WORD OF GOD

WORD OF GOD

Monday, June 13, 2011

பெந்தேகோஸ்தே திருநாள்

அன்பான எனதருமை உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள். நேற்று நமது திருச்சபை வரலாற்றில் மிக முக்கியமான நாள். பெந்தேகோஸ்தே திருநாள். இது யூதர்களின் நன்றி செலுத்தும் பண்டிகை, இந்த நாள் நமக்கு ஏன் முக்கியமான நாள் என்றால், இன்றுதான் பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகில் அக்கினி மயமாய் இறங்கினார்.

பரிசுத்தாவியானவர் யார்?
நம்முடைய ஆண்டவர் கடைசியாக இவ்வுலகை விட்டு பரலோகத்திற்கு போகும் முன் கூறிய விஷயம், யுக முடிவுபரியந்தம், நான் உங்களோடு இருப்பேன் என்பதே, ஆனால் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார். காரணம் அவர் போனால் தான் பரிசுத்தாவியானவர் வருவார் என்று சொன்னார், அதன் படி அவர் பரத்துக்கு ஏறிய 10  வது நாள்  ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்டார்.  அதாவது அவர் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது ஆவியானவர் இருக்கிறார். அப்படியானால் அவர் யார்? கிறிஸ்து இருக்கும் இடத்தில் அவருக்கு இணையான அதிகாரத்தோடு இருப்பவர். கிறிஸ்து யாருக்கு இணையானவர் பிதாவுக்கு இணையானவர். அப்படியானால் ஆவியானவர் பிதாவுக்கு இணையானவர். குழம்பி விட்டீர்களா. பதில் மிகவும் சுலபம் அவர் கடவுள், இதை  புரிந்துக் கொள்ள இவ்வளவு சொல்ல வேண்டியுள்ளது.

யாருக்கெல்லாம் அவர் சொந்தமானவர்?
யோவேல்.2 :28 -29  ல் ஆவியானவர் யாருக்கெல்லாம் சொந்தமாக போகிறார் என்று குறிப்பிடுகிறார், மாம்சமான யாவர் மேலும்  ஊற்றப்படுவார். உங்கள் குமாரர், குமாரத்திகள், உங்கள் மூப்பர், உங்கள் வாலிபர் ஆவியின் வரங்களை பெறுவர் என்றும், உங்கள் ஊழியர், ஊழியக்காரிகளும் அந்த அனுபவம் பெறுவார்கள் என்று கூறுகிறார். அப்படியானால், அவர் கிறிஸ்துவை விசுவாசிக்கிற குழந்தைகள், வாலிபர், முதியோர் என எல்லாருக்கும் சொந்தமாக இருக்கிறார். (1கொரிந்தியர்.12:4 )

பரிசுத்தாவியானவரின் பணி என்ன?
அப்போஸ்தலர்.1 :8  ல் யேசுகிறிஸ்து கூருகிறார், பரிசுத்தாவியானவர் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேம், யூதேயா, சமாரியா, பூமியின் கடைசிபரியந்தம் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். அதன்படி. பரிசுத்தாவியானவரின் பணி என்ன? நம்மை பலப்படுத்தி, வரங்களால் நிறைத்து, அவருக்கு சாட்சிகளாய் வாழ வழிநடத்துவதே அவரது பணியாக இருக்கிறது.

அன்பானவர்களே நீங்கள் இயேசுவை ஆண்டவரென்று நம்புகிறீர்களா? மெய்யான கடவுள் என்று விசுவாசிக்கிறீர்களா? ஞானஸ்நானம் பெற்று ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்களா? நீங்கள் பெலனுள்ளவர்கள், வரங்களால் நிறைந்தவர்கள். வாழ்வின் அத்துணை பிரச்சினைகளையும் வென்று அவருக்கு சாட்சியாய் வாழும் வல்லமை ஆவியானவரால் உங்களுக்குள் இருக்கிறது. அதை உணர்ந்திருக்கிறீர்களா? பிரச்சினை வந்தால் ஐயோ அவ்வளவுதான் என்று மூலையில் முடங்கவேண்டியவர்கள் நாமல்ல.... நாம் பரிசுத்தாவியை பெற்றவர்கள். நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews