WORD OF GOD

WORD OF GOD

Friday, November 25, 2011

Text: பிலிப்பியர்.4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு


அன்பானவர்களே வேலூர் மாவட்டத்தில் வடகரை என்ற ஒரு கிராமம் உள்ளது அது மிகவும் பின் தங்கிய கிராமம் பேருந்து வசதி கூட இல்லாத கிராமமாக இன்றளவும் உள்ளது, நான் அங்கே பயிற்சி போதகராக இருந்த காலத்தில் ஊழியம் செய்து வந்தேன். நான் அங்கே ஊழியத்தை துவங்கிய காலத்தில் ஆலயத்திற்கென்று முறையான கட்டிடம் இல்லை, ஓலை கூரை வேய்ந்த கட்டிடத்தில்தான் ஆராதனை நடத்தி வந்தோம்.

ஒரு நாள் ஒரு தாயார், தனது மகனை ஆலயத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தார், அவன் 15 வயது நிரம்பிய இளம் வாலிபன், ஆனால் பார்க்க மிகவும் பெலவீனமாக இருந்தான், அவன் பெயர் அருண். அவன் தாயார் அவனை எங்களுக்கு அறிமுகம் செய்தார், அவன் பெயர் அருண் என்றும், அவன் வயிற்று வலியால், தினந்தோறும் போராடுவதாகவும், சென்னை சென்று மருத்துவம் செய்துக் கூட பலன் இல்லை என்றும் மிகவும் வேதனையாக கூறினார்.

மேலும் அவனை இயேசு சாமிக்கு ஒப்புக் கொடுக்க போவதாகவும், அவர் அவனை ஏற்றுக் கொண்டாலும் சரி, எடுத்துக் கொண்டாலும் சரி என்றும் வேதனையோடு கூறிவிட்டு, சென்று விட்டார், அவன் ஆலயத்தில் போடப்பட்டிருந்த தரை விரிப்பானில் அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டான்.

நானும் அனைத்து விசுவாசிகளும் ஆராதனை முடிந்து அவனுக்காக ஜெபித்தோம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஜெபித்தனர். பலன் நடக்க முடியாமல் வந்தவன், எழுந்து நடந்து வீட்டிற்கு போனான். அடுத்தடுத்த வாரங்களில், நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது. இப்போதும் அருண் சுகமாய் இருக்கிறான், ஆனால் வெறும் அருணாக அல்ல, அருண் சாமுவேலாக. ஆம் இப்போது அவன் ஞானஸ்னானம் பெற்று உறுதியான விசுவாசியாக அவன் குடும்பத்திற்கும், அவன் சமூகத்திற்கும் சாட்சியாக வாழ்ந்து வருகிறான்.

அன்புக்குரியவர்களே, நாம் பெலவீனர்கள், நோயினாலும், போராட்டங்களாலும் சூழப்பட்டவர்கள், நம்மால் இவ்வுலகில் நிலை நிற்பதும் போராடுவதும் இயலாத ஒன்று, ஆனால் நம்மோடு இருக்கிறவர் வல்லமையானவர். எவ்வளவு கொடிய வியாதியையும், எவ்வளவு பெரிய போராட்டத்தையும் மேற்கொள்ளும் ஆற்றலை நமக்கு அருளுகிறவர். மரணத்தையே ஜெயித்தவரல்லவா?

எனவேதான் பவுல் கூறுகிறார், என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு. நமக்கு பெலனில்லை, எதையும் செய்கிற ஆற்றல் இல்லை, ஆனால் அவரால், பெலன் தருகிறவரால் எல்லாவற்றையும் செய்வோம்.

இந்த காலையில் இந்த விசுவாசத்தோடு நம் நாளை துவங்குவோம், கிறிஸ்துவின் பெலத்தால் துன்பங்களை மேற்கொள்வோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews