WORD OF GOD

WORD OF GOD

Saturday, January 22, 2011

காலை மன்னா 22.01.2011



தள நண்பர்களுக்கும், உடன் விசுவாசிகளுக்கும் அதிகாலை ஸ்தோத்திரங்கள். ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்  உங்களை வாழ்த்துகிறேன். இந்த காலை வேளையில் உங்களோடு நான் பகிர்ந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை, உபாகமம்.28 :11

" உனக்கு கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்கு பரிபூரண நன்மை உண்டாக கட்டளையிடுவார் ."

உபாகமம் 28 ம் அதிகாரம் ஆசீர்வாதத்தின் அதிகாரம். கடவுளை நம்புகிற ஜனத்தை எப்படியெல்லாம்  ஆசீர்வாதிக்கிறார் என்பதை, இந்த அதிகாரம் முழுவதும் காணலாம். குறிப்பாக நம் தியானப்பகுதியில் ஒட்டு மொத்த ஆசீர்வாதங்களையும் ஒரே வசனத்தில் குறிப்பிடுகின்றார்.

பொதுவாக ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாக மூன்று தேவைகளை குறிப்பிடுவோம், 1.உணவு, 2. உடை,  3 .உறைவிடம் . இந்த  மூன்றிற்காகதான்  எல்லா மனிதரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.  நம் தியான பகுதியும் கடவுள் நமக்கு தருகிற மூன்று பரிபூரண ஆசீர்வாதங்களை குறிப்பிடுகிறது.

1 .உன் கர்ப்பத்தின் கனி:
கடவுளை நம்புகிற அவருடைய ஜனத்தின் கர்ப்பத்தின் கனிகளை அவர் ஆசீர்வதிக்கிறார்.  நாம் வாழும் உலகில் பிள்ளைகளை பற்றிய பயம் தான் நம்மில் மேலோங்கியுள்ளது. அவர்கள் பாதுகாப்பு, கல்வி, எதிர்காலம் என ஒவ்வொன்றையும் பற்றி கலங்கி தவிக்கிறோம், ஆனால் இந்த காலையில் இறைவன் கூறுகிறார் நம் கர்ப்பத்தின் கனி பரிபூரனப்படும், அதாவது ஒரு குறையும் இல்லாமல் நமது பிள்ளைகள் வளர்ந்து செழிப்பார்கள்.

2 .மிருக ஜீவன்களின் பலன்.
பொதுவாக பழைய ஏற்பாட்டு  காலத்தில், ஒரு மனிதனின் சொத்துக்கள் அவனுடைய மிருக ஜீவன்களை வைத்துதான் கணக்கிடப்படும், அப்படியானால் கடவுள் நம் உடைமைகளையும் (சொத்துக்களையும்) பரிபூரனப்படுத்துகிறார்.

3 .நிலத்தின் கனி
நிலத்தின் கனி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார், நிலத்தின் கனி என்பது சாதாரண வார்த்தை போல் தான் தோன்றுகிறது, ஆனால் அது சாதாரண ஆசீர்வாதம் அல்ல. காரணம் ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாக நாம் மேலே கண்ட  மூன்று தேவைகளுமே, நிலத்தில் இருந்து கிடைப்பவைதான், எனவே அவைகளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் ஜீவனைக் கொண்டு நம்மை மீட்டு புதிய இஸ்ரவேலர்களாய்  நம்மை மீட்ட கடவுள், அடிப்படை தேவைகளை மட்டும் நமக்கு பரிபூரணமாய் தருகிறவறல்ல வாழ்வுக்கு தேவையான அத்துணை நன்மைகளையும் குறைவில்லாமல் தருகிறவர் எனவே தைரியமாய் வாழ்ந்து இறைவனின் நல்லாசி பெறுவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்.
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

1 comment:

  1. Greeting in the name Jesus to all specially to Rev. Gilbert pastor. The dialy message is very nice i am realy happy about the ministries.

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews