WORD OF GOD

WORD OF GOD

Monday, July 22, 2013

கடவுளே, உம்மிடம் சில கேள்விகள், ??????

கடவுளே, உம்மிடம் சில கேள்விகள்,

தீமை செய்வோரை கண்டால், என் உள்ளம் பதைக்கிறது.. நீர் ஏன் பொறுமை காக்கிறீர்???

ஆலயத்தினுள் உட்கார்ந்து பொய்யும், புரட்டும், பேசுவோரை கண்டால், என்னால் சகிக்க இயலவில்லை நீர் எப்படி சகிக்கிறீர்???

பணம், பதவி, புகழ், போன்ற உழைத்து, காத்திருந்து, தகுதியடைந்த பின், தேடி வரவேண்டிய நன்மைகளை அடுத்தவரை, ஒழித்து, ஒடுக்கி, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, பிடுங்கும் வஞ்சகரை கண்டால் என் நரம்புகள் துடிக்கிறது நீர் ஏன் அமைதி காக்கிறீர்???

நாவு வரங்கள், சுகமாக்கும் வரங்கள், மற்றெல்லா ஆவியின் வரங்கள், தீர்க்கதரிசனம், விசுவாசம், நம்பிக்கை, இவை அனைத்தை காட்டிலும் மேலானது அன்பே என்று நீரே எடுத்துரைத்தபின்னும், அரக்கத்தனமாய் அடுத்தவன் வாழ்வை கெடுக்கும் குரூர மிருகங்களாய் வாழும் கிறிஸ்தவர்களை கண்டால், கண்டிக்க முடியா புழுவாய் நான் துடிக்கிறேன்.. நீரோ என்ன செய்கிறீர்???

தீமை செய்வோர் பரலோகம் செல்வதில்லைதான் ஆனால், இங்கே அவர்கள் ஆதிக்கம் செலுத்தலாமா?

தேவாலயத்தில் வியாபரம் கூடாதென சாட்டை எடுத்தீர், தேவாலயத்தை கள்ளதனத்தின் கோபுரமாக மாற்றும் கயவர்களை கண்டும் மறு கன்னத்தை காட்டி நிற்கிறீரே ஏன்??

மனந்திரும்புவார்க்ள் என்றா?

இல்லையே? மனந்திருமபுதலுக்கான ஞானஸ்னானம் பெற்றவர்கள் தானே??? இன்னும் என்ன கருணை?

ஓ உமது அன்பின் மேன்மையா???

ஒரு பிள்ளையை வயிற்றில் அடித்து இன்னொரு பிள்ளை சுகமாய் வாழ்வதை கண்டால் எங்கள் வீட்டு தாய்மார்களே பொறுப்பதில்லையே, நீர் என் தாயிலும் மேலானவர் அல்லவா? ஒருவனை அழித்து மற்றவன் வாழ அவன் நித்தியம் பெற காத்திருப்பது நீதி தானோ, பரவயில்லை, நானும் யோக்கியனில்லை, ஆனால் செய்த தவறுக்கு தக்க பலன் தர மறுக்கிறீரே அது என்ன நியாயம், இது அன்பா???

இன்னும் கேட்பேன்..... ஆனால் தாவிது மனந்திரும்பிய பின்னும் அவன் பிள்ளையை அடித்தவர் நீர்.. அதை பாவத்தின் பலன் என்பதை அறிந்து உணர்ந்தவன் தாவீது உணராதவர்கள் நாங்கள் நீர் என்ன செய்வீர்..

மன்னியும் இறைவா........ நீர் நல்லவரே... நீர் தடுத்தும், கண்டித்தும், தண்டித்தும், உணரா மண்ணாய் நாங்கள் இருந்தால் நீர் என்னதான் செய்ய முடியும்?????? முடியும் அவரால் எல்லாம் முடியும் ஆம் இதோ 7 ம் சங்கீதம் கொண்டு எனக்கு பதில் கொடுத்து என்னையும் தீவிரித்து கொடும்பாவம் புரியும் யாவரையும் எச்சரிக்கிறீர்....

சங்கீதம். 7 ம் அதிகாரம்

12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

13. அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.

14. இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.

15. குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

16. அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.

ஆமென்.. ஆமேன்... ஆமேன்.... இது என் கோபமல்ல... கடவுளின் கோபம்....



கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews