WORD OF GOD

WORD OF GOD

Thursday, March 8, 2012

ஆலயத்தை கட்டுவோம் வாருங்கள்

அன்பான உடன் விசுவாசிகளே, வேலூர் மாவட்டம் ஆம்பூரில், சான்றோர் குப்பம் என்ற கிராமத்தின் போதகரான அருள்திரு. ராஜகம்பீரம் (இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர்) அவர்களும் சபையாரும் இனைந்து ராஜகோபால் நகர் என்ற கிராமத்தில் ஒரு அழகான ஆலயத்தை கட்டி கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்தனர். அந்த  ஆராதனையில் கலந்துக்கொள்ளும் உன்னத அனுபவம் எனக்கும் கிடைத்தது. அழகான ஓலை கூரை வேய்ந்த சிறிய ஆலயமாக தென்பட்டாலும், எதிர்காலத்தில் மிகப்பெரிய தேவாலயமாக  உருவாவதற்கான அத்தனை அம்சங்களும் அங்கே தெரிந்தது. உள்ளேயும் வெளியேயும் உட்கார இடமில்லாத அளவுக்கு பெரும் திரளாக அனேக விசுவாசிகள் அன்று கூடி வந்தனர். பிரதிஷ்டைக்கு பிறகு கூட சில ஆராதனைகளை நடத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, அப்போதும் அங்கே வந்த விசுவாசிகளை காணும்போது அது ஒரு பெரிய ஆலயமாய் உருவாகும் என்பதில் எனக்கு ஐயம் ஏற்படவில்லை இதோ அந்த ஆலயத்தின் மகிழ்ச்சியான துவக்கம். புகைப்படங்களாய்.

அருள்திரு. ராஜகம்பீரம் முன்னின்று பிரதிஷ்டை செய்கிறார்.
உள்ளே திரண்டிருந்த விசுவாசிகளின் கூட்டம்.
உள்ளே இடமின்றி வெளியே திரண்டிருந்த விசுவாசிகளின் கூட்டம்

 திருச்சபை பிரதிஷ்டைக்கு நன்றியாய் கிராம பிள்ளைகளின் உற்சாக நடனம்

ஆனால் அன்பானவர்களே இந்த சந்தோஷம் அங்கே நீடிக்கவில்லை எல்லாமே இப்போது தலைக் கீழ் ஆசை ஆசையாய் கட்டப்பட்ட தேவாலயம் இன்று இல்லை,  மின் கசிவோ? விஷமிகளின் சதியோ? தெரியவில்லை ஆனால் தேவாலயம் முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகிப்போனது இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் இன்னொரு அவயவம் இன்று எரிந்து புண்ணாகி கிடக்கிறது தேற்றுவாரில்லாமல்  . காண்போர் மனது வைத்தால், கடவுள் உங்கள் உள்ளத்தில் ஏவினால் அங்கே முன்பைவிட சிறப்பான ஆலயம் உருவாகும். சீர் குலைந்த சபையின் நிலையை காணுங்கள்.

முற்றும் எரிந்து குட்டிசுவராய் நிற்கும் தேவாலயம்.



தேவாலய கதவு பாய், புனித பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிப்போன காட்சி


ஆலயத்தில் ஒன்றும்  மிஞ்சவில்லை.

அன்பானவர்களே இந்நிலை மாற உங்கள் உதவி தேவை. ஆலயத்தை கட்டுகிறவர்களின் வாழ்வை கர்த்தர் கட்டுவார். இதை படிப்போர் உதவ விரும்பினால் நமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள, 9944555388,    9944116769 என்ற எண்களுக்கு நீங்கள் தொடர்புக் கொள்ளலாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆலயம் உருவாக காரணமாய் அமையும். ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட அதன் பலனை திரும்ப பெறாமல் போகமாட்டீர்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews