சிறுவர் கொண்டாட்டம்
அன்பானவர்களே நாம் ஜெபித்தபடி கடவுள் நமது சிறுவர் ஊழியத்தை மிகவும், சிறப்பாய் ஆசீர்வதித்தார். வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லத்தில் இனிமையாய் துவங்கியது. இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர் அருள்திரு ராஜகம்பீரம் அவர்கள்
ஜெபித்து ஆசீர்வதித்து சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதன் புகைப்பட தொகுப்பை கண்டு இறைவனை மகிமை படுத்துங்கள்.
இந்த நிகழ்ச்சி எனக்கு பெரிய மன நிறைவை கொடுத்தது. இது என்னால் மட்டும் சாத்தியமானதல்ல, அனேக உள்ளங்கள் இதற்கு உதவினார்கள். அருள்திரு.ராஜகம்பீரம் அவர்கள், திரு.பாரத் அவர்கள், அருள்திரு.கிளாட்சன் அவர்கள், அருள்திரு.மில்டன் அவர்கள், திரு.சா.பிச்சை அவர்கள், சகோதரி.ஜேனட் அவர்கள், போன்றோர் பொருளாதார ரீதியாக முக மலர்ச்சியாய் உதவி செய்தார்கள். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நாளை காலை 10 மணியளவில் வாணியம்பாடியில் உள்ள CMS விடுதியில் சிறுவர் கொண்டாட்டம் நடைபெறுகிறது. எனவே இதன் தேவைகள் சந்திக்கப்பட ஊக்கமாய் ஜெபியுங்கள்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
ஏழை சிறுவர்களுக்கு உதவ விருப்பமா?
பப்பட் ஷோ நடத்த பொம்மைகள். தேவைபடுகின்றன. இந்த தேவைகளுக்காக தயவு செய்து ஜெபியுங்கள்.
email : jesusblessings65@yahoo.in
Mobile: 09894456269
சிறுவர் கொண்டாட்டம் நாயக்கனேரி
அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிமையான ஸ்தோத்திரங்கள். நான் ஏற்கெனவே தெறிவித்தபடி, நாயக்கனேரி என்ற மலை கிராமத்தில் நமது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.சிறுவர்கள் மட்டுமல்லாது, கிராம பெரியவர்கள், கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துக்கொண்டு கர்த்தருடைய பெரிதான ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர். அன்று ஒரு மிகப்பெரிய அற்புதத்தை கர்த்தர் செய்தார் அதை புகைப்படத்தில் நீங்கள் காணலாம். அதன் புகைப்பட தொகுப்பை தொடர்ந்து காணுங்கள், இன்னும் இந்த நிகழ்ச்சி தமிழ் நாடு முழுக்க சிறுவர்களை சென்றடைய தொடர்ந்து ஜெபியுங்கள்.
நிகழ்ச்சியில் இறுதி ஜெபம் செய்த போது ஒரு பெண்மணி அசுத்தாவியால், அலைக்கழிக்கப்பட்டு, நேராக முன்பாக வந்து விழுந்து புரண்டார். எல்லா மக்களும் பிரமிப்போடு கண்டுகொண்டிருக்க, மில்டன் போதகர் ஆவியில் நிரம்பி அவரோடு நாங்கள் அனைவரும் இறைவனிடம் மன்றாட அசுத்தாவி அவரைவிட்டு ஓடிப்போனது, கிராமமே இந்த காட்சியால் இறவனை மகிமைப்படுத்தியது.
நிகழ்ச்சியில் இறுதி ஜெபம் செய்த போது ஒரு பெண்மணி அசுத்தாவியால், அலைக்கழிக்கப்பட்டு, நேராக முன்பாக வந்து விழுந்து புரண்டார். எல்லா மக்களும் பிரமிப்போடு கண்டுகொண்டிருக்க, மில்டன் போதகர் ஆவியில் நிரம்பி அவரோடு நாங்கள் அனைவரும் இறைவனிடம் மன்றாட அசுத்தாவி அவரைவிட்டு ஓடிப்போனது, கிராமமே இந்த காட்சியால் இறவனை மகிமைப்படுத்தியது.

No comments:
Post a Comment