த புத்தகம் நிச்சயம் உங்கள் ஆன்மீக வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், கர்த்தரின் ஆசீர்வாதங்களை சுமந்து வரும் அவருடைய வார்த்தையாகவும் இருக்கும். வெளி நாட்டில் உள்ளோருக்கு தனி பிரதி 75 ரூபாய். ஆண்டு சந்தா 750 ரூபாய். உங்கள் முகவரியை எனது முகவரிக்கோ அல்லது இமெயில் முகவரிக்கோ அனுப்பினால் உங்களுக்கு மாதந்தோறும் தடையின்றி அனுப்பி வைக்கப்படும்.  தொடர்ந்து இந்த ஊழியங்களுக்காய் ஜெபியுங்கள். நன்றி.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews