WORD OF GOD

WORD OF GOD

Thursday, June 2, 2011

நடத்திக் காட்டுவோம்.




அன்பான எனதருமை உடன் விசுவாசிகளே, கடந்த 30  ம் தேதி ஜெபியுங்கள் என்ற தலைப்பில், இந்த இணையதள ஊழியம் வாயிலாக, சிறுவர் ஊழியம் துவங்க இருப்பதாக தெரிவித்து உங்கள் ஜெபங்களையும் ஆலோசனைகளையும் கேட்டிருந்தேன். இந்த ஊழியத்தை துவங்க முடியுமா? இதை
தொடர்ந்து நடத்த வாய்ப்பு கிடைக்குமா? என்னால் இது சாத்தியம்தானா?  இவையெல்லாம்  எப்படி நடக்கும் என்று பல கேள்விகள் என்னுள் நேற்றுவரை இருந்தது. நேற்று நான் இந்த ஊழியத்தில் பயன்படுத்த போகிற சகோதரர்களை அழைத்து பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தேன் அப்போதுகூட மனதளவில் நான் பயந்துக் கொண்டுதானிருந்தேன்.

சகோதரர்கள் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு, வீட்டிற்கு வந்து ஒரு ஜெபக் கூட்டத்திற்கு ஆயத்தமானேன், அதற்காக பிரசங்கம் செய்ய திருவசனங்களை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது  லூக்கா1:37  ல் உள்ள வசனம் என் குழப்பத்திற்கு மிக தெளிவான பதிலை தந்தது. அந்த வசனம், கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதே. மரியாள், தான் கற்பவதியாகப் போகிற செய்தியை கேட்டு, இது எப்படியாகும் என்று கேட்டபோது தேவதூதன் சொன்ன பதில்தான் இது.


அன்பானவர்களே எவ்வளவு பெரிய உண்மை, நம்மால் உண்மையில் இந்த உலகில் ஒன்றையும் செய்ய முடியாது, ஆனால் நம்மைக் கொண்டு இவ்வுலகில் எல்லாவற்றையும் நடத்திக் காட்டுகிற கிறிஸ்து நம்மோடிருக்கிறார், அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். என் குழப்பம் தீர்ந்தது இதோ நான் ஆயத்தமாகிவிட்டேன். வரும் சனிக்கிழமை வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லத்தில் நமது  ஊழியத்தின் சார்பாக
சிறுவர் கொண்டாட்டம் என்ற சிறுவர்களுக்கான ஆவிக்குரிய
நிகழ்ச்சியை துவங்க
போகிறோம். உங்கள் வாழ்விலேயும் சந்தேகத்தோடு இருக்காதீர் காரணம் நம்மை நடத்துபவர் எல்லாவற்றையும் நம்மைக் கொண்டு  நடத்திக் காட்டுவார். தொடர்ந்து விசுவாச பயணத்தில் துணிவோடு நடப்போம். ஜெபித்து ஆலோசனைகளால் இந்த ஊழியத்தை தாங்குங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews