WORD OF GOD

WORD OF GOD

Wednesday, July 13, 2011

நூற்றைம்பது (150)

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள், இன்று இந்த இணைய தளத்திற்கு ஒரு விசேஷ நாள். ஆம் கர்த்தருடைய பெரிதான கிருபையால், இன்று நான் இடுகிற இந்த பதிவு 150 வது பதிவாகும். இந்த மிகப்பெரிய சாதனைக்கு உறுதுணையாக இருந்த என் அன்பு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு என் முதல் கோடி ஸ்தோத்திரங்கள்.

அவரில்லையேல் இந்த மகா பணி எனக்கு சாத்தியமேயில்லாத காரியம். சுவிசேஷகனுடைய பாதங்கள் மலையின் மேல் எவ்வளவு அழகாய் இருக்கிறது (ஏசாயா.52:7) என்று தன் ஊழியர்களின் கால்களை கூட ரசிக்கும் கடவுளல்லவா அவர், இந்த ஊழியத்தை நான் எதிர்பாரா விதம் துவங்க கிருபை செய்தார். நடத்தி வருகிறார்.

இதை முதன் முதல் துவங்கியபோது, அனேகர் என்னை மிகவும் பாராட்டி ஊக்குவித்தனர். அருள்திரு ராஜகம்பீரம் அவர்கள் ஜெபித்து துவங்கி வைத்தார். அருள்திரு கிளாட்சன் அண்ணன் அவர்கள் தனது சொந்த செலவில் 1000 கை பிரதிகளை இந்த ஊழியத்திற்காக அச்சிட்டு கொடுத்தார்.அவரை நன்றியோடு நினைக்கிறேன். அதன் பின்னர் என் மாமனார் திரு சா.பிச்சை அவர்கள் 500 பிரதிகள் அச்சிட்டு கொடுத்து உதவினார். அவரே அதை இன்று வரை வினியோகித்தும் வருகிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த தளத்தில் முதல் விசுவாசியாக தன் கருத்தை பதிவு செய்தவர் சகோதரி மேரி கேதலின் அவர்கள், தொடர்ந்து ஊக்கமான வாசகராக தொடர்கிறவர். அவரது தந்தை திரு.டேனியல் அவர்கள் 3000 கை பிரதிகளை சமீபத்தில் அச்சிட்டு கொடுத்து இந்த ஊழியத்தை தாங்கினார். அவரையும் அவர் குடும்பத்தினரையும் கூட இப்போது நன்றியோடு நினைக்கிறேன்.

அதே போல‌ இந்த‌ த‌ள‌த்தின் மிக‌ சிற‌ப்பான‌ ப‌டைப்பாக‌ பெரும் வ‌ர‌வேற்பை அனைத்து த‌ர‌ப்பிலும் பெற்றுவ‌ருவ‌து என‌து த‌ந்தை திரு.ஆ.ஏசைய‌ன் அவ‌ர்க‌ளின் சிறு க‌தைக‌ள். அவ‌ர‌து க‌தைக‌ள் ஆழமான‌ ந‌ற்செய்தியை ப‌ரைசாற்றி வ‌ருகின்ற‌ன‌. அவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

ஆர‌ம்ப‌ம் முத‌லே இந்த‌ த‌ள‌த்தின் ஒரு அங்க‌மாக‌ என‌து ந‌ண்ப‌ர் அருள்திரு மில்ட‌ன் அவ‌ர்க‌ளும் என்னோடு இணைந்து ந‌ற்செய்தி ப‌ணியாற்றி வ‌ருகிறார். அவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

அதே போல‌ ச‌கோத‌ர‌ர் சாந்த‌ குமார் அவ‌ர்க‌ள் இதில் ம‌ருத்துவ‌ குறிப்புக‌ளை எழுதி கொடுத்தார். என‌து நேர‌மின்மையால் தொட‌ர்ந்து அவ‌ரிட‌ம் என்னால் தொட‌ர்பு வைக்க‌ இய‌ல‌வில்லை. அவ‌ருக்கும் என் ந‌ன்றிக‌ள்.

மேலும் ஒரு மாத‌ர்ப‌குதி வேண்டும் என‌ கேட்ட‌ போது மிகுந்த‌ ச‌ந்தோஷ‌த்தோடு எழுதி த‌ந்த‌வ‌ர் திரும‌தி உஷா ராஜ்குமார் அவ‌ர்க‌ள்.அவ‌ர்க‌ளையும் ச‌மீப‌த்தில் என்னால் தொட‌ர்பு கொள்ள‌ இய‌ல‌வில்லை விரைவில் அவ‌ர‌து திருப்ப‌ணி இதில் தொட‌ரும் என‌ ந‌ம்புகிறேன். அவ‌ர்க‌ளுக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

இந்த‌ த‌ள‌த்தை இமெயில் மூல‌ம் தொட‌ர்புக் கொண்டு பாராட்டிய‌ திரு வீர‌ம‌ணி அவ‌ர்க‌ள், அறிவும‌ணி அவ‌ர்க‌ள், அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் ஆகியோருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். இம‌யில் மூல‌ம் மிக‌ அதிகமாக‌ என்னை வாழ்த்தின‌ ச‌கோத‌ரி ஸ்டார்லெட் எஸ்த‌ர் அவ‌ர்க‌ள் ஆகியோருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

இந்த‌ த‌ள‌ம் வாயிலாக‌ சிறுவ‌ர் கொண்டாட்ட‌ம் என்ற‌ மிக‌ அற்புத‌மான‌ ஊழிய‌த்தை துவ‌ங்க‌‌ தேவ‌ன் ம‌காபெரிய‌ கிருபை புரிந்தார். இன்று இத‌ன் மூல‌ம் 600க்கும் அதிக‌மான‌ பிள்ளைக‌ளை ச‌ந்தித்துவிட்டோம். அத‌ற்கு மிக‌வும் உத‌விய‌வ‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரையும் ந‌ன்றியோடு நினைவு கூறுகிறேன். அருள்திரு.ராஜ‌க‌ம்பீர‌ம் முன்னாள் பெருந்த‌லைவ‌ர் இ.சு.லு.ச‌ அவ‌ர்க‌ள்,திரு.பார‌த் அவ‌ர்க‌ள், அருள்திரு.கிளாட்ச‌ன் அவ‌ர்க‌ள், அருள்திரு.மில்ட‌ன் அவ‌ர்க‌ள், என‌து குடும்ப‌த்தார், எனது மாமனார் குடும்பத்தார்  அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

என் சொற்ப‌ வ‌ருமான‌த்தை சாரிபாத் வித‌வையின் அட்ச‌ய‌ பாத்திர‌ம் போல் மாற்றி குறைவில்லாம‌ல் இந்த‌ திரு ப‌ணிக‌ளை ஆற்ற‌ தேவ‌ன் பெரும் அற்புத‌மாய் என்னை ந‌ட‌த்தி வ‌ருகிறார்.

உங்க‌ளுக்கு என் வேண்டுகோள். இணைய‌த்தில் எத்த‌னையோ ப‌க்க‌ங்க‌ள், இன்றைக்கு உல‌கையே த‌ன் க‌ட்டுப்பாட்டில் வைத்துள்ள‌து. ஏன் இந்த‌ த‌ள‌ம் அப்ப‌டி வ‌ர‌க்கூடாது, சிற்றின்ப‌த்தை த‌ரும் த‌ள‌ங்க‌ளெல்லாம் பெரும‌ள‌வில் பிர‌ப‌ல‌மாயுள்ள‌து. பேரின்ப‌த்தை த‌ரும் இந்த‌ த‌ள‌ம் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ உறுப்பின‌ர்களை கொண்ட‌தாய் வ‌ள‌ர‌ வேண்டாமா? உங்க‌ள் க‌ர‌ங்க‌ளில் தான் அந்த‌ வ‌ல்ல‌மையுள்ள‌து, காண்போரிட‌த்திலெல்லாம் இதை பேசுங்க‌ள். என்னை அல்ல‌ இந்த‌ ஊழிய‌த்தை முழு அர்ப்ப‌ணிப்போடு தாங்குங்க‌ள். தேவ‌ன் உங்க‌ளை வ‌ல்ல‌மையாய் ஆசீர்வ‌திப்ப‌ர். ச‌பை பாகுபாடின்றி, அனைவ‌ருக்கும் இந்த‌ ஊழிய‌த்தை அறிவியுங்க‌ள். ஆண்ட‌வ‌ரின் பெரும் ஆசீர்வாத‌ங்க‌ளை பெற்றிடுங்க‌ள்.

இந்த‌ த‌ள‌ம் வ‌ழியாக‌ அனுப்பப‌டும் வாக்குத‌த்த‌ குறுஞ்செய்தியை(sms) உங்க‌ள் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ள் எண்ணையும் என‌க்கு அனுப்புங்க‌ள்.

த‌ய‌வு செய்து உங்க‌ள் க‌ருத்துக‌ள் எதுவாயினும் ப‌கிருங்க‌ள். அதுவே இவ்வூழிய‌த்தை தாங்கும், உங்க‌ள் அத்த‌னை ஜெப‌ தேவைக‌ளையும் என‌க்கு எழுதுங்க‌ள். பெற்றுக்கொண்ட‌ ந‌ன்மையை சாட்சியாய் அறிவியுங்க‌ள். க‌ருத்திடாமால் போகாதீர். இணைந்து செய‌லாற்றி இறைவ‌னை மேன்மை ப‌டுத்துவோம். ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews