WORD OF GOD

WORD OF GOD

Friday, November 11, 2011

சோதனை இப்படியும் வந்தது..

அன்பான உடன் விசுவாசிகளே, கடந்த 7 ம் தேதி, என்னுடைய இளைய சகோதரியின் கணவர் திரு செல்வம் மாமா அவர்கள், அவருடைய சொந்த ஊரான வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு அருகேயுள்ள பாலூர் கிராமத்தில் இரண்டு ஆவிக்குரிய கூட்டங்களை ஒழுங்கு செய்தார். காலை 10 முதல் மாலை 4 மணிவரை உபவாசக் கூட்டமும், மாலை 6:30௦ மணியிலிருந்து 9 மணிவரை மாபெரும் ஆவிக்குரிய நற்செய்தி கூட்டமும் நடத்தினார். இந்த இரண்டு நிகழ்சிகளும் அவருடைய சொந்த ஊரில் மிகப்பெரிய எழுப்புதலை கொண்டு வந்ததை என் கண்ணாரக் கண்டேன்.

அன்று மிகவும் பிரமிப்போடு அவரை கண்டு அவரை வாழ்த்தினேன், தொடர்ந்து இது போன்ற ஆவிக்குரிய கூட்டங்களை பெருமளவில் நடத்த அவரை ஊக்கப்படுத்தினேன்.

அடுத்த நாள், எங்கள் வீட்டிற்கு அவர் வந்து காலை முதல் மாலை வரை எங்களோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். மாலை ஒரு 6 மணியளவில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டார். ஏன் என கேட்க நெஞ்சம் பதறியது அவரது தாயார்  விபத்தில் சிக்கியதாகவும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்தது. பதறியடித்து நானும் அவரும் ஓடி தாயாரை ஆம்புலன்சில் ஏற்றி அவர் அவர்களோடு மருத்துவமனைக்கு சென்றார். வேலூர் C.M.C கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் தன் மகன் செல்வம்  அவர்களின் மடியிலேயே  பிரிந்தது.

குடும்பம் முழுக்க சோகமாகிப்போனோம். ஏன் இப்படி? நேற்று ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம், ஆவிக்குரிய உபவாசக் கூட்டம் என ஆண்டவருக்காய் தன் உழைப்பையும் செல்வத்தையும் தந்தவருக்கு ஏன் இந்த  நிலை?

நேற்றைய சந்தோஷம் இன்று வேதனையாகிப் போனதே ஏன்? ஆண்டவர் ஏன் இதை அனுமதிக்கிறார்? ஒரே ஒரு வசனம் எனக்கு ஆறுதல் அளிக்கிறது,  கலப்பையில் கை  வைத்தவன் பின்னிட்டு பாராதே என்ற வசனம். ஏனெனில்?,

அன்பானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெறும் வாழ்க்கை அல்ல, பிசாசு, பாவம், மரணம் இவைகளுக்கு எதிரான போராட்டம். நாம் ஆண்டவருக்காய் உழைப்பதை இம்மூன்றும் பிடுங்க பார்க்கும். பாவம் இச்சையின்   உச்சத்திற்கும், பிசாசு சோதனையின் உச்சத்திற்கும், மரணம் வேதனையின் உச்சத்திற்கும் நம்மை கொண்டு போய் அவருக்காய் வாழ்கிற  வாழ்க்கையை பறிக்க பார்க்கிறான்.
ஆனால் கலப்பையில் கை வைத்தவர்கள் பின்னிட்டு பார்க்க கூடாது. பாவம் மரணம் பிசாசையும் நாம் தொடர்ந்து ஆண்டவருக்காய் உழைத்து வெற்றிக் காண வேண்டும். இந்த உறுதி, விசுவாசம் நம்மை பரலோக வாசலண்டை சேர்க்கும். ஆமேன்
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews