WORD OF GOD

WORD OF GOD

Monday, July 18, 2011

சிறுவர் கொண்டாட்டம் நாயக்கனேரி

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிமையான ஸ்தோத்திரங்கள். நான் ஏற்கெனவே தெறிவித்தபடி, நாயக்கனேரி என்ற மலை கிராமத்தில் நமது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.சிறுவர்கள் மட்டுமல்லாது, கிராம பெரியவர்கள், கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துக்கொண்டு கர்த்தருடைய பெரிதான ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர். அன்று ஒரு மிகப்பெரிய அற்புதத்தை கர்த்தர் செய்தார் அதை புகைப்படத்தில் நீங்கள் காணலாம். அதன் புகைப்பட தொகுப்பை தொடர்ந்து காணுங்கள், இன்னும் இந்த நிகழ்ச்சி தமிழ் நாடு முழுக்க சிறுவர்களை சென்றடைய தொடர்ந்து ஜெபியுங்கள்.

நிகழ்ச்சியில் இறுதி ஜெபம் செய்த போது ஒரு பெண்மணி அசுத்தாவியால், அலைக்கழிக்கப்பட்டு, நேராக முன்பாக வந்து விழுந்து புரண்டார். எல்லா மக்களும் பிரமிப்போடு கண்டுகொண்டிருக்க, மில்டன் போதகர் ஆவியில் நிரம்பி அவரோடு நாங்கள் அனைவரும் இறைவனிடம் மன்றாட அசுத்தாவி அவரைவிட்டு ஓடிப்போனது, கிராமமே இந்த காட்சியால் இறவனை மகிமைப்படுத்தியது.
 


No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews