WORD OF GOD

WORD OF GOD

Thursday, November 17, 2011

மேன்மை தேடிவரும்!!!!!!!!

Text. Psalm.71:21

என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.


என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு நிறுவனத்திலே பணியாற்றுகிறார், அவர் தன பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர், தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மிக நேர்த்தியாக முடிப்பதில் வல்லவர். அவரது திறைமைக்கு ஏற்ப சவாலான ஒரு பணி அவருக்கு கொடுக்கப்பட்டது, அப்பணியை அவர் மிக கவனமாக மிக திறமையாக குறுகிய காலத்தில் செய்து முடித்தார், அதன் பலன் என்ன தெரியுமா? பொறாமை, அவரோடு பணியாற்றுகிற அனைவருக்கும் அவர் மீது பொறாமை வந்தது, தொடர்ந்து அவருக்கு கிடைக்கவிருந்த பணி உயர்வை தடுக்க அனைத்து வழிகளையும் கையாண்டனர்.

இதுதான் இன்றைய உலகின் நிலை நாம் என்னதான் கஷ்டப்பட்டு இந்த உலகில் நம் திறமையை நிரூபித்தாலும், அதன் பலனான மேன்மையை இந்த உலகம் தருவதில்லை, மாறாக நம் மேன்மையை கெடுக்கப் பார்க்கிறது. இது அனைத்து துறைகளிலும் இருக்கிறது. எப்படிதான் நாம் இந்த பொறாமை நிறைந்த நீதியற்ற சமூகத்தில் மேன்மை பெறுவது??????

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகிற்கு வந்தார்? பாவிகளாகிய நம்மை இரட்சிக்க..

பாவிகளாகிய நாம் இரட்சிப்புக்கு பாத்திரவான்களல்ல, ஆனால் அவரோ, இரட்சிப்புக்கு எந்த தகுதியும் இல்லாத நம்மை இரட்சிப்பின் மேன்மைக்கு தகுதிப்படுத்த இவ்வுலகிற்கு வந்தார். தகுதியே இல்லாத நம்மை தகுதிப்படுத்த அவர் எடுத்த முடிவுதான் கொடூர சிலுவை மரணம், அடுத்தவனை மேன்மைப்படுத்த தன்னை சீரழித்துக் கொண்டார். எவ்வளவு அன்பு... இந்த அன்பின் ஆண்டவர் நமக்கு துணையிருந்தால் அனைத்து மேனமைகளும் நம்மிடம் சராணாகதி அடையுமே!!!!!

எனவேதான் சங்கீதக்காரன் இங்கே என் மேன்மையை பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர் என்று தன் கடவுளில் விசுவாசம் வைக்கிறான்.

காரணம் இந்த சங்கீதத்தின் 10, மற்றும் 11ம்   வசனங்களில் தன்னை சுற்றியிருப்பவர்கள் தனக்கு விரோதமாய் ஆலோசனை செய்வதையும், தன் மேன்மையை கெடுக்க பார்ப்பதையும் தெளிவாய் விளக்குகிறார்.

ஆனாலும் நீர் என்னை மேன்மை படுத்துவீர் என்று ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறார். அன்பானவர்களே, நம் மேன்மையை கெடுக்க நினைக்கிற இவ்வுலகில் நாமும் இந்த வழியில்தான் மேன்மை பெற முடியும். அரிய பொக்கிஷமான இரட்சிப்பை பெறுவதற்கே நம்மை தகுதிப்படுத்தினவர், இந்த உலகின் மேன்மைகளை நமக்கு அருளாதிருப்பதெப்படி..

சந்தோஷமாய் இந்நாளின் பணிகளை தொடருங்கள், விசுவாசமாய் பணியாற்றுங்கள், நம்மை சேர வேண்டிய மேன்மை தேடிவரும். ஆம் என் நண்பர் இப்போது அந்நிறுவனத்தின் மேலாளர்.

கர்த்தர்தாமே இத்திரு வசனங்களை கொண்டு நம்மை மேன்மைப்படுத்தி காப்பாராக ஆமேன்.


 
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews