WORD OF GOD

WORD OF GOD

Wednesday, November 16, 2011

தியானம் இனிதாயிருக்கும்

Text: Psalm.104:34

நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்

காலை தோறும் கண் விழிப்பது கர்த்தரின் கிருபை, இரவின் அந்தகாரம் நம்மை சேதப்படுத்தாமல், தன சுத்த தயவால் ஆண்டவர் நம்மை காத்து, காலை தோறும் நமக்கு புது உயிர் கொடுக்கிறார்.

அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள். நீதிமொழிகள்.8:17 . என்று கடவுள் சாலமோன் ஞானி மூலம்  நமக்கு அறிவிக்கிறார்.  ஒவ்வொரு காலையும் நமக்கு கடவுளின் மகிமையை அறிவிக்கிறது.

எனவே காலை தோறும் அவரை தேடுவது நமக்கு குறைவற்ற நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். எப்படி இறைவனை நாம் தேடுவது அதைதான் தாவீது இன்றைய நம்முடைய தியான பகுதியில் அறிவிக்கிறார்.


நான் அவரை தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும் என்கிறார். ஆம் அன்பானவர்களே, ஒவ்வொரு காலையும் நமக்கு இனிதாயிருக்கும் அவருடைய வார்த்தைகளை தியானிக்கும்போது. காலையில் எழுந்து இனிய ஒரு பாடலின் சில வரிகளை பாடி, ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்து. ஒரே ஒரு வசனம் வாசித்து, அதை தியானித்து, அல்லது நமது தளத்தின் ஒரு தியானத்தை தியானித்து துவங்கும் காலை  எவ்வளவு இனிமையானது?

நான் கர்த்தருக்குள் மகிழுவேன்  என்கிறார், அன்பானவர்களே, இப்படி துவங்குகிற ஒவ்வொரு காலையும், நம்மை கர்த்தருக்குள் மகிழச்  செய்யும். இனி  ஒவ்வொரு காலையும் தவறாமல் தியானத்தோடு துவங்கி   அவருக்குள்  மகிழ்வோம். ஆமென்.  

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews