WORD OF GOD

WORD OF GOD

Wednesday, January 26, 2011

காலை மன்னா 26.01.2011

அன்பானவர்களே இன்றைய காலை மன்னாவை எனது நண்பரும், போதகருமான அருள் திரு மில்டன் அவர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்கிறார். அவருக்கு என் நன்றிகள். மறக்காமல் கருத்திடுங்கள்

ஏசாயா.43 :18 -19

உலக இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள், அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். சுதந்திர இந்தியாவை நாமே ஆளும்படி குடியரசு இந்தியாவை நாம் உருவாக்கியுள்ளோம். இங்கே விடுதலை என்ற வார்த்தைக்கு அர்த்தம் நமக்குத் தெரியும், அடிமைக்குத்தான், விடுதலையின் ஆழம் தெரியும்.

கடவுள் இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, தன் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பாபிலோனிய சிறையில் இருந்து விடுதலை தந்தார்.

வசனம்.18

பழைய காரியங்களை நினைக்க வேண்டாம். நமது வாழ்வில் ஏற்பட்ட பழைய நிகழ்வுகளை நினைத்தால், நமக்கு வரபோகிற புதிய வாழ்வுகூட கசந்து போகும். பழைய வாழ்வை நினைக்க வேண்டாம். அதை நினைத்தால் துன்பமும் துயரமும் நம்மை தொடர்ந்து வரும்.

வசனம்.19

இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன்  . நீங்கள் அதை நம்பவில்லையா? என்று கடவுள் நம்மிடம் கேள்வி கேட்கிறார். பல நேரங்களில் நாமும், நம்பிக்கை இழந்து விடுகிறோம். உதாரணமாக பேதுரு, இயேசுவைப் போல் கடல் மீது நடக்க முயற்ச்சித்தார், கொந்தளிக்கும் கடலை பார்த்த உடனேயே பயந்து பொய் நம்பிக்கை இழந்து போனார், ஆனாலும் இயேசு ஓடி வந்து தூக்கி நம்மை மீட்டு வாழ்வு தருகிறார், நம்பிக்கை ஊட்டுகிறார்.

இங்கே நமக்கு ஆண்டவர் சொல்லுகிறார், நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்திரவேளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன், என்கிறார்.

ஆண்டவர் நமக்கு இந்த ஆண்டு நல்ல வழியை உண்டாக்குவார், புதிய பாதை காட்டுவார், பாதைக் காட்டும் மா யெகோவா அவர். திக்கு திசை தெரியாமல் நீ குழம்பி போனாலும், நான் உன்னை வழி நடத்துவேன் என்கிறார். அவாந்திரவேளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்,

பாலை நிலத்திலே, தண்ணீர் இல்லாத இடங்களில் தண்ணீரை நான் உண்டாக்குவேன் என்கிறார். நம் ஆண்டவரால் கூடாத காரியம் இல்லை, இந்த வருடம் நம்முடைய தாகங்களைத் தீர்க்க, அவரே ஜீவ  நதியாய் பாலைவனம் போன்ற  நம் வாழ்வில் வருகிறார்  அவரை பருகி, நாம் தாகம் தீர்ப்போம், இந்த ஆண்டு நம்முடைய தாகத்தை அவர் தீர்ப்பார். எந்த பிரச்சனை என்றாலும் அவரிடம்  வாருங்கள், வழியை உண்டாக்குவார், புதிய காரியத்தை செய்கிறார், தாகம் தீர்ப்பார், நம் இந்திய தேச திரு நாட்டில் குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிற நாம் ஒற்றுமையாக, ஒரு தாயின் பிள்ளையாக வாழ்வோம். நாம் மொழி, இனம், ஜாதி, மதம், கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றால் பிரிந்து வாழ்கிறோம்.

ஆனால், நாம் அனைவரும் இந்தியர்கள், உடன்பிறவா சகோதர சகோதரிகள் நாம், ஒருவரையொருவர் மதிப்போம், மதங்களை மதிப்போம், உணர்வுகளை மதிப்போம், temple , church , mosque , இவை ஆறு  எழுத்துக்கள், Bible , Quran , Geeta , இவை ஐந்து  எழுத்துக்கள் ஒற்றுமையை பாருங்கள், எழுத்துக்களே  ஒற்றுமையாக  இருக்கும்போது நாமும் ஒற்றுமையாக வாழ்வோம்.

மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், பிரிவினை, இல்லாத சாதி, மதம், இனம், மொழி, போன்ற பிரிவினைகள் களைந்து இந்த சுதந்திர  இந்தியாவில், புது வாழ்வு வாழ்வோம். குடியரசு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம், கடவுள்   நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. மில்டன் அருண்ராஜ் BA BTh

1 comment:

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews