WORD OF GOD

WORD OF GOD

Wednesday, February 8, 2012

மனம் அமைதி பெற 5


அன்பானவர்களே. நீங்கள் எத்தனைபேர் இப்போது கவனிக்கிறவர்களாக‌ மாறியிருக்கிறீர்கள் கவனிப்பது கடினமாக இருந்ததா? சுலபமாக இருந்ததா? நிச்சயம் கடினமாகவே இருந்திருக்கும், கவனிப்பதால் பல சரீர உபாதைகள் கூட ஏற்படுவதுண்டு. நான் முதன் முதலாக ஆலோசனை கொடுத்தது தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணுக்கு, அந்த அனுபவம் எனக்கு இன்றும் மறக்க முடியாது, காரணம், பேசியே பழக்கப்பட்ட எனக்கு கவனிப்பது பெரும் சிரமமாக இருந்தது, ஒரு பத்து நிமிடம் அவர்கள் சொன்னதை கூர்ந்து கவனித்ததும் கடுமையான தலைவலிக்கு ஆளானேன், கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர்களோடு அமர்ந்து அவர்கள் சொல்வதை கவனித்தது, அடுத்த நாள் விடுப்பு எடுக்கும் அளவுக்கு கடுமையான தலை வலிக்கு என்னை இட்டு சென்றது. அப்போதுதான் கவனிப்பது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்தேன்.
ஆனாலும் அது எனக்குள் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கியது, ஒருவருடைய துன்பத்தில் நான் பங்கெடுத்த மன நிறைவு எனக்கு உண்டானது. அன்பானவர்களே நம் குடும்ப வாழ்வில் ஏற்படுகிற அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம்தான் அது கவனிக்காமல் இருப்பது. 
 
என்னங்க இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? என்கிற மனைவியிடம் என்னமா நடந்தது? என்று பரிவாய் கவனிக்க துவங்குகிறீர்களா? அல்லது ஏண்டி இப்படி நச்சரிக்கிற போய் காபி போட்டு எடுத்துவா என்று கத்துகிறீர்களா?

ஏம்மா இன்னைக்கு ஆஃபிஸ்ல பயங்கர வேலம்மா.. என்று ஆரம்பிக்கும் கணவரிடம் அய்யோ ரொம்ப கஷடப்பட்டுட்டீங்களா? ஏங்க? என்று கணிவாய் கேட்கிறீர்களா? அல்லது இருங்க இந்த சீரியல் முடிஞ்சதும் பேசிக்கலாம் என்று விலகுகிறீர்களா?

கவனிக்காமல் விலகும்போதெல்லாம் உங்களுக்குள் கலவரங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லையா? வன்முறை எங்கே துவங்குகிறது ஒரு சமூகத்தின் குரல் எங்கே கவனிக்கப்படவில்லையோ அங்கே துவங்குகிறது. குடும்பத்தில் ஏற்படுகிற பிரச்சினைகள் கூட வன்முறையின் மறு வடிவமே எனவேதான் கலவரம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஒரு சமூகமாக இருந்தாலும், தனி மனிதனாக இருந்தாலும் தான் கவனிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை தேடலாக இருக்கிறது, நாம் உடுத்துகிற ஆடை, பேசுகிற வார்த்தைகள், நடை, அனைத்திலும் அடுத்தவர்கள் நம்மை கவனிக்க வேண்டும் என்ற அடிப்படை தேடல்தானே நிறைந்திருக்கிறது. கவனிக்கப்படவில்லை என்றால் ஏமாற்றம் மிஞ்சுகிறதே?......

அதுதான் இன்று குடும்பத்திலும் உறவுகளுடையேயும் நடக்கிறது. எனவே கவனிப்பதே தீர்வு, உடையும் மனங்கள் ஒன்றினைய ஒரே வழி..

ஒருவருக்கொருவர் பேசுவதை பொறுமையாக கவனிப்பது.... ஒருவருக்கொருவர் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுப்பது...

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; யாக்கோபு.1:19

பயனுற்றால் கருத்துரையிடுங்கள்...

அன்புடன்
ஆருள்திரு..கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews