WORD OF GOD

WORD OF GOD

Thursday, August 18, 2011

அற்புதர் இயேசுவே துணை.



அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய அன்பான ஸ்தோத்திரங்கள். ஆண்டவர் மிகவும் அற்புதமாய் வழி நடத்துபவர். என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறேன். இது இயேசுவை நம்புவோர் ஒவ்வொருவரும் அனுபவிப்பதே. நமது தளம் சார்பாக நாம் துவங்கிய சிறுவர் ஊழியம் நான் எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. பொன்னேரி என்ற கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சகோ.இம்மானுவேல் என்பவர் ஏழை பிள்ளைகளுக்கான ஒரு விடுதி நடத்தி வருகிறார், அதில் நம் சிறுவர் நிகழ்ச்சி நடத்த தானே முன் வந்து கேட்டுக் கொண்டார்.

அவரது அழைப்பை ஏற்றேன், ஆனால் என்னிடத்தில் உடனடியாக அதற்கான பணம் இல்லை, காரணம் நான் இதை வசன மற்றும் கலை ஊழியமாக மட்டுமல்ல ஏழை பிள்ளைகளின் தேவையில் பங்கெடுக்கும் ஊழியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே பணம் இல்லாமல் அதை நடத்த முடியாது. அந்த இடத்தை அடைவதற்கு வாகன வசதியும் குறைவு. ஆனால் நான் முழு விசுவாசத்தோடே இருந்தேன், அப்போதுதான் சகோ.பாரத் அவராகவே என்னை அழைத்து என்ன‌ங்க பாஸ்டர், எதாவது வேணும்னா எங்கிட்ட கேளுங்க என்றார், உண்மையில் நான் ஆச்சரியமானேன், இந்த ஊழியத்தின் தேவை, அவருக்கு எப்படி தெரியும்? அவரை என்னிடம் கேட்க சொல்லி அவரை உள்ளத்தில் தூண்டியது யார்? ஆனாலும் நான் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவரே 1000 ம் ரூபாய் கொடுத்தார், அதுதான் முதல் பணம் இன்னும் குறைந்தது எனக்கு 6000ம் ரூபாய் தேவை ஆனால் அதற்கு பின் கர்த்தர் என்னை அற்புதமாய் நடத்தினார்,

நான் தற்போது ஆம்பூரில் நேத்தர் மெமோரியல் லுத்தரன் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறேன், அங்கே எனது முதல் சம்பளத்தை வாங்கினேன், எவ்வளவு தெரியுமா? என் தேவையான 6000ம் ரூபாய். உடனே விரைவாக பணிகளை துவங்கினேன். ஊழியம் தடையின்றி வெகு சிறப்பாக முடிந்தது. ஒவ்வொரு பிள்ளைக்கும், ஒரு நோட்டு, ஒரு பேனா, ஒரு பென்சில், ஒரு சோப்பு, ஒரு டெய்ரி மில்க் சாக்லெட் போன்றவை தாராளமாக கொடுக்க முடிந்தது. அது மட்டுமா? வாகன வசதி இல்லா அந்த இடத்திற்கு எப்படி போவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த நான் என் குழுவோடு ஒரு ஆமினி வேனில் போய் இறங்கினோம், ஆம் என் மாமா ஒருவர் தன் வாகனத்தை அவரே ஓட்டிக் கொண்டுவந்து எங்களை சேர்த்து பின் அழைத்துக் கொண்டு வந்தார்.

இதோடு இந்த அற்புதம் முடியவில்லை, நிகழ்ச்சி நடக்கும்போதே, என் தந்தை என் மாமனார்,மாமியார், என் சகோதரி ஆகியோர் இந்த ஊழியத்திற்காக தங்களால் இயன்றதை கொடுத்தனர். நிகழ்ச்சி முடிந்து செலவு கணக்கு பார்க்கும் போது அதிர்ந்தே போனேன், காரணம் என்ன தெரியுமா? என் கையில் மீதி பணம் 5000 ரூபாய் இருந்தது. எவ்வள‌வு ஆச்சரியம்?

இப்போது அடுத்த‌ நிக‌ழ்ச்சிக்கு ஆய‌த்தமாகிவிட்டேன், அதை இன்னும் சிற‌ப்பாக‌ ந‌ட‌த்த‌ திட்ட‌மிடுகிறேன், என்னை ந‌ம்பிய‌ல்ல‌ ஆண்ட‌வ‌ரை ந‌ம்பி. இன்னொரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம், இந்த‌ நிக‌ழ்ச்சிக்கான‌ புகைப்ப‌ட‌ங்களை நாச்சார்குப்பம் கிறிஸ்து ராஜா லுத்த‌ர‌ன் ச‌பையின் செய‌ல‌ர் திரு செல்வ‌ம் அவ‌ர்க‌ள் எடுக்கிறார், அவ‌ர் ஒரு புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ர். இந்த‌ ஊழிய‌த்திற்காக‌ த‌ன் தொழிலை கூட‌ விட்டுவிட்டு ஓடி வ‌ருகிறார். இதுவ‌ரை ஒரு ரூபாய் கூட‌ அத‌ற்காக‌ வாங்க‌வில்லை, நானும் இந்த‌ ஊழிய‌த்தில் ஒரு அங்கம் என்கிறார். எவ்வளவு பெருந்தன்மை.

பிரியமானவர்களே இது என் அனுபவம், ஆண்டவர் நடத்துகிறார், இதை விசுவாசித்தால் போதும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். உங்கள் தேவைளையும் விசுவாசத்தோடு கேளுங்கள்.. பெற்றுக் கொள்ளுவீர்கள். தொடர்ந்து ஊழியத்திற்காய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews