WORD OF GOD

WORD OF GOD

Friday, January 28, 2011

காலை மன்னா 28.01.2011




உடன் விசுவாசிகளுக்கு காலை நேர வாழ்த்துக்கள். இன்றைய தியான வசனம் பிலிப்பியர் .4 :4

 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

பவுல் பிலிப்பு திருச்சபைக்கு எழுதிய இந்த நிருபத்தில் அவர் வலியுறுத்துகிற பிரதான உபதேசம், சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்பதே, எனவே இந்த நிரூபத்திற்கு சந்தோஷ நிரூபம் என்ற பெயரும் உண்டு.

எப்பொழுதும் சந்தோஷமாய்  இருக்க வேண்டும் என்று கூறுகிறார், உண்மையில் ஒரு மனிதனால் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்க முடியுமா?  அழ ஒரு காலம் சிரிக்க ஒரு காலம் உண்டு என்று பிரசங்கி கூறுகிறாரே அப்படி இருக்கும்போது எப்போதுமே சிரித்து மகிழ்கிற வாழ்க்கை சாத்தியமாகுமா?

துன்பங்களும் துயரங்களும், போராட்டங்களும் நிறைந்த இந்த வாழ்வில், தினந்தோறும் எதிர்ப்புகளின் மத்தியில் நன்மைகளை தேடி ஓடிக்கொண்டிருக்கிற வாழ்வில் எப்படி நம்மால் சந்தோஷமாய் இருக்க முடியுமா? ஆனால் பவுல் சந்தோஷமாய்  இருங்கள் என்று கூறுகிறார்.  பவுல் எப்போதுமே இப்படி சாத்தியமே இல்லாத விஷயங்களை பற்றியே பேசுகிறாரே  என்ற சந்தேகம் அவர் நிரூபங்களை படிக்கிற நம் அத்தனை பேருக்குமே தோன்றும்.

ஆனால் பவுல் கூறுகிற எந்த விஷயங்களும் சாத்தியமில்லாத விஷயங்கள் இல்லை காரணம். இவை பவுலின் வார்த்தைகள் இல்லை நம்மை உண்டாக்கி வாழ்வித்து, கிறிஸ்துவைக் கொண்டு நம்மை மீட்ட சர்வ வல்லவரின் வார்த்தைகள். எப்படி எல்லா நேரத்திலும் சந்தோஷமாய் இருக்க முடியும் என்பதையும் பவுல் கற்றுத் தருகிறார்.

6 ம் வசனத்தில் உங்கள் வேண்டுதல்களை  எல்லாம் கவலை படாமல் இறைவனுக்கு தெரியப்படுத்துங்கள் அப்பொழுது தேவ சமாதானம் உங்களை ஆட்கொள்ளும் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். 

நம்முடைய போராட்ட வாழ்வில் சந்தோஷமாய்   வாழ்வது சிரமம் தான் ஆனால்  துக்கத்தை சந்தோஷமாய்  மாற்றுகிற இறைவனிடம் நம் வேண்டுதலை சொல்லிவிடும்போது அவர் பார்ர்த்துக் கொள்கிறார். உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்  என்று நம்மை தாங்குபவர் அல்லவா அவர்,

எனவே நம் விண்ணப்பங்களை கிறிஸ்துவின் மூலமாய் இறைவனுக்கு தெரியப்படுத்தி, இந்த காலையை சந்தோஷமாய் தைரியமாய்  துவங்குவோம்.. சந்தோஷமும், சந்தோஷ பொலிவும் நம் முகத்தில் தெரிய தக்கதாய் நம் பணிகளை துவங்குவோம்.

கிறிஸ்துவின் பணியில்,
அருள்திரு.கில்பர்ட் ஆசிர்வாதம்.

1 comment:

  1. Praise the lord . Rev.Gilbert its really superb .this website definitely very useful for spiritual life. Your massages like (KAALAI MANNAA,VIDIYALAI NOKKI ) really mannaa . I wish all the best Pastor and family members.
    Best Wish
    D.Mary Kethalin
    St. Mark Lutheran Church , Vinnamangalam.

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews