WORD OF GOD

WORD OF GOD

Saturday, January 15, 2011

காலை மன்னா

அன்புள்ள சகோதரர்களே காலை வணக்கங்கள் ஏசாயா.43 :5  ன் வழியாக கடவுள் கூறுகிறார் பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.

ஒவ்வொரு காலையை துவங்குவதும் பெரிய சவாலாக உள்ளது  காரணம், போட்டி பொறாமை நிறைந்த உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மை நிலை நிறுத்திக்கொள்ள தினந்தோறும் போராட வேண்டியுள்ளது, உதவி செய்யவோ  துக்கிவிடவோ ஆள் இல்லாமல் தவிக்கிறோம், உண்மையான அன்புள்ள நண்பர்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறோம்.

எந்த நாள் எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். நன்மைகளையும் நல்லவர்களையும் தேடி தேடி அலுத்து போன வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் இந்த காலை வேளையில் கடவுள் நம்மோடு பேசுகிற வார்த்தை நான் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே என்பதே. இந்த முழு உலகையும் படைத்த நம் கடவுள் இன்று நமக்கு துணையாக இருக்கிறார். பயப்படாதே என்று தைரியமுட்டுகிறார்.

இந்த நாளில் நம்முடைய அத்துணை நிகழ்வுகளிலும் அவர் நம்மோடு   இருந்து நம்மை பாதுகாக்க போகிறார். அந்த முழு நிறைவோடு இந்த நாளை நாம் துவங்க கடவுள் நம்மை ஆசிர்வதிப்பாராக ஆமென்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews