WORD OF GOD

WORD OF GOD

Tuesday, March 13, 2012

காரியத்தை அவரே வாய்க்க செய்வார்

அன்பான வாசகர்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள், நமது சிறுவர் ஊழிய குழுவின் இன்னொரு ஊழிய தகவலோடு உங்களை சந்திக்கிறேன், நமது சிறுவர் ஊழிய குழு கிருஷ்ணகிரி போலியோ காப்பகத்தில் நடத்திய நிகழ்ச்சியை நீங்கள் அறிவீர்கள், அதை அறிந்த‌ இந்திய சுவிசேஷ ஊழிய மையம் அவர்களது விடுதியில் நிகழ்ச்சி நடத்த அழைத்திருந்தனர். இதற்கு கிருஷ்ணகிரியில் உள்ள எனது நண்பர் ஜோசாம் அவர்களின் தாயார் திருமதி.அன்னாள் அவர்கள் பெரிதும் உதவினார். பிள்ளைகளுக்கும் நமக்கும் அவர்களே மதிய உணவும் ஏற்பாடு செய்து நம்மை பெரிதும் உற்சாகப்படுத்தினார். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, அதற்கான புகைப்படங்களை காணுங்கள். இவ்வூழியம் பெருக ஜெபியுங்கள்.












ஊழியம் என்பது அனேக சிரமங்களை உள்ளடக்கியது என்பதை இந்த சில மாதங்களில் நான் அனுபவித்து வருகிறேன், திருச்சபை ஊழியம், புத்தக ஊழியம், சிறுவர் ஊழியம், இதற்கிடையே இந்த இணையதள ஊழியம் என எல்லவற்றிலும் என்னால் கவனம் தொடர்ச்சியாக பங்காற்ற முடியாமல் தினருகிறேன், ஆனால் கர்த்தர்தாமே, என்னை அற்புதமாய் சொர்வடையாமல் நடத்தி வருகிறார். யாரிடமும் காணிக்கை கேட்பதில்லை, மனித கரங்களை நம்புவதில்லை, ஊழியத்தை விளம்பரப்படுத்துவதும் இல்லை, பெரிய ஆதரவுகளும் இல்லை, ஆனால் அன்பானவர்களே என் ஆண்டவர் நல்லவர் என்பதை ஒவ்வொரு நாளும் ருசித்து வருகிறேன். கரம் பிடித்து நடத்துகிறார், நான் சோர்வடையும்போது தேற்றுகிறார், தேவை வரும்போது தமது தூதர்களை அனுப்புகிறார். ஊழியத்திற்கு பையையாவது, தடியையாவது எடுத்து செல்லாதீர் என்கிறாரே அது மிக சத்தியம், அவர் பார்த்துக் கொள்ளுகிறார். இப்போது ஊழியத்திற்கென எந்த பணமும் என்னிடத்தில் இல்லை ஆனால் இம்மாத மாத இதழ் நடத்த வேண்டும், ஆனால் அவர் நடத்தி காட்டுவார். அந்த சாட்சியும் இங்கே நான் பகிர்வேன் அன்பானவர்களே அவரை நம்புங்கள், காரியத்தை அவரே வாய்க்க செய்வார்.
கிறிஸ்துவின் பணியில்,

அருள்திரு . கில்பர்ட் ஆசீர்வாதம் 

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews