WORD OF GOD

WORD OF GOD

Thursday, August 4, 2011

ஓடுவோம்.


எபிரேயர்.12:1

விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமான இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.

திரியேக கடவுளின் நாமத்தில் வாழ்த்துக்கள், கிறிஸ்தவ வாழ்வு ஓர் ஓட்டம். இருப்பதல்ல, நிற்பதல்ல, நடப்பதல்ல. நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பவுல் ஒட்டத்தை முடித்தேன் என்றும், திமோத்தேயுவை பார்த்து, நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டு ஓடு என்றும் கூறுகிறார்.

இயேசு ஆண்டவரும் நமக்கு முன்னோடினவர் என்று இந்த நிரூபத்தில் வாசிக்கிறோம். அதுபோல் நாமும், இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து ஓடவேண்டும். பொறுமையுடன் ஓடவேண்டும்.

ஓட்டம் என‌பது, வாழ்வு. கிறிஸ்துவை போல் வாழ‌ வேண்டும். கிறிஸ்துவை பின்ப‌ற்ற‌ வேண்டும். இயேசு ஆண்ட‌வ‌ர், ந‌ம‌க்கு முன் மாதிரியாவ‌ர். அவ‌ர் விசுவாச‌த்தை ந‌ம்மை போல் வெறும‌னே அறிக்கை செய்த‌வ‌ர‌ல்ல‌ செய‌ல்ப‌டுத்திய‌வ‌ர். அவ‌ர் பிதாவினிட‌த்தில் அன்பாயிருந்தார். ம‌னித‌ர்க‌ளிட‌த்திலும் அன்பாயிருந்தார். க‌ட‌வுளின் திருவுள‌ சித்த‌த்தை நிறைவேற்றினார்.

ச‌மூக‌த்தில் வாழ்விழ‌ந்த‌ அனைவ‌ரையும் ச‌ந்தித்தார், வாழ்வ‌ளித்தார். நீங்க‌ளும் நானும் எப்ப‌டி இருக்கிறோம்? ம‌னிதனாய் ஆல‌ய‌த்திற்குள் போய் புனித‌னாய் வ‌ர‌ வேண்டும். இயேசுவை போல் ந‌ம‌க்கு முன் வைத்திருக்கிற‌ ச‌ந்தோஷ‌த்தின் பொருட்டு, துன்ப‌த்தை ஏற்றுக் கொண்டார். ஓடுவோம் ஓடுவோம்.. இயேசுவை போல் ஓடுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு, G .மில்டன் அருண்ராஜ்
revmilton1982@gmail.கம

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்
 

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews