WORD OF GOD

WORD OF GOD

Sunday, March 18, 2012

அன்பு எங்கே????

TEXT.JOHN.3:16


அன்பானவர்களே, மனிதர்களை  அவர்கள் தகுதியை வைத்து தரம் பிரிப்போம், சிலரை கெட்டவர்கள் என்போம், சிலரை நல்லவர்கள் என்போம்,  நல்லவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. நல்லவர்கள் ( நல்ல குணம் கொண்டவர்கள்)
2. மிகவும் நல்லவர்கள் ( நல்ல மனமும் செயலும் கொண்டவர்கள் )
3. வள்ளல்கள் ( தனக்குரியதை அடுத்தவர்களுக்கு கொடுப்போர் )
4. தியாகிகள். ( தன்னையே பிறருக்காய் கொடுப்போர் )

இதில் கடவுள் எவ்வகையை சார்ந்தவர்?

கர்த்தர் நல்லவர் (சங்கீதம் 34:8)
கர்த்தர் மிகவும் நல்லவர் காரணம் அவர் நன்மையை மட்டுமே செய்தவர்.
கர்த்தர் வள்ளல் தன்னுடைய முழு உலகையும் நமக்கே கொடுத்தவர்
கர்த்தர் தியாகியுமானவர் தன்னையே நமக்காய் சிலுவையில் கொடுத்தவர்.
இதையெல்லாம் கடந்து இன்னொரு மிக அற்புதமான குணாதிசயம்
கடவுளிடத்தில் இருக்கிறது அதை நமக்கு சொல்லுகிற பகுதிதான். யோவான்.3:16
அந்த அற்புதமான குணாதிசயம் என்ன தெரியுமா? அது நம் கற்பனைக்கெட்டாதது. பொதுவாக நம் அனைவருக்குமே எதிரிகள் இருக்கிறார்கள், எதிரிகளை நாம் எப்போதும் விரும்புவதில்லை, அவர்கள் பாவமும் வஞ்சகமும் செய்யும்போது நம்மால் அதை சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கான பலனை அவர்கள் அனுபவிக்க நேர்ந்தால் நாம் மிகவும் மகிழ்ச்சியடைவோம், காரணம் அவர்கள் தாங்கள் செய்த பாவத்தின் பலனை அனுவபவிக்கிறார்கள். ஆனால் ஆண்டவரோ உங்கள் சத்துருவை நேசியுங்கள் என்கிறார், ஒரு வேளை நாம் நம் எதிரியை நேசிக்கலாம்.. ஆனால் அதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமே, நாம் நேசித்தும் அவர்கள் நம்மை பகைக்கவே செய்கிறார்களல்லவா? எனவேதான் அவர்கள் துன்புறும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம், அடுத்தவர்களிடத்தில் கூறுகிறோம், அவன் செய்த பாவம் அவன் அனுபவிக்கிறான் என்று கூறுகிறோம்.

இங்கேதான் ஆண்டவர் வித்தியாசப்படுகிறார், மனிதன் நிறைவாய் வாழ கடவுள் ஏதேனை படைத்தார், படைக்கும்போதே அவர் கொடுத்த கட்டளை நடு மரத்தின் கனியை புசிக்காதீர்கள் புசித்தால் சாவீர்கள் என்பதே, ஆனால் அவர்களோ அவரது வார்த்தைக்கு செவி கொடுக்காமல் புசித்தனர், அதன் பலனான நித்திய மரணம் வந்து சேர்ந்தது, இது அவர்கள் செய்த பாவத்தின் பலன், கடவுளுக்கு கீழ்படியாமல் போன துரோகத்துக்கு கிடைத்த தண்டனை, நியாயமாக கடவுள் அவர்களை பார்த்து சிரித்திருக்க வேண்டும், என் வார்த்தையை கேட்காமல் போனீர்களே போய் சாவுங்கள் என்று விரட்டியடித்திருக்க வேண்டும், ஆனால் அவரோ வருத்தப்பட்டார், அதைவிட ஆச்சரியம் அவர்களை நித்திய மரணித்திலிருந்து காக்க நினைக்கிறார்.. ஏன் காக்க வேண்டிய அவசியம் என்ன கடவுளுக்கு?????? துரோகிகளை போய் காப்பாற்றலாமா?

காப்பாற்ற நினைக்கிறார், ஆனால் காப்பாற்ற வேண்டுமானால், குற்றமில்லாத ஒருவரின் ரத்தம் பலியாக சிந்தப்பட வேண்டும்.. குற்றமில்லாதவன் யார்? கடவுளை தவிர யாருமே இல்லையே அதற்கும் ஒரு முடிவெடிக்கிறார், ஆம் அவரே இவ்வுலகில் மனிதனாய் பிறக்கிறார், கடவுளின் குமாரன் என்ற அங்கீகாரத்தோடு இயேசு ஆண்டவராய் இவ்வுலகிற்குள் வருகிறார். தன்னையெ அர்ப்பணிக்கிறார் அவரை யார் நம்புகிறார்களோ அவர்கள் நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டு மோட்ச வாழ்வை பெறுகிறார்கள். ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்? செய்ய வேண்டிய அவசியம் என்ன அவருக்கு? நம்மேல் இவ்வளவாய் அன்பு கூறுகிறார்... அவரது அன்பு நமக்காய் இவ்வளவு தூரம் அவரை கீழிறங்க வைத்தது.

ஆனால் இந்த அன்பை ருசித்த போதிக்கிற நம்மில் எத்தனை பேருக்கு உண்மையான அன்பிருக்கிறது? கடவுள் காட்டிய இவ்வளவு பெரிய அன்பை நாம் கடைபிடிப்பது சாத்தியமில்லைதான், ஆனால் குறைந்த பட்ச அன்பாவது இருக்கலாமே???? ஆனால் இங்கே அந்த அன்பை காணுவது பெரும் சிரமாய் இருக்கிறது, இந்த அன்பைதான் இன்ந்த தவக்காலத்தில் தியானிக்கிறோம், ஆனால் நம்மில் இந்த அன்பில்லை. காரணம் நாம் உண்மையாய் தியானிக்கவில்லை..

சில நாட்களுக்கு முன், நான் ஒரு போதகரோடு பேசிக் கொண்டிருந்தேன், அப்போது ஒரு மூத்த போதகர் அவ்வழியே வந்தார் அவர் எங்களை நெருங்கியதும் அவரை பார்த்து இரு கரம் கூப்பி ஸ்தோத்திரம் அயிரே என்றேன், அவரோ முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.. எனக்கு அவனமாக தோன்றியது ஏன் இப்படி செய்தார் என்றால், நான் பேசிக்கொண்டிருந்த போதகர் திருச்சபை அரசியலில் அவருக்கு எதிரணியில் இருப்பவர். எனக்கு இன்னும் ஓட்டுரிமை இல்லை, இப்போதே இன்னிலை என்றால், ஒருவேளை ஓட்டுரிமை பெற்று ஒரு அணியில் நின்றால், எதிரணியினர் என்னை எப்படி பார்ப்பார்களோ? ஒருவேளை இப்படிப்பட்ட முன் மாதிரி அனுபவங்களால், நானும் இக்குணம் கொண்டவானாய் மாறுவேனோ? பயமாய் இருக்கிறது... நாமெல்லாம் சிலுவையின் அன்பை போதிக்கிறவர்களும் கேட்பவர்களும்தானா? இந்த முன் மாதிரிதான் ஆண்டவர் நம்மில் எதிர்பார்க்கிறாரா? இதற்காகத்தான் நீங்கள் உலகின் ஒளி என்றாரா? நாம் ஓளிக்கு சாட்சி கொடுக்கிறோமா இல்லை??????  இதை எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன், ஆனால் இதை எனக்கு எச்சரிக்கையாக எழுதிக் கொள்கிறேன்..  அவர் பார்வைக்கு மறைவானது ஒன்றும் இல்லை..


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews