WORD OF GOD

WORD OF GOD

Thursday, January 27, 2011

காலை மன்னா 27.01.2011

எனதருமை ஆண்டவருடைய பிள்ளைகளே உங்கள் யாவருக்கும் எனது காலை நேர
ஸ்தோத்திரங்கள். இந்த நாளின் காலையில் நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை,   உபாகமம் . 33-27

 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.



இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடவுளுடைய பலத்தினால் விடுதலையாக்கி, பாலும் தேனும் ஓடுகிற கானானை நெருங்கிக்கொண்டிருக்கிற நேரத்தில், மோசே தன் இறுதிக்காலத்தை நெருங்கி விட்டார்,

தன் மரணத்தை உணர்ந்த மோசே இஸ்ரவேல் மக்களை அழைத்து ஆசீர்வாதமாய் கூறுகிற வார்த்தைகளே 33 வது அதிகாரம். காரணம் மோசே இல்லாமல் கானானை நோக்கி நடக்கிற துணிச்சல் இஸ்ரவேல் மக்களுக்கு இல்லை. பொறுமையாகவும், வல்லமையாகவும், தைரியமாகவும், கடவுளுடைய  பெலத்தினாலும் மிக சிறப்பாக வழி நடத்தி வந்த தலைவர் இனி நம்மோடு வரமாட்டார் என்பது இஸ்ரவேல் மக்களை அசைக்க கூடிய செய்தி.

தங்கள் தைரியத்தையும், விசுவாசத்தையும் இழந்துப் போகக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது, மோசேவை விட சிறந்த தலைவனை அந்த நேரத்தில் அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. எனவே  அவர்களை அழைத்து, அவர்களை தைரியமூட்டுகிற வசனங்களில் ஒரு வசனம் தான் நம்முடைய தியானப் பகுதி.

இந்த வசனத்தில் மோசே கூறுகிற செய்தி, தேவன் உனக்கு அடைக்கலம், அவருடைய புயம் உனக்கு ஆதாரம், அதாவது இதுவரை இஸ்ரவேலர்களை பாதுகாக்கும் அடைக்கலமாக இருந்தது நானல்ல கடவுள் என்கிறார், மாத்திரமல்ல, உங்களை மழையிலும், வெயிலிலும் ,  குளிரிளுமிருந்தும், எதிகரிளினால் உண்டான பயங்கர ஆபத்துகளிலிருந்தும் உங்களை விடுதலையாக்கி வழி நடத்தியது நானல்ல வல்லமையுள்ள கடவுளின் தோள்களே இதை செய்தது என்கிறார்.

தொடர்ந்து அவரே உனக்கு முன் சென்று உன்னை நடத்துவார் என்றும், உன் சத்துருக்களை துரத்துவார்  என்றும் மிக தெளிவாக இஸ்ரவேலர்களை தைரிய படுத்துகிறார், காரணம் நடத்துபவர் கடவுள். மோசேவை  நம்பியல்ல அவரை நம்பி போங்கள் என்று  உற்ச்சாகப்படுத்துகின்றார் .

நம்முடைய வாழ்விலும் இந்த உலகத்தின் ஆபத்துக்களிலும், தீவினைகளிலும் நம்மை பாதுகாத்து நடத்துகிற சக்தி அவர் ஒருவருக்கு மாத்திரமே உண்டு.

எனவே ஒன்றை மாத்திரம் நாம் மறந்துவிடக்கூடாது நாம் எங்கே  இருந்தாலும், எங்கே வாழ்ந்தாலும், எங்கே பயணமானாலும், எத்தனை சவால்கள் நம்மை சுற்றி இருந்தாலும், அவர் நமக்கு அடைக்கலமாகவும், அவருடைய புயங்கள் நமக்கு ஆதாரமாகவும் இருக்கிறது மாத்திரமல்ல அவர் நமக்கு முன் நின்று நம்மை வழி நடத்தி நமக்கு வருகிற சத்துருக்களை துரத்துகிற சக்தியை நமக்கு தருகிறார்,  யேசுகிறிஸ்து இந்த உலகத்தை விட்டு போகும்போது, சொன்ன வார்த்தைகள் இதோ யுக முடிவுபரியந்தம் நான் உன்னுடனே இருக்கிறேன் என்பது தானே.

தைரியமாய் இந்த நாளை துவங்குவோ௦ம்  அவரது, புயமும், பாதுகாப்பும், வழிநடத்தலும் நமக்கு துணையாக இருக்கிறது ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews